search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள், தேவையான அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்
    X

    கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சி அரங்கினை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்ட காட்சி. 

    நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள், தேவையான அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்

    • நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும்.
    • எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறுதிட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மே- 2023ம்மாதம்முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 73.70 மி.மீ., நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும். இது சராசரி மழை பொழிவை விட 11.49 மி.மீ., அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 7.11 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 41.37 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன்இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை,மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடையவிவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும், கீழ் பவானி பாசன பகுதிகளானகாங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1331 மெட்ரிக் டன்,காம்ப்ளக்ஸ் 5103 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில்உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×