search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தேவையான  அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்
    X

    கோப்புபடம்.

    நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்

    • சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும்.
    • விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு பேசிய தாவது:- திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மார்ச் 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 27.40 மி.மீ .நடப்பு 2023- ம்ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 34.52 மி.மீ., ஆகும். இது சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிறபயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 26.09 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 6.63 மெட்ரிக் டன்,பயிறு வகை பயிறுகள் 28.10 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள்1.13 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவ சாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும் கீழ் பவானி பாசன பகுதிகளான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்க ப்படவுள்ளது.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பா ஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1919 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1499 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4378 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 620 மெட்ரிக்டன் அளவு இருப்பில் உள்ள தென கலெக்டர் தெரி வித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டனர். முந்தைய கூட்ட ங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மனுதா ரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலு வலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்பீம் , திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் லட்சுமணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை கலெக்டர்கள் உட்பட அனைத்து த்துறை அலு வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×