என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு: தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஆசாமி - அதிர்ச்சி வீடியோ
    X

    பெங்களூரு: தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஆசாமி - அதிர்ச்சி வீடியோ

    • திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
    • பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர்.

    பெங்களூருவில் ஒரு பெண் இரவில் வெறிச்சோடிய தெருவில் நடந்து சென்றபோது மர்ம நபரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் தனது பெண் தோழியுடன் மங்கலான வெளிச்சம் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்து செல்லும் போது, மர்ம நபர் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.

    திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர். பின் பயத்தில் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.

    இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் நேற்று இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×