என் மலர்
நீங்கள் தேடியது "CCTV"
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
- அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
- காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டி வந்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை எதிரே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்து சிதறிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சிக்னல் அருகே கார் வந்து நிற்பது, பின்னர் வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கார் வெடித்து சிதறும் போது கடுமையான தீப்பிழம்பு காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. கார் வெடித்து சிதறிய போது சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதனால் 13 பேர் பலியாகி உள்ளனர்.
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
- இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
- தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை ஆட்டோவில் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .
பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் ஓட்டுநர் ஆட்டோவை நிற்காமல் வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஆட்டோவில் பின்னால் சிக்கி பெண் போலீஸ் அதிகாரி இழுத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பின்னர் அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீஸ் அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது காயமடைந்து பாக்யஸ்ரீ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சதீஷ் சவுகான் என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
- நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சதீஷ் சவுகான் என்பவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் உயிருக்கு பயந்து, கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.
பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கேமரா பொருந்திய ஹெல்மெட் உடன் அவர் பயணித்து வருகிறார்.
இது தொடர்பாக பேசிய சதீஷ், "எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய போலீசார், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.
- துப்பாக்கியைக் காட்டி, நகை கடைக்காரரை கொள்ளைக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
- ல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியைக் காட்டி, கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை கொள்ளைக்காரர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
- கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானாவில் சாலையில் வைத்து, கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத், தனது 22 வயது மனைவி ஷபானா பர்வீனை குடும்பத்தகராறு காரணமாக கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவில், பஸ்ரத் தனது மனைவியை நோக்கி ஓடி வந்து தரையில் தள்ளுவதைக் காண முடிந்தது. இதனால் மனைவி நிலைகுலைந்து கீழே விழுகிறார்.
அதன் பின் அவர் தனது மனைவியை செங்கற்களால் கொலைவெறியுடன் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதலுக்கு பின் கணவர் தனது பைக்கில் அவ்விடத்தை விட்டுச் சென்றார் .
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுவரை, பஸ்ரத் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
- பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர்.
பெங்களூருவில் ஒரு பெண் இரவில் வெறிச்சோடிய தெருவில் நடந்து சென்றபோது மர்ம நபரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் தனது பெண் தோழியுடன் மங்கலான வெளிச்சம் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்து செல்லும் போது, மர்ம நபர் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.
திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர். பின் பயத்தில் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் நேற்று இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
- கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.






