என் மலர்
நீங்கள் தேடியது "family dispute"
- அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர்.
- சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த 1½ வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே விஜய் கத்தியுடன் மறைந்து இருந்தார்.
சரஸ்வதி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் சென்று மனைவியை சரமரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது விஜய் மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.
அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சங்கீதா, கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக வினாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா(வயது36).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்தார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்தார். இதனால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார்.
ரமேஷ் வெளியே சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது மின் விசிறியில் புடவையில் மீனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா...
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நமது நாட்டில் காலங்காலமாக வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. என்னதான் நாம் அறிவியல், தொழில்நுட்பம் ரீதியாக உயர்ந்தாலும் வரதட்சணை கொடுமையால் ஆங்காங்கே பெண்கள் பாதிக்கத்தான் செய்கின்றனர்.
இதனிடையே, கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றும் கணவரை பொறிவைத்து பிடித்தும் மனைவிகள் கணவரை தாக்கும் செயல்களும் நடக்கத்தான் செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரதட்சணை மற்றும் விவகாரத்து கேட்ட கபடி வீரரை குத்துச்சண்டை வீரரான மனைவி அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மேலும் பணம் கேட்டும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என கூறி சித்ரவதை செய்வதாக ஒருவர் காவல்நிலையத்தில் வீடியோவுடன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பார்ப்போம்:-
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் மஞ்சி. 30 வயதான இவர் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். ஹர்ஷிதா ராய்க்வார் என்பவரை வரதட்சணை எதுவும் வாங்காமல் 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே லோகேஷ் கடந்த 20-ந்தேதி காவல்நிலையத்தில் வீடியோவுடன் அளித்த புகாரில்,
என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா... திருமணமானதில் இருந்து ஹர்ஷிதா, லோகேஷ் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ பார்க்கக்கூடாது என்றும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி சித்ரவதை செய்வதாகவும், தனது மனைவியும், மாமியார் மற்றும் மைத்துனர் என்னிடம் பணம் மறறும் நகைகளை கேட்டு வருகின்றனர். போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டுவதாகவும், ஒரு முறை என் மனைவி கொசு மருந்தைக் கூட குடித்துள்ளார். இதனால் நான் மிகவும் பயந்து பதற்றத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், அவர் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பெண் அவரை கொடூரமாகத் தாக்குவதை காண முடிகிறது. மேலும், மற்றொரு பெண்மணி அவளைத் தடுக்க முயன்றாலும், அவள் கேட்கவில்லை. வெறிபிடித்தது போல் அவள் லோகேஷின் முகத்தில் எட்டி உதைக்கிறாள்.
இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு என்ன கொடுமை சரவணா... என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
- திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
- கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.
அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.
கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.
இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- திண்டிவனத்தில் குடும்பத்தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குடிசை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். வேன் டிரைவர். இவர் திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில்அவரது மனைவியை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டுவீட்டிற்கு குடித்துவிட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் பூமிநாதன் வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சென்றவர் வெளியே வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பூமிநாதன் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கம் உதவியுடன் அறையை உடைத்து பார்த்தார். அப்போது பூமிநாதன் தூக்கில் பிணமாக தொடங்கினார். இது குறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வந்தனர். பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
- அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களது மகன் விஜய கிருஷ்ணராஜ் (32). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நந்தினி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதை அடுத்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினிதா (27) என்பவரை விஜய் கிருஷ்ணராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே 2-வது மனைவி வினிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த விஜய கிருஷ்ணராஜ், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வினிதா தனது குழந்தைகளுடன் கருமனூரிலுள்ள வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப சண்டை குறித்து ஏற்கனவே திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மகன், மருமகளை சமரசப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கிய சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தீபாவளி பண்டிகையின்போது கருமானூர் சென்று வினிதாவிடம் பேசியுள்ளனர்.
இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சக்திவேல் கவலை அடைந்தார். மேலும் இருவரையும் அழைத்து பேசி மீண்டும் சேர்த்து வைக்கலாம் என மனைவி கலைச்செல்வியிடம் கூறினார். ஆனால் கலைச்செல்வி மறுத்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் கலைச்செல்வி விசைத்தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் கணவரை சராமாரியாக தாக்கினார். அதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைச்செல்வியை கைது செய்தனர். தொடர்ந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கலைச்செல்வி போலீசாரிடம் கூறியதாவது, எனது மகனும் மருமகளும் பிரிந்து சென்ற நிலையில் எனது கணவர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார். இதில் எனக்கு விருப்பமில்லாததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் இரும்பு ராடால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் கலைச்செல்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திண்டிவனம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் .இவரது மகள் சங்கீதா (வயது28) என்பவருக்கும், திண்டிவனம் அடுத்த செங்கனிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சிலநாட்களாக சங்கீ தாவிற்கும் செல்வ ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இந்நிலையில் சங்கீதா நேற்று மாலை செங்கனி குப்பத்தில் உள்ள தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வெள்ளிமேடுப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்ககு நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வரதட்சனை கொடுமையால் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர்.
- குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 30). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர். பிரவீனாவும், அவரது குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் முத்துப்பாண்டி தனது மகள் பிரவீனாவை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீப காலமாக பிரவீனாவுக்கும், மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீனா தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, அந்த சேலையின் மற்றொரு முனையில் தனது கழுத்தை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மீனா(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள்(6), முகிஷா முமீனாள்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு மீனாவையும், 2 குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடிப்பார்த்தார். அப்போது அவரது மூத்த மகள் தியா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மிதந்து கொண்டிருந்த தியா உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றில் தேடியபோது அதில் இருந்து மீனாவும், 2-வது மகளான முகிஷாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் மீனா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.
இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






