search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnaraja Sagar Dam"

    • தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.

    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.

    இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

    2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
    #CauveryWater #MetturDam
    ×