search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabini Dam"

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த 2 அணைகளும் நிரம்பியதை அடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70ஆயிரம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

    கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33ஆயிரத்து 241 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11ஆயிரத்து 852 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 18ஆயிரத்து 147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று 50ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 43ஆயிரத்து 147 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1 வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    இதன் காரணமாக வெளியே தெரிந்த நந்தி, கிறிஸ்துவ சிலைகள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 69ஆயிரத்து 117 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 60ஆயிரத்து 771 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 49.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் 100 அடியை தொட்டுவிடும். தற்போது அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.90 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. உள்ளூர் பாசன தேவை மற்றும் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.76 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கபினி, கிருஷ்ண ராஜ சாகர் ஆகிய 2 அணைகளுக்கும் 97 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 47 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படு வதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 6 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மைசூர், குடகு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்து உள்ள கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இந்த அணைக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 697 கன அடியாக இருந்தது.

    இந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 22 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 82.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடந்த 13-ந்தேதி மாலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடியில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்து அணையில் இருந்து தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது.

    இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ் அணை நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 933 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளதால் அந்த அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 579 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. இதனால் நேற்று மாலை 4,500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று முதல் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,013 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,047 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 5054 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் 23ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    • நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடகாவில் கபினி அணையிலிருந்து இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வந்தடைந்தது.

    காலை முதல் 4500 கன அடியாக வந்த நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கபினி அணையிலிருந்து 20,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,260 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.

    • 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3406 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2257 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 257 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது.

    சேலம்:

    கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2507 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 507 கனஅடி தண்ணீர் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நாளை காலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அங்கு இருந்து நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காவிரியில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 13.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,141 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 104.30 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த 2 அணையில் இருந்தும் மொத்தம் விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,341 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,521 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 4,197 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 41.15 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடியாக உயர்ந்தது. அணையில் 12.95 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124,80 உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 8787 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 526 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 78.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 876 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
    • கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

    அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவு
    • காவிரியில் நேற்றை அளவைவிட இன்று அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

    காவிரி மேலாண்மை வாரியம் செப்டம்பர் 12-ந்தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கருதிய போதிலும், உத்தரவை பின்பற்றும் வகையில் நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதை காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணையில் இருந்து நேற்று 6398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 9279 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    முதலில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது போதிய மழையின்மை காரணத்தினால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவ்வளது நீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு அரசுகளும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கார்நாடகா சார்பில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்துவது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில மோதல் இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது கார்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.

    விவசாயி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், அணைகளின் நீர் இருப்புகள் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று காவிரில் நீர் வரத்து அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4200 கனஅடியாக இருந்து நீர்வரத்து 6300 அடியாக அதிகரித்திருந்தது.

    ×