search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabini Dam"

    • அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
    • கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

    அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவு
    • காவிரியில் நேற்றை அளவைவிட இன்று அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

    காவிரி மேலாண்மை வாரியம் செப்டம்பர் 12-ந்தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கருதிய போதிலும், உத்தரவை பின்பற்றும் வகையில் நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதை காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணையில் இருந்து நேற்று 6398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 9279 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    முதலில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது போதிய மழையின்மை காரணத்தினால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவ்வளது நீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு அரசுகளும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கார்நாடகா சார்பில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்துவது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில மோதல் இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது கார்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.

    விவசாயி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், அணைகளின் நீர் இருப்புகள் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று காவிரில் நீர் வரத்து அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4200 கனஅடியாக இருந்து நீர்வரத்து 6300 அடியாக அதிகரித்திருந்தது.

    • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர்அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடக அணைகளில் இருந்து இன்று 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆறு வழியாக தமிழகத்தை அடைகிறது.

    மேட்டூர்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் அந்த அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 24,286 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.

    இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

    2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
    #CauveryWater #MetturDam
    கடந்த 15 நாட்களுக்கு மேலாக மேட்டூர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. #MetturDam

    மேட்டூர்:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

    தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

    பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.

    இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #Cauvery #KRSDam #KabiniDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் உடுப்பி, குடகு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகள் கடந்த 2 மாதத்தில் 2 முறை முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. குடகு, வயநாடு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 530 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 69,583 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர் கபிலா ஆற்றில் செல்கிறது. இதனால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காவிரி மூலமாகவும், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா மூலமாகவும் திரிவேணி சங்கமம் பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 113 கனஅடி நீர் காவிரியில் சென்றது. நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 2.04 லட்சம் கனஅடிநீர் தமிழகத்துக்கு சென்றது.



    குடகு மாவட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மடிகேரி தாலுகாவில் கிராமங்களை ஒட்டிய மலைப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரம், பாறாங்கற்கள், மண் ஆகியவை குடியிருப்புகளில் விழுந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மக்கந்தூர் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதால் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இன்றி பரிதவித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. தொடர் மழை, பனிப்பொழிவு, மண்சரிவு காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பலர் தங்களது குடும்பத்தினரை காணவில்லை என்று கூறினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குடகுக்கு நேற்று வந்தனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்வாரில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 70 பேரும், மங்களூருவில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 80 பேரும் குடகு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Cauvery #KRSDam #KabiniDam

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. #Cauvery #KRS #KabiniDam
    மண்டியா:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தமிழ்நாடு மேட்டூரில் உள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.




    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்தது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வந்தது. நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,009 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,541 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அந்த சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 16,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,209 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25,595 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #Cauvery #KRS #KabiniDam
    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #KRSDam #KabiniDam #Cauvery
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் கடந்த 19-ந்தேதி இரவு முழுகொள்ளளவை எட்டின. இதைதொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் (முழுகொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 123.33 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 49,893 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 42,524 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,282.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 28,022 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அதேவேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 27,033 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 68,277 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  #KRSDam #KabiniDam #Cauvery
    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகலில் 96 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வந்தவண்ணம் உள்ளது.

    84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 38 ஆயிரத்து 289 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதேபோல 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 122.4 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 71 ஆயிரத்து 964 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 81 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் தமிழகத் திற்கு சீறிப்பாய்ந்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2 மடங்கைவிட அதிகரித்ததால் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையின் இருபுறங்களையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த பல மாதங்களாக வறண்டுபோய் வெறும் பாறைகளாக காட்சி அளித்த ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் புதுவெள்ளம் செந்நிறத்தில் பாறைகளை மூழ்கடித்து செல்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை தெரியாத அளவிற்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது. தினமும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் 9-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை காவிரி கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் சத்திரம், மாறுகொட்டாய், ஆத்தூர், நாகமறை, நெருப்பூர், பண்ணவாடி ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தண்டோரா மூலமும் தொடர்ந்துபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

    ஒகேனக்கல் அருவி பக்கம் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் தீயணைப்பு துறையினரும் வருவாய்த்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்தவண்ணம் உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

    நேற்று காலை 87.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.73 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 96 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 1 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து 100 மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் 19-ந் தேதி (வியாழக்கிழமை) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிடுகிறார். இதில் அமைச்சர்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    கடந்த ஆண்டு தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் முழுமையாக தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    மேட்டூர் அணை வரலாற்றில் குறிப்பிட்ட நாட்களில் தண்ணீர் திறந்தது 15 ஆண்டுகள் மட்டும் தான். ஆனால் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு பிறகே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விவசாயிகள் மனதில் பால் வார்க்கும் விதமாக கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே குறுவை சாகுபடிக்கான காலம் முடிவடைந்த நிலையில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பின்பே சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்க முடியும். தற்போது திறக்கும் நீர் குறுவை, சம்பா சாகுபடிக்கு பயன்படாது. அந்த நீரை டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களில் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சம்பா சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். ஆனால் நடப்பாண்டு தற்போது தான் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தாமதமாக தூர்வாரும் பணி தொடங்கி உள்ளதல் மேட்டூர் அணையில் இருந்து 19-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாதது மட்டுமின்றி ஏரி, குளங்களிலும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ×