search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ex-servicemen"

    • தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    மேசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் மற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாவட்டம் முழுவதும் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி, துணைச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரமேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • முன்னாள் படைவீரர்கள், தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது/
    • அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர் களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நாளை (28ந்தேதி) காலை 11 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள், படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு-குறைதீர் கூட்டம் நடந்தது.
    • இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் கருத்தரங்கு-குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    முன்னதாக நடக்கும் கருத்தரங்கில் சுயதொழில்களுக்கு வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலு வலர்கள் உரையாற்ற வுள்ளார்கள். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    அதனைத்தொடர்ந்து, நடைபெற உள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரரின் குடும்பத்தி னர்கள் தங்களது குறைக ளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
    • குறைகளை விண்ணப்பம் வாயிலாக முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 20-ல் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் 2.30 மணியளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக (இரட்டைப் பிரதிகளில்) முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி மையம், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், டெக்ஸ்கோ உதவி மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயிற்சிகள் மற்றும் உதவிகள் போன்றவை பற்றி சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
    • தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முப்படை நலத்துறை இயக்குனர் சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ, மாணவி களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குதல், இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள், சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த உதவிகளை பெற புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதி யுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், விதவை கள் விண்ணப்பத்தை முப்படை நலத்துறையில் வரும் 19-ந் தேதி முதல் ஜூலை 28-ந் தேதி வரை அடையாள அட்டையின் அலுவல கத்துக்கு வந்து நேரில் பெறலாம்.

    இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். காரைக்கால், மாகே, ஏனாமில் பிராந்தியங்களில் கலெக்டர் அலுவலகம், மண்டல நிர்வாக அலுவலத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முகாமில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மிலிட்டரி கேண்டீன் முதுநிலை மேலாளர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கேண்டீன் மேலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஷிபா மருத்துவமனையின் சிறப்பு பிரிவு டாக்டர்கள் பயாஸ், பிரியதர்ஷினி, அகம்மது யூசுப், பாலா, சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முன்னதாக ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி பேசுகையில், முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான முதல் பாலி கிளினிக் நெல்லையில் தொட ங்கப்பட்டு அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு ஷிபா மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ சேவை ஷிபா மருத்துவமனை சார்பில் தொடர்ந்து செயல்படு த்தப்படும் என்று கூறினார்.

    முகாமில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் செல்லப்பாண்டி, செயலாளர் செல்லத்துரை, துணைத்தலைவர் வெள்ளத்துரை, பொரு ளாளர் மோகன்ராம், மருத்துவமனை மேலாளர் சுதர்ஷன், மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ, ஜானகி ராம், சுரேஷ், வீரக்குமார், ராதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நலச்சங்க ஒருங்கி ணை ப்பாளர் தேவ துணை செய் திருந்தார்.

    • தஞ்சையில் நாளை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை ) மாலை 4 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-3-2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • சிவகங்கையில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 15 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய பதிலினை தெரிவிக்கும்படியும், அக்கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அம்மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்விற்குட்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் 35 முன்னாள் படைவீரர்களுக்கு திருமண மானியம், கண்கண்ணாடி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.6,74,900-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர்

    விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    எனவே முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் ‌‌.

    இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×