என் மலர்
நீங்கள் தேடியது "Shiba Hospital"
- உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
- கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும்.
நெல்லை:
உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகமது ஷாபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் ஷபீக், உமா மகேஸ்வரன், முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையின் வயிறு, குடல் நோய் நிபுணர் கந்தசாமி என்ற குமார் கூறுகையில், கல்லீரல் நோயினால் இந்தியாவின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய தகவலாகும். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும். வருடத்திற்கு ஒருமுறை கல்லீரல் பரிசோதனை மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து கல்லீரலை பாதிக்கும் செயலை செய்வதில்லை என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சுதர்சன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ ஜெபா, ராதாகிருஷ்ணன், வீரகுமார், ஜானகிராமன், சுரேஷ், பாலா மற்றும் பலர் செய்திருந்தனர்.
- முகாமில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது.
- முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மிலிட்டரி கேண்டீன் முதுநிலை மேலாளர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கேண்டீன் மேலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஷிபா மருத்துவமனையின் சிறப்பு பிரிவு டாக்டர்கள் பயாஸ், பிரியதர்ஷினி, அகம்மது யூசுப், பாலா, சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி பேசுகையில், முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான முதல் பாலி கிளினிக் நெல்லையில் தொட ங்கப்பட்டு அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு ஷிபா மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ சேவை ஷிபா மருத்துவமனை சார்பில் தொடர்ந்து செயல்படு த்தப்படும் என்று கூறினார்.
முகாமில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் செல்லப்பாண்டி, செயலாளர் செல்லத்துரை, துணைத்தலைவர் வெள்ளத்துரை, பொரு ளாளர் மோகன்ராம், மருத்துவமனை மேலாளர் சுதர்ஷன், மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ, ஜானகி ராம், சுரேஷ், வீரக்குமார், ராதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நலச்சங்க ஒருங்கி ணை ப்பாளர் தேவ துணை செய் திருந்தார்.
நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில், உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜு முன்னிலை வகித்தார். மருத்துவமனையின் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர் அருண் விஸ்வநாத் தைராய்டு தின சிறப்பு செய்தி வழங்கினார்.
மனித சங்கிலியில் ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஐகிரவுண்ட் அப்துல் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் ஷியாவுல்லா, டவுன் அருண் நர்சிங் ஹோம் சுந்தரலிங்கம் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.






