என் மலர்
நீங்கள் தேடியது "கேஆர்எஸ் அணை"
- கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
- தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1410 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவான அணையில் 44.28 அடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அப்படியே தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக நேராக கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணைக்கு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வினாடிக்கு 3,571 கனஅடி தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது.
- மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது.
தருமபுரி:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது. இதன்காரணமாக குடகு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடியது.
தற்போது பெய்த கனமழை காரணமாக மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 82 அடி காணப்பட்டது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 13ஆயிரத்து 449 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மழை சற்று குறைவாக பெய்ததன் காரணமாக இன்று காலை சற்று குறைந்து 11 ஆயிரத்து 695 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து இன்று 289 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 2266.40 அடியாக உள்ளது.
இதில் அணைக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 580 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை சற்று குறைந்து 13 ஆயிரத்து 453 கனஅடியாக சரிந்து வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு இன்று 500 கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.
இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மொத்தம் 789 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் திறப்பால், பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான இருந்த நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக உயர்ந்தது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று குறைந்து 400 கனஅடியாக சரிந்தது.
தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
- முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம்.
தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
- காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.
- மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
- காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் தலைகாவிரி அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. பின்னர் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. பின்னர் அங்கு இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி 124.80அடிஉயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.66 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3526 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதே போல் கபினி அணையிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 1359 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது. மீத முள்ள 20 ஏரிகளில் 75 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு ஏரியில் 50 சதவீதமும், 3 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. அணை, ஏரிகள் நிரம்பியதால் கோடை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






