search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV"

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் உள் அறைக்குச் சென்றது.
    • தகவலறிந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச் சென்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது. அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.

    சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
    • தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
    • மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
    • ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார். 

    மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    • இசக்கிதுரை வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.
    • மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச்சென்றது சி.சி.டி.வி.யில் தெரியவந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.

    கடந்த 30-ந்தேதி மேய்ச்சலுக்காக சென்ற இசக்கிதுரை மாடுகள் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய அப்பகுதி யில் அமைக்கப் பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, கடந்த 30-ந்தேதி நள்ளிரவு மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரை யின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச் சென்றது தெரியவந்தது.

    மாட்டை தினமும் பழகுவது போல கொண்டு செல்வதால் இவர் மாடு வளர்ப்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்து, சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • சாகுல் ஹமீது வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார்.
    • பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் காமராஜர் பூங்கா எதிரே காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (49) என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது.

    பூட்டு உடைப்பு

    அவர் நேற்று காலையில் வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதனுள் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    போலீசில் புகார்

    இது பற்றி சாகுல் ஹமீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பேக்கரி கடையின் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அந்த 2 நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
    • தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
    • புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சி

    இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    5 மாணவர்கள் சிக்கினர்

    அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வலசையூர், சுக்கம்பட்டி பகுதிக்கு 126 நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
    அயோத்தியாபட்டணம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தை அடுத்த வீராணம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வலசையூர், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை, குற்றச் சம்பவங்களை தடுக்க 126 நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    இதன் பயன்பாட்டை, வலசையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மாநகர போலீஸ்  கமிஷனர்  நஜ்மல் ஹோடா தொடங்கி வைத்தார். 

    தொடர்ந்து பேசிய கமிஷனர் ஒரு கேமரா 100 போலீசாருக்கு சமம். கேமராவுக்கு உணவு, தூக்கம், ஓய்வு கிடையாது. கேமரா மூலம் கண்டறியும் குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் மாடசாமி, மேகன் ராஜ் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வரசி பழனிவேல், சபரிநாதன் (ஏ)சங்கர்,  நரசுஸ்காபி இயக்குனர், கிறிஸ்துவ கலை, அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
    ×