search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

    • தஞ்சையில் நாளை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை ) மாலை 4 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×