என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம்"

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
    • பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.

    நிறைய உணவுகள் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இப்படி சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பால், பால் சார்ந்த உணவு, கிழங்கு வகைகள் என எத்தனையோ வகை உணவுகள், பிரிவுகள் உள்ளன.

    நிறைந்த சத்து, புரதம் போன்றவை சாப்பிட்ட பிறகு வயிற்றினை நிறைவாக வைக்கின்றது.

    *வைட்டமின்கள், தாது உப்புகள் வழங்குகின்றன.

    * செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.

    * ஆப்பிளின் சத்தினை எல்ேலாரும் அறிவர்.

    * அவகோடா என்பது இன்று மிக பிரபலம் அடைந்து வரும் பழம்.

    * பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.

    * ஆரஞ்சு 'சி' சத்துக்கு பெயர் எடுத்தது.

    * ஸ்ட்ராபெர்ரிஸ் வைட்டமின் 'டி' சத்து நிறைந்து, கலோரி சத்து குறைந்தது.

    * முட்டை-புரதம் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.

    * கொட்டை-விதை பிரிவுகள்

    * பாதாம்-வைட்டமின் ஈ சத்து நிறைந்தது.

    * சியா விதை அடர்சத்து கொண்டது. மங்கனீசு, மக்னீசியம், கால்சியம் சத்துக் கொண்டது.

    * தேங்காய்-கற்பக விருட்சம் தான்

     

    * வால்நட், பிரசிங் கொட்டை

    * குடை மிளகாய்-வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.

    *புரகோலி-நார்சத்தும் வைட்டமின் 'சி' சத்தும் கொண்டது.

    * காரட்டை தினமும் கழுவி தோல் சீவி சாப்பிடலாமே.

    * வெள்ளரி-புத்துணர்ச்சி தரும்.

    * பூண்டு-ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்தது

    * வெங்காயம், தக்காளி காய்கறி வகைகள்

    * கடல் உணவுகள். * முழுதானியம்-அரிசி, தினை, ஓட்ஸ். *பருப்பு வகைகள், பீன்ஸ், வேர்கடலை. * பால், பால் சார்ந்த உணவுகள்

    * ஆலிவ் எண்ணை, தேங் காய் எண்ணை, சர்க்கரை நோயை கடுப்படுத்த உதவும்.

    இந்த அறிகுறிகள் இதனாலும் இருக்கலாம். இதனால் மட்டும் என்று கூறப்படவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்திற்காகவே இது எழுதப்படுகின்றது.

    * காலில் தசை பிடிப்பு போல் ஏற்படுகின்றதா? மக்னீசியம் குறைவாக இருக்கலாம்.

    * மூச்சு வாங்குகின்றதா? நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குகின்றதா? ரத்த சோகை -இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம்.

    * கைகள் சில்லென இருக்கின்றதா? பி12, இரும்பு சத்து குறைபாடும் இத்தகு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    * ஈறுகளில் ரத்த கசிவு என்பது அநேகமாக வைட்டமின் 'டி' சத்து குறைபாடு என்பதனை அநேகர் அறிவர்.

    * கண் பார்வை இரவில் குறைவது போல் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைட்டமின் 'ஏ' சத்து குறைபாடும் இருக்கலாம்.

    * பாதங்கள் மரப்பது போல் இருந்தால் வைட்டமின் 'பி', 'பி6' குறைபாடும் காரணமாக இருக்கலாம். நகங்களில் புள்ளிகள் இருந்தால் 'சிங்க்' சத்து தேவைப்படலாம்.

    கமலி ஸ்ரீபால்


     

    * வாயின் இரு ஓரத்திலும் வெடிப்புகள் இருந்தால் வைட்டமின் 'பி2' சத்து தேவைப் படுகின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.

    * நாக்கு எரிகின்ற மாதிரி இருக்கின்றதா? வைட்டமின் 'பி' குறைபாடு இருக்கலாம்.

    *வாயில் துர்நாற்றம்-பல், ஈறு பிரச்சினையோடு உணவுப் பாதையில் பிரச்சினையும் இருக்கலாம்.

    * சர்க்கரை உணவு மீது அதிக ஈடுபாடு என்பதற்கு மக்னீசியம் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    வாசனை தெரியவில்லை என்றால் மற்ற காரணங்களோடு சிங்க் குறைபாடும் இருக்கலாம்.

    * காலில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக பரிசோதனை அவசியம்.

    * காதில் ஓங்காரம் போல் ஒலி இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.

    * தலைசுற்றல் இருந்தாலும் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளவும். குறைந்த ரத்த அழுத்தம் கூட இருக்கலாம்.

    புரதச்சத்து

    புரதச் சத்து குறைபாடு என்பது அதிகமாக காணப்படும் ஒன்றாகத் தான் உள்ளது.

    * வீக்கம், கொழுப்பு கல்லீரல், தசை வலுவின்மை, முடி, நகம், சரும குறைபாடு, எலும்பு ஆரோக்கியமின்மை, குறைவான வளர்ச்சியின்மை போன்றவை புரதச் சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் சில முக்கியமானவை ஆகும். ஒரு கிலோ எடைக்கு 8 கிராம் புரதம் என ஒரு சாதாரண மனிதனுக்கு அளவீடாக கணக்கிடப்–படுகின்றது. ஒருவர் 60 கிலோ எடை இருக்கின்றார் என்றால் அவருக்கு 58.60 கிராம் புரதம்நாள் ஒன்றுக்கு தேவை என கணக்கிடப்படுகிறது.

    புரதச்சத்து குறைபாடு உடையவர்கள்

    * புரத உணவு, சர்க்கரை உணவு இவற்றில் அதிக விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்.

    * பசி இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

    * உடல் தசைகள் வலுவிழந்து இருக்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    * காயங்கள் ஆறுவதில் கால தாமதம் ஆகும்.

    * கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருந்தால் எப்பொழுதும் சோர்வாகவும், பலமின்றியும் இருப்பர்.

    * எலும்பு முறிவு எளிதில் ஏற்படும்.

    * வீக்கம் இருக்கும்.

    * சருமம், தலைமுடி, நகங்களில் பாதிப்பு இருக்கும்.

    அன்றாட உணவில் முட்டை, பருப்பு, பன்னீர், சோயா, கொட்டை வகைகள், பால், தயிர் என புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.

    • வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
    • வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

    * முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

    * வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

    * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

    * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.

    இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நல்லது. வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

    * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

    * முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

    • அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    டெல்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) இரவு உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு சாலையோர தாபாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உணவில் வெங்காயம் கலந்திருந்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கடை உரிமையாளருடன் வாக்குவாதம் செய்து, அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பக்தர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பழங்கள், வெங்காயம், காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து உள்ளார்கள்.

    வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வைத்துள்ளவர்கள், மளிகை கடை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக வாங்கி திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது திருப்பூருக்கு கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் விற்பனை சூடு பிடிக்கும் என நினைத்த வியாபாரிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

    மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் தரம் வெங்காயம் விலை குறைந்தாலும் அதிகளவில் விற்பனை நடைபெறவில்லை. வடமாநிலங்களில் இருந்து பல லாரிகளில் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சேமித்து வைக்கும் குடோன்களில் வெங்காயங்கள் நிரம்பி வழிந்து மேலும் சேமிக்க இடமில்லாததால் தேக்கம் அடைந்துள்ளது.

    மேலும் பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது. இதன் காரணமாக அழுகும் நிலையில் இருந்த பெரிய வெங்காயங்களை தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையோரம் மூட்டை மூட்டையாக வியாபாரிகள் வேதனையுடன் வீசிச்சென்றனர்.

    மேலும் இருப்பு வைக்க இடமில்லாததால் வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மேலும் பெரிய வெங்காய மூட்டைகள் அழுகுமோ என்ற அச்சத்திலும், கலக்கத்திலும் மொத்த வியாபாரிகள் உள்ளனர்.

    • ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது.
    • வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ஏப்ரல் 1-ந் தேதி முதல் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

    • ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது
    • கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.

    மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.

    ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

    வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.


    ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.

    வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

    வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.

    பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.

    நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

    நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.


    வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.

    நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.

    • தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
    • 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார்.

    ஜோலாப்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.

    மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.

    வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு வெறும் 2 ரூபாயே கிடைத்தது. இந்த விளைவிக்க கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன். இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயி துக்கராமிடம் வெங்காயத்தை வாங்கிய வியாபாரி கலீபா கூறுகையில், "ரசீதுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் செயல்முறையை நாங்கள் கணினி மயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக துக்காராமுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலை கொடுக்கப்பட்டது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெங்காயம் தரம் குறைந்ததாக இருந்தது. இதற்கு முன்பு அவர் 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர்ரக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மற்றொரு முறை அவரது வெங்காயத்துக்கு கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தரம் குறைந்த வெங்காயத்தை கொண்டு வந்ததால் கிலோ 1 ரூபாய்க்கே எடுக்க முடிந்தது" என்றார்.

    • விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.
    • தங்களது வாழ்வாதாரத்தைகாப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு சீசன் காலங்களிலும் வெங்காய விளைச்சல் அதிகமாகி வருகிறது .இதன்காரணமாக விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.

    விளைச்சல் குறைந்தால், விலை அதிகமாகி, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. விளைச்சலுக்கு, நுகர்வுக்கும் இடையே சீரான தன்மை இல்லாததே இதற்கு காரணம்.

    இம்முறை, வெங்காய விளைச்சல் ஓரளவுக்கு இருந்தாலும், விவசாயிகள் வேறு விதமாக பாதிக்கப்பட்டு, கடும் வேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

    அதாவது, பூஞ்சை நோய் காரணமாக, வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகளை கடும் துரயத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி அதகபாடி பகுதி வேளான் வட்டாரத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது.

    முந்தைய அறுவடையில் வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியினை சந்தித்த காரணத்தால், இந்தவருடம் வழக்கத்தைவிட குறைவான நிலப்பரப்பிலேயே வெங்காயம் நடவு செய்துள்ளனர்.

    இவை, தற்போது அறுவடை செய்யப்படுகிறது. முந்தைய அறுவடையில் அதிக விளைச்சலால் விலை வீழ்ச்சியினை சந்தித்த சின்ன வெங்காயம் கேட்பாரற்று கிடந்த நிலையில், இந்த வருடம் நியாயமான விலை கிடைக்கும் என விவசாயிகள் கணித்திருந்தனர்.

    தற்போது சின்ன வெங்காய மகசூல் பெரும் ஆபத்தான கட்டத்தை நோக்கி செல்கிறது. இந்த நோய் தாக்கம் காரணமாக, வெங்காயத்தின் இயல்பான வடிவம் மாறி, மிகுந்த எடையிழப்பு ஏற்படுகிறது. இதனால், போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒரு கிலோ வெங்காயம் தரத்திற்கு ஏற்ப 10 முதல் 15 ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் வாங்கி செல்வதாகவும் பலலட்ச ரூபாய் செலவு செய்து முதலீடு வராததால் வெங்காயத்தை வெட்டாம லேயே கண்ணீரை வரவழைப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    எனவே, அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அதற்கான ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும். தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடியாக களஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், சின்னவெங்காயத்தையும், தங்களது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
    • தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    • வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
    • சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.12 வரை விற்கப்பட்டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை ஆனது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சென்னையில் முக்கிய தெருக்களில் தள்ளுவண்டி மூலம் வியாபாரிகள் பலர் கூவி, கூவி வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து வெங்காய வியாபரிகள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வெங்காயம் உற்பத்தி வழக்கத்தை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.

    ×