search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலா
    X

    நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் அத்திவெட்டி கிராமத்திற்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலா

    • இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
    • பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜாகிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார். நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.

    இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.

    இந்த தொழி ல்நுட்ப த்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவா கவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார். அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

    இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்தினையும் அதிகப்படுத்தி உள்ள தாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

    Next Story
    ×