search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy cultivation"

    • நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம்.
    • மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம்.

    ராமநாதபுரம்

    வறட்சி, வெள்ளம், தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதை விவசாயிகளுக்கு ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கான அறிவிப்பை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார்.

    அதில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.361.50 செலுத்த வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப் பீடாக ஏக்கருக்கு ரூ.24,100 வழங்கப்படும். நவம்பவர் 15-ந் தேதி வரை விவ சாயிகள் பதிவு மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நெற்பயிர் போன்று சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் நவம்பவர் 15-ந் தேதி வரை இன்சூரன்ஸ் செய்யலாம்.

    கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு நவம்பர் 30-ந் தேதி வரையும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30-ந் தேதி வரையும், பருத்திக்கு 2024 ஜனவரி 31-ந் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் முன் மொழிவு படிவம், பதிவு படிவம், ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகிய வற்றுடன் பதிவு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும்.
    • எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறுதிட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மே- 2023ம்மாதம்முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 73.70 மி.மீ., நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும். இது சராசரி மழை பொழிவை விட 11.49 மி.மீ., அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 7.11 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 41.37 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன்இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை,மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடையவிவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும், கீழ் பவானி பாசன பகுதிகளானகாங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1331 மெட்ரிக் டன்,காம்ப்ளக்ஸ் 5103 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில்உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும்.
    • விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு பேசிய தாவது:- திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மார்ச் 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 27.40 மி.மீ .நடப்பு 2023- ம்ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 34.52 மி.மீ., ஆகும். இது சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிறபயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 26.09 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 6.63 மெட்ரிக் டன்,பயிறு வகை பயிறுகள் 28.10 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள்1.13 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவ சாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும் கீழ் பவானி பாசன பகுதிகளான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்க ப்படவுள்ளது.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பா ஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1919 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1499 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4378 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 620 மெட்ரிக்டன் அளவு இருப்பில் உள்ள தென கலெக்டர் தெரி வித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டனர். முந்தைய கூட்ட ங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மனுதா ரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலு வலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்பீம் , திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் லட்சுமணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை கலெக்டர்கள் உட்பட அனைத்து த்துறை அலு வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் ஊராட்சியில், மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மாணவி கே.பரிமளா விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பற்றியும், அதன் பயன்பாடு மற்றும் செயல்முறை பற்றியும் விளக்கம் அளித்தார். இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
    • பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜாகிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார். நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.

    இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.

    இந்த தொழி ல்நுட்ப த்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவா கவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார். அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

    இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்தினையும் அதிகப்படுத்தி உள்ள தாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

    • 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை சராசரியாக 229.90மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அமராவதி அணையில் இருந்து நீர்வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். கீழ்பவானி பாசன பகுதிகளான காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. யூரியா, பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1,896 டன்னும், டி.ஏ.பி. 839 டன்னும், காம்ப்ளக்ஸ் 4,491 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 629 டன்னும் இருப்பில் உள்ளது என்றார். மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன.

    கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட வருவாய் அதிகாரி பால்பிரின்ஸி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.

    இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

    2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
    #CauveryWater #MetturDam
    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரை வைத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து பாசன பகுதியில் வேளாண் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் 25 ஆயிரத்து 500 ஏக்கரும், காளிங்கராயன் பாசனப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரும் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

    நடப்பாண்டு மழைப் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளது. பவானி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1,650 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுடி பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    இது பற்றி வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மாவட்ட அளவில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இது தவிர வாழை, ஆயிரம் ஹெக்டேர், கரும்பு 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கீழ் பவானி பாசனப் பகுதியில் மீதமுள்ள 14 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடியாகும்.

    இயந்திர முறை நெல் நடவால் நேரம், செலவு, வேலையாட்கள் குறைவு நன்மைகள் உள்ளன. சாதாரண நாற்றங்கால் முறையில் 30 நாட்களுக்கு பின் வயலில் நடவு பணி செய்ய வேண்டும். பாய் முறை நாற்றங்காலால் 15 நாளில் நடவு செய்யலாம்.

    இதன் மூலம் அறுவடை காலம் 15 நாட்கள் குறையும். 5 முதல் 10 சதவீத மகசூல் அதிகரிக்கும். சாதாரண நடவில் ஹெக்டேருக்கு 7 டன் மகசூல் கிடைத்தால், இயந்திர நடவில் கூடுதலாக 1 டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ×