search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murder"

    • தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவரது மனைவி கனகா(வயது 31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள் நீர் காயலில் வசித்து வந்தபடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், பசுவந்தனையை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கனகா வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து தனியார் பஸ்சில் மஞ்சநீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கனகா, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் கனகா அருகே வந்தார். திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கனகாவின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

    இதில் கனகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த பகுதியில் நின்ற பயணிகள் கனகாவை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எப்போதும் வென்றான் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் தற்போது 2-வதாக பஸ் நிறுத்தத்தில் வைத்து தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
    • சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35).

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சின்னமணிக்கும், அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார்.
    • தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.

    இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

    இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.

    இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.

    ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி கிராமம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (38). இவர் பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சேலம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டி பாறைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் முட்புதரில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மாயமான செல்வி என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் தாரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செல்வி குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது செல்வி பூசாரி என்ற முறையில் குமாரிடம் பேசி பழகி உள்ளார்.

    அதே போல் சம்பவத்தன்றும் செல்வி வழக்கம் போல் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது பூசாரி குமார், செல்வியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வி மறுத்து விட்டார். இதுப்பற்றி வெளியே சொன்னால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி செல்வியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி குளிர்பானத்தில் சயனைடு கலந்து செல்விக்கு கொடுத்து உள்ளார். இதை வாங்கி குடித்த செல்வி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசியுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார்.
    • வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

    இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.

    கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
    • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். அழகு கலை நிபுணர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இளம்பெண் குன்னூர் கம்பி சோலையில் வசித்த போது அவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பெயிண்டர் கருணாகரன் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கருணாகரனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

    இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் இங்கேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கருணாகரன் குடிபோதையில் வந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் முகத்தில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கருணாகரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கருணாகரனை தேடி வருகின்றனர்.

    • ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயமாரி (வயது44). எலக்ட்ரீசியன். இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமாரி, சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தியா சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஜெயமாரி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40).

    கடந்த 28-ந்தேதி ஜெகதீஷ்வரி வீட்டில் உள்ள அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்த 5 ¾ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெகதீஷ்வரி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஜெகதீஷ்வரியின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருக்கு கடைசியாக போன் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை சேகரித்து விசாரித்தனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனாலும் போலீசாருக்கு அதில் எந்தவித துப்புமே கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 90 பேரை அழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

    கொலை நடந்து சில நாட்களை கடந்த பின்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கப்படாததால் இளம்பெண் கொலையில் பல்வேறு மர்மங்களும் நீடித்து வந்தது. கொலையாளி யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்த போது சில ஆதாரங்கள் கிடைத்ததுடன், குற்றவாளி தொடர்பான தகவல்களும் கிடைத்தன.

    அதனை கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை கொலை செய்தது, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்தான் கொலை செய்தாரா என்பதை தெரிந்து கொள்ள சில நாட்கள் சாதாரண உடையில் சென்று போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

    அப்போது அவர் தான் கொலை செய்தது என்பது உறுதியாகவே நேற்று மாலை போலீசார் ரேஸ்கோர்சில் வைத்து மோகன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரை பீளேமடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்தேன் என அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    கைதான மோகன்ராஜ் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார். இவர் முதலில் சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    அப்போது, அவருக்கு ஜெகதீஷ்வரியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு போனில் பேசி வந்தனர்.

    மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் 2 வீட்டாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மோகன்ராஜ், சேரன்மாநகர் பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு மாறி வந்து விட்டார். வீடு மாறினாலும், அவர்களது கள்ளக்காதலானது தொடர்ந்தது.

    ஒரு நாள் ஜெகதீஷ்வரி, மோகன்ராஜூக்கு வீடியோ காலில் போன் செய்து பேசியுள்ளார். அப்போது, எனக்கு பணம் வேண்டும். நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் நமது கள்ளக்காதலை உனது மனைவியிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் கள்ளக்காதலர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டவே மோகன்ராஜ், ஜெகதீஷ்வரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு மோகன்ராஜ் புறப்பட்டார். நவ இந்தியா பகுதிக்கு சென்றதும், தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரை தொடர்பு கொண்டு, மொபட்டை எடுத்து வர கூறியுள்ளார். அவரும் எடுத்து சென்று கொடுத்தார்.

    அதனை வாங்கி கொண்டு, மீண்டும் ஜெகதீஷ்வரியின் வீட்டை நோக்கி பயணித்த அவர், செல்லும் வழியில் வண்டியின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு, மற்றொரு நம்பர் பிளேட்டை மாற்றி கொண்டு சென்றார்.

    ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் சென்ற மோகன்ராஜ் 2 மணி நேரம் வரை இருந்துள்ளார். பின்னர் அவரை கொலை செய்து விட்டு, நகைக்காக கொலை நடந்தது போல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த நகைகளை 5 முக்கால் பவுன் நகைகளுடன் தப்பிவிட்டார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த போதும், நவஇந்தியா வரை மொபட்டிலும், அதன் பின்னர் மோட்டார் சைக்கிளிலும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். கொலை செய்த பிறகு அவர் தலைமறைவாகவில்லை. எப்போதும், போல ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு சென்று தனது சூப் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். செல்போனில் இவருடன் பேசியதற்கான ஆதாரங்களும் இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. இதனால் அவரும் தொடர்ந்து தனது வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மொபட்டிலும், மோட்டார்சைக்கிளிலும் சென்றபோது ஒரே சட்டை தான் அவர் அணிந்திருந்தார். கண்காணிப்பு கேமிராக்களில் அவர் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. ஒரே சட்டை அணிந்த நபர் 2 மோட்டார்சைக்கிளில் பயணிப்பது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது தான் குற்றவாளி சிக்கிக் கொண்டார். மொபட்டின் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
    • ஆஸ்பத்திரிக்குள் நோயாளியுடன் இருந்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர்களை தாக்கும் சம்பவம் தொடர்க தையாக நடந்து வருகிறது. இதில் உயிர்ப்பலியும் நிகழ்ந்துள்ளது. இதனால் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த சூழலில் நேற்று மற்றொரு சம்பவமாக தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியைச் சேர்ந்தவர் லிஜி (வயது 40). இவரது தாயார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் அங்கமாலி அருகே மூக்கனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக மகள் லிஜி இருந்தார். அவர் தாயாருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவரை பார்த்ததும் லிஜி ஆத்திரம் அடைந்தார்.

    அந்த நபர், லிஜி அருகே வந்ததும் ஏதோ கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கை கலப்பு ஏற்படும் வகையில் சண்டை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களும், வார்டில் சிகிச்சை பெற்று வந்த மற்றவர்களும் தகராறை விலக்க முயன்றனர். இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தகராறில் ஈடுபட்டவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். அதனுடன் அவர் லிஜி மீது பாய்ந்தார்.

    அவரை மற்றவர்கள் தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர், சரமாரியாக கத்தியால் லிஜியை குத்தினார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாய்ந்தார். அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் லிஜி பரிதாபமாக இறந்தார்.

    ஆஸ்பத்திரிக்குள் நோயாளியுடன் இருந்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவரை கைது செய்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் மகேஷ் (42) என தெரிய வந்தது. அவர் லிஜியின் முன்னாள் நண்பர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏன் லிஜியை குத்திக் கொன்றார். அவர்களுக்குள் என்ன தகராறு? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    கோபி:

    சேலம் சின்னசீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிபேட்டை கோவில் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது லட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் 2-வது கணவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடிவந்தனர்.

    இதற்கிடையே ரகு கோபி செட்டிபாளையம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.

    ×