search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase"

    • தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று மதியம் முதல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 1000 கனஅடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
    • ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.




     


    முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.


     



    நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.

    ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.

    இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது. 

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, தொடர்ந்து கடந்த 20 நாட்களாக வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து தற்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நேற்று வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    • இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.
    • சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கிறது. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து சுமார் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும்போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் கம்மங்கூழ் மற்றும் ஜூஸ் கடைகள் அதிகளவில் உருவாகி வருகிறது.

    ஈரோட்டில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே கம்மங்கூழ் கடைகள் இருந்தது. ஆனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகளவில் கம்மங்கூழ் மற்றும் ராகி கூழ் அருந்தி வருகிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் கூழ் செய்து அருந்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூழ்கள் தேவை அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகரில் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் 10-க்கு மேற்பட்ட கடைகள் வியாபாரிகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ஏராளமான மக்கள் வந்து கம்மங்கூழ் வாங்கி பருகி வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, சத்தி ரோடு, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, வீரப்பன்சத்திரம், ரெயில் நிலையம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கம்மங்கூழ் கடைகள் வழக்கத்தை விட அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஈரோடு மூலப்பட்டறை அருகே வ.உ.சி. பார்க் பகுதி, சேலம் ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் கம்மங்கூழ் கடைகள் அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் 1 கடை மட்டுமே இருந்தது. தற்போது அங்கு பல கடைகள் உருவாகி உள்ளது. அங்கு கம்மங்கூழ், ராகி கூழ், மோர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிகரித்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சிறிய சந்துகள் உள்பட எங்கு பார்த்தாலும் கம்மங்கூழ் கடைகள் உள்ளது. இதனால் கம்மங்கூழ் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சாத்துக்குடி, தர்பூசணி உள்பட நீர் சத்துள்ள பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் ஈரோட்டில் கரும்பு ஜூஸ் கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் மக்கள் அதிகளவு வந்து கரும்பு ஜூஸ்களை பருகி வருகிறார்கள்.

    • தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • கடைசி கட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதனால் சென்னையில் இருந்து மும்பை, அந்தமான், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அதிகரித்து உள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் இருந்து கோவா, மும்பை, கொல்கத்தா, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. விமானத்தில் சென்றால் பயண நேரம் குறைவு என்பதால் அதிகமானோர் விமான பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாதத்திற்கான விமானடிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து உள்ள நிலையில் கடைசிகட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.10ஆயிரத்து200, கோவா-ரூ.4500-ரூ.5200, மும்பை ரூ.4700-ரூ.7ஆயிரம் , ஜெய்ப்பூர்-ரூ.10ஆயிரத்து 200, ஸ்ரீநகர்-ரூ.12ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம், கொல்கத்தா-ரூ.6,700-ரூ.9ஆயிரம், கொச்சி-ரூ.3,200-ரூ.8ஆயிரம் வரை கட்டணமாக உள்ளது.இதேபோல் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், தூத்துக்குடிக்கு ரூ.6200 முதல் ரூ.8 ஆயிரம் வரையும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

    • குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    கோடை வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சென்னை மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான விமான பயண திட்டங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

    அவர்கள், பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சுற்றுலா பயணம் செல்ல மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்களுடைய பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

    இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன.

    நீண்டநாட்கள் சுற்றுலா பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் செர்ரி பூக்கள் பூக்கும் மாதம் என்பதால் ஜப்பான், தென்கொரியாவுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதே போல் சவுதி அரேபியா செல்லவும் அதிகமானோர் விரும்புகிறார்கள்.

    குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தியாவிற்குள் அந்த மான், ஸ்ரீநகர், மணாலி, டார்ஜிலிங், கோவா, பூரி, ரிஷிகேஷ், கொடைக்கானல், முசோரி, லட்சத்தீவு மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்ல அதிகமான பயணிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் விமான கட்டணம் மே மாத மத்தியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு ரூ.14ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வைரையும், பாங்காங்-ரூ.25ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை, சிங்கப்பூர்-ரூ.20ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, துபாய்-ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்து 800 வரை, டெல்லி-ரூ.13ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை, கோவா-ரூ.7900 முதல் ரூ.26 ஆயிரம் வரை, லட்சத்தீவு-ரூ.23, 500, அந்தமான்-ரூ.13ஆயிரம் முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சுற்றுலா விமானடிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கோடைகால விடுமுறை பயணத்திட்டங்களை சற்று தள்ளி வைத்து உள்ளனர். மே மாத முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் 2-வது வாரம் வரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் தினமும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    மேலும் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல, பலர் விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளன.

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
    • வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கையில் பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். வழக்கும் தொடரப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ரூ.1 லட்சம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் அவருடன் இருக்கும் வேட்பாளர் ரூ.50 ஆயிரம்தான் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளனர். சிறிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம். பெரிய மாநிலங்களில் ரூ.95 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம்.

    சட்டசபை தேர்தல் என்றால் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், வாகன செலவுகள் அனைத்தும் இந்த வரம்பிற்குள் அடங்க வேண்டும்.

    வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். செலவு கணக்குகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

    வேட்பாளர்கள் தினசரி செலவினங்களுக்காக தனி பதிவேட்டை பராமரிப்பதுடன், ஒவ்வொரு நாளும் தேர்தல் அதிகாரிக்கு விரிவான அறிக்கைகளை வழங்க வேண்டும். அந்த பதிவேட்டில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பிற பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகள், வீடியோ பதிவுகள் ஆகியவை ஆதாரமாக இருக்க வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்கும் பிரசார நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவுகள் வேட்பாளர் மற்றும் பிரசாரகர் இடையே பிரிக்கப்படலாம். எடுத்துக் காட்டாக, ஒரு வேட்பாளர் நட்சத்திர பிரசாரம் செய்பவருடன் பயணம் செய்தால் அல்லது அவரது பெயரையும் படத்தையும் கேமராவில் வைத்திருந்தால் செலவுகள் பிரிக்கப்படும்.

    1951-52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், வேட்பாளர்களின் செலவு அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம். வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில், பெரும்பாலான மாநிலங்களுக்கான செலவுத் தொகை ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டது. 1980-ல் ஒரு வேட்பாளருக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.

    • 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.
    • கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தற்போது தலா 9 பறக்கும் படை குழுக்கள், தலா 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைகளின் படி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதலாக தலா 3 பறக்கும் படை குழு க்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய வை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.
    • தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    ஓகேனக்கல்:

    கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா மக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு வினாடிக்கு 150 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்கின்றன. 

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×