search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கண்ணூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற பிளஸ்-2 மாணவி: 53 வயது தொழிலாளி கைது
    X

    கண்ணூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற பிளஸ்-2 மாணவி: 53 வயது தொழிலாளி கைது

    • மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
    • கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.

    கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர். அவர்கள் அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×