என் மலர்
நீங்கள் தேடியது "குடும்ப தகராறு"
- அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர்.
- சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த 1½ வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே விஜய் கத்தியுடன் மறைந்து இருந்தார்.
சரஸ்வதி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் சென்று மனைவியை சரமரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது விஜய் மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.
அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை.
- வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. கடந்த ஆண்டு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது பாலியர் சிங் தனது மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து சுபத்ரா தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் தனது உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்தை கூட்டினார்.
அப்போது ஊர் பெரியவர்கள் சுபத்ராவை அவரது தாய் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி சுபத்ரா தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது கணவர் மனைவி மனமிறங்கி தனது வீட்டிற்கு வருவார் என ஆவலுடன் காத்திருந்தார். மனைவி வராததால் அவரை அழைத்து வர நேற்று முன்தினம் பாலியர் சிங் மாமியார் வீட்டிற்கு சென்றார்.
மருமகன் மீது கடும் கோபத்தில் இருந்த மாமியார் அவரை சரமாரியாக தாக்கினார். பாலியர் சிங் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட சுபத்ராவின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்களும் பாலியர் சிங்கை கண்மூடித்தனமாக தாக்கினார்.
பாலியர் சிங் வலி தாங்க முடியாமல் கதறினாலும் ஒருவர் பின் ஒருவராக தாக்கிக் கொண்டே இருந்தனர்.
பின்னர் அவரை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கினர். விடிய விடிய பாலியர் சிங்கை மின்கம்பத்திலேயே கட்டி வைத்திருந்தனர்.
கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். யாரும் மீட்கவில்லை. சினிமா காட்சியை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலியர் சிங்கை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலியர் சிங்கின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார்.
- வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவரது மனைவி, திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கணவனின் உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.
நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.
இருவரையும் சமாதானம் செய்தனர். வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக வினாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா(வயது36).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்தார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்தார். இதனால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார்.
ரமேஷ் வெளியே சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது மின் விசிறியில் புடவையில் மீனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா...
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நமது நாட்டில் காலங்காலமாக வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. என்னதான் நாம் அறிவியல், தொழில்நுட்பம் ரீதியாக உயர்ந்தாலும் வரதட்சணை கொடுமையால் ஆங்காங்கே பெண்கள் பாதிக்கத்தான் செய்கின்றனர்.
இதனிடையே, கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றும் கணவரை பொறிவைத்து பிடித்தும் மனைவிகள் கணவரை தாக்கும் செயல்களும் நடக்கத்தான் செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரதட்சணை மற்றும் விவகாரத்து கேட்ட கபடி வீரரை குத்துச்சண்டை வீரரான மனைவி அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மேலும் பணம் கேட்டும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என கூறி சித்ரவதை செய்வதாக ஒருவர் காவல்நிலையத்தில் வீடியோவுடன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பார்ப்போம்:-
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் மஞ்சி. 30 வயதான இவர் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். ஹர்ஷிதா ராய்க்வார் என்பவரை வரதட்சணை எதுவும் வாங்காமல் 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே லோகேஷ் கடந்த 20-ந்தேதி காவல்நிலையத்தில் வீடியோவுடன் அளித்த புகாரில்,
என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா... திருமணமானதில் இருந்து ஹர்ஷிதா, லோகேஷ் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ பார்க்கக்கூடாது என்றும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி சித்ரவதை செய்வதாகவும், தனது மனைவியும், மாமியார் மற்றும் மைத்துனர் என்னிடம் பணம் மறறும் நகைகளை கேட்டு வருகின்றனர். போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டுவதாகவும், ஒரு முறை என் மனைவி கொசு மருந்தைக் கூட குடித்துள்ளார். இதனால் நான் மிகவும் பயந்து பதற்றத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், அவர் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பெண் அவரை கொடூரமாகத் தாக்குவதை காண முடிகிறது. மேலும், மற்றொரு பெண்மணி அவளைத் தடுக்க முயன்றாலும், அவள் கேட்கவில்லை. வெறிபிடித்தது போல் அவள் லோகேஷின் முகத்தில் எட்டி உதைக்கிறாள்.
இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு என்ன கொடுமை சரவணா... என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
- திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
- கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.
அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.
கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.
இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார்.
- அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர் (வயது 55). இவரது மனைவி ரியாஸ் பேகம் (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் திருமணம் செய்து கொண்டு விட்டு பிழைப்புக்காக உடையார்பாளையம் வந்து குடியேறி உள்ளனர்.
ஜாபர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இதற்கிடையே மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான ஜாபர் தனது சம்பள பணத்தை மனைவியிடம் கொடுப்பதில்லை.
அத்துடன் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரியாஸ் பேகம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் உடையார்பாளையத்தில் வசித்து வந்தார். அங்கும் சென்ற ஜாபர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் ஜாபர் திருந்தவில்லை.
இந்தநிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் உடையார்பாளையத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜாபர், அவரை உடனே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினார். அதற்கு ரியாஸ் பேகம் மறுத்து விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மாமியார் மற்றும் பிள்ளைகளை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறும், மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜாபர் கூறியதால் அவர்கள் வெளியில் சென்றுவிட்டனர்.
நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார். வெளியில் நிற்கும் தனது தாய்க்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்ற எண்ணத்தில் கணவரின் தாக்குதலை ரியாஸ் பேகம் பொறுத்துக்கொண்டார்.
ஆனாலும் ஆத்திரம் குறையாத ஜாபர், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆட்டை அறுக்கும் கூர்மையான கத்தியால் மனைவி என்றும் பாராமல் ரியாஸ் பேகத்தின் கழுத்தை கொடூரமாக அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரியாஸ் பேகம் ஒரு சில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஆனால் இந்த விஷயம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் மனைவியிடம் பேசுவது போன்று நாடகமாடியுள்ளார்.
மேலும் இறந்து கிடந்த மனைவியின் அருகிலேயே ஒரு பாயை விரித்து அதில் ஜாபர் படுத்துக்கொண்டார். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் ஜாபர், ரியாஸ் பேகம் இருவரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஜாபரின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரியாஸ் பேகம் பிணமாக கிடந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி அவர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ரியாஸ் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவியை கொலை செய்த ஜாபர் நேராக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடையார்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (38).
இவர்களது மகன்கள் ஹரி கிருஷ்ணன்(14), குபேந்திர கிருஷ்ணன் (12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். ஹரிகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், குபேந்திர கிருஷ்ணன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யனார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.
வீட்டில் தனலட்சுமி தனது 2 மகன்களுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன்படி தனலட்சுமி தனது 2 மகன்களுக்கும் விஷத்தை குடிக்க கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் தனலட்சுமி திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அய்யனார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
மனைவி மற்றும் மகன்கள் பிணமாக கிடந்ததை கண்டு அய்யனார் அதிர்ச்சி அடைந்தார். மனைவி மற்றும் மகன்கள் இறந்துவிட்டதால் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை அவர் குடித்து விட்டார்.
நள்ளிரவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அய்யனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததையும், தனலட்சுமி மற்றும் அவரது மகன்கள் பிணமாக கிடந்ததையும் பார்த்த அவர்கள், அது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரமும் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்கள் உயிருக்கு போராடிய அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக அய்யனாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அபாய கட்டத்தை தாண்டியதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
- அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களது மகன் விஜய கிருஷ்ணராஜ் (32). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நந்தினி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதை அடுத்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினிதா (27) என்பவரை விஜய் கிருஷ்ணராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே 2-வது மனைவி வினிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த விஜய கிருஷ்ணராஜ், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வினிதா தனது குழந்தைகளுடன் கருமனூரிலுள்ள வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப சண்டை குறித்து ஏற்கனவே திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மகன், மருமகளை சமரசப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கிய சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தீபாவளி பண்டிகையின்போது கருமானூர் சென்று வினிதாவிடம் பேசியுள்ளனர்.
இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சக்திவேல் கவலை அடைந்தார். மேலும் இருவரையும் அழைத்து பேசி மீண்டும் சேர்த்து வைக்கலாம் என மனைவி கலைச்செல்வியிடம் கூறினார். ஆனால் கலைச்செல்வி மறுத்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் கலைச்செல்வி விசைத்தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் கணவரை சராமாரியாக தாக்கினார். அதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைச்செல்வியை கைது செய்தனர். தொடர்ந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கலைச்செல்வி போலீசாரிடம் கூறியதாவது, எனது மகனும் மருமகளும் பிரிந்து சென்ற நிலையில் எனது கணவர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார். இதில் எனக்கு விருப்பமில்லாததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் இரும்பு ராடால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் கலைச்செல்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீசார் 6 பேர் மீது வழக்கு
- படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி பீச் ரோடை சேர்ந்தவர் பீர் காஜ முகைதீன்.இவரது மனைவி முபீனா (வயது 34).இருவரும் உகண்டாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-ம் அலையில் பீர் காஜ முகைதீன் இறந்து விட்டார். இதற்கு பிறகு முபீனா உகண்டா சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு ஊர் திரும்பி கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் வீட்டில் முபீனா வசிப்பது தொடர்பாக முபீனாவுக்கும் மாமியார் மெகர்பான் பீவிக்குமிடையே தகராறு இருந்து வருவதாக கூறப்ப டுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவ ருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கை கலப்பு ஏற்பட்டது.அவர்கள் இரு தரப்பினராக மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முபீனா, மெகர்பான் பீவி இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இருவ ரும் தனித்தனியாக மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர்.
- குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 30). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர். பிரவீனாவும், அவரது குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் முத்துப்பாண்டி தனது மகள் பிரவீனாவை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீப காலமாக பிரவீனாவுக்கும், மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீனா தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, அந்த சேலையின் மற்றொரு முனையில் தனது கழுத்தை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






