என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Krishnagiri"
- ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
- இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.
பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பழமையான பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சவுந்தரர்யவல்லி தாயார் சமேதய ஸ்ரீ பேட்டராய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி), ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலிக்கிறார்.
தென் திசையில் ஸ்ரீ சவுந்தர்யவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளார்.
ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சாமி, சீதாலட்சுமண சமேத ஸ்ரீ ராமபிரான், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் மற்றும் மலைக்குகையில் ஸ்ரீ கஜலட்சுமி நரசிம்மர் சந்நதிகளும் உள்ளன.
ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
இதனால் இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.
சகல தீவினைகளையும் போக்கி நல்ல சுகபோகங்களையும் அள்ளித் தருகிறார்.
இக்கோவிலின் பிரகாரம் 235 அடி அகலம் உள்ளவை.
தெற்கு மதிலின் நீளம் 204 அடியாகும். கிழக்கு மதிலின் நீளம் 244 அடியாகும்.
கோவிலின் தலைவாசல் கிழக்கு திசையை நோக்கி உள்ளது.
எம்பெருமான் திருப்பதி கோவிலில் உள்ளபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் முக்கியமான நான்கு திவ்ய தேசங்களான கோவில் ஸ்ரீரங்கம், திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில் (காஞ்சி), திருநாராயணபுரம் (மேல்கோட்டை) ஆகும்.
இந்த நான்கு திவ்ய தேச சம்பந்தமும் ஒருங்கிணைந்த ஒரே சேத்திரம் டெங்கனிபுரம் ஆகும்.
இக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்யும் பூஜைகளை போலவும்பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகளும் ஆராதனைகளும் இங்கு பெருமாளுக்கு ஏக்கார்த்தி, கும்பார்த்தி, தேரார்த்தி ஆகிய ஆரத்திகள் எடுக்கின்றனர்.
இந்த ஆகம பூஜைகள் பரம்பரையாக நடந்து வருகிறது.
இக்கோயிலில் மூலவர் திருமலை வேங்கடவன் வேட்டையாடி வந்து நின்ற கோலத்தில் நிலைத்துள்ளார்.
உற்சவ மூர்த்தியாக காஞ்சிபுரம் வரதராஜர் பேட்டராய சுவாமியாக அருள் பாலிக்கிறார்.
திருநாராயபுரம் ஆயி சாமிகள் மங்கலாசனம் செய்து மணவாள மாமுனிகளை சந்தித்த சேத்திரம்.
இங்கு உகாதிபண்டிகை (தெலுங்கு வருட பிறப்பு) ஆன பின் 11 நாட்களில் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
தேர்த் திருவிழாவிற்கு முன்பு கருட பிரதிஷ்டை நடைபெறும்.
அப்போது குழந்தை இல்லாதவர்கள் சுவாமியை மனம் உருகி வேண்டி பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இதனால் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியின் போது ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் வாங்குவது பரம்பரையாக நடந்து வருகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், 3,74,397 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 2,86,831 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 16 ஆயிரத்து 253 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காருண்யா 8 ஆயிரத்து 558 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கணேசகுமார் 5 ஆயிரத்து 446 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.
அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.
இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி பிரிவு சாலையில் சுரேஷ் குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தர்மபுரி அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 39), அவரது நண்பர் அன்பழகன் (40) என்பது தெரியவந்தது. பைனான்ஸ் நடத்தி வரும் பஞ்சாட்சரம் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், உரிய ஆவண் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் அறிவித்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்தை தடுக்கும் வகையில் அரூர் தொகுதியில் திப்பம்பட்டி கூட்ரோடு, ஆண்டியூர், அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று இருமத்தூர் அருகே பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, நாவலன், ரவிகுமார், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மினிடோர் வாகனத்தை சோதனை செய்ததில் சித்தன் கொட்டாயை சேர்ந்த கணேசன் (30) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 73 ஆயிரத்து 900 பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் பட்டுகூடு விற்பனை செய்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆர்.டி.ஒ. புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே கும்மளாபுரம் சோதனை சாவடியில், வாகன சோதனை அலுவலர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், காவலர் அனிதா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உலிவீரனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 950 பணம் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளியிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமரேசன்(30), அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சத்யராஜ்(27), அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனி(37) ஆகியோர் ஒரே பைக்கில் வந்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக, ஆடுகளை ஏற்றி வந்த லாரி மீது சத்யராஜ் மற்றும் பழனி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் சத்யராஜ் மறறும் பழனி பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.
மேலும் ஆடுகளை ஏற்றி வந்த லாரியும் நிலை தடுமாறி தலைகீழாக ரோட்டில் கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் குமரேசன், கிளினர் அய்யர், லாரியில் பயணம் செய்த கோவிந்தராஜ் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். லாரியில் இருந்த ஆடுகள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சுமார 50 ஆடுகள் உயிரிழந்தன.
இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீஸார், உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேர்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யராஜ் மற்றும் பழனி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி கிளினர் அய்யர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குமரேசன் மற்றும் கோவிந்தராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரோடுகளில் சிதறி கிடந்த ஆடுகளை, விபத்துக்குள்ளான லாரியுடன் பின்னால் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியில் வந்தவர்கள் அதில் ஏற்றி சென்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நந்தீஷ்-சுவாதி ஆணவப்படுகொலைக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி நேற்று ராம்நகர் அண்ணாசிலையருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜெய்பீம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
“விடுதலை சிறுத்தைகள் கட்சி. சாதி, ஆணவக் கொலையை வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆணவக்கொலைக்கு பின்னால் கூலிப்படை உள்ளதா, அல்லது ஏதாவது கட்சி இருக்கிறதா என்று பொறுப்புணர்வுடன் விசாரிக்க வேண்டும். தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இல்லாததால், இந்த ஆணவப்படுகொலையை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு, வன்கொடுமை சட்டத்தில் என்ன உதவி செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்ய வேண்டும். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்த ஆணவ கொலை சம்பவத்தில் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பாதுகாப்பாக வெளியே உள்ளனர். அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து, வழக்கு முடியும் வரை, ஜாமீனில் வெளிவராதவாறு, சிறையில் வைத்திருக்க வேண்டும்’’.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். #HonourKilling
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.
நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார். #KamalHaasan