என் மலர்
நீங்கள் தேடியது "பெண் கொலை"
- காவ்யா, அஜித் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
- காவியாவுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.
இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் (26) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா வீடியோ காலில் பேசினார்.
அப்போது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தார். இதனைப் பார்த்து அஜித்குமார் கடும் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம்.
என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார்.
இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம் எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த வழியாக சென்ற ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர்.
- சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த 1½ வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே விஜய் கத்தியுடன் மறைந்து இருந்தார்.
சரஸ்வதி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் சென்று மனைவியை சரமரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது விஜய் மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.
அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- கடந்த 2 மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர்.இரவது மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபம் அடையும் பிரியா அடிக்கடி பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள புதுப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் சமாதானம் அடைந்து கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தியும் வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக துராப் பள்ளம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது மகள் அங்கு இல்லை. இதுபற்றி மருமகன் சிலம்பரசனிடம் கேட்ட போது பிரியா வெளியில் சென்று விட்டதாக கூறி சமாளித்தார். மேலும் பேரன்களும் தனது தாய் கடந்த 2 மாதமாக வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் தனது மகள் பிரியா மாயமானது குறித்து ஆரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிலம்பரசனிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி இரவு மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக தெரிவித்தார்.
மேலும் உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்து விட்டதாக கூறினார். இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரியா கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோர் வீடான புதுப்பாளையத்திற்கு வந்தார். அங்கு பெற்றோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் பின்னர் நடத்தை சந்தேகத்தில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் தனது மனைவி பிரியாவை கழுத்தை நெரித்து கொன்று உடலை சுடுகாடு அருகே புதைத்து இருப்பது தெரியவந்தது. கடந்த 2 மாதமாக சிலம்பரசன் எதுவும் தெரியாதது போல் சகஜமாக இருந்து உள்ளார்.
அவர் ஒருவரால் உடலை கொண்டு சென்று புதைத்து இருக்க முடியுமா? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பிரியா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்) கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் ஆரம்பாக்கம் போலீசார் உடலை தோண்டி எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி மாவட்டம், புவனகிரி அடுத்த அடகுதூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றார். சங்கர் கூலி வேலையும், மஞ்சுளா வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு நடந்தது. விரக்தி அடைந்த மஞ்சுளா கடந்த 14-ந் தேதி ஐதராபாத் அனுபுரத்தில் உள்ள தனது சகோதரி ராணி வீட்டிற்கு வந்தார்.
சங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை தேடி ராணி வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்து இனி நான் மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதி அளித்தார்.
நேற்று காலை ராணி அவரது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றனர். வீட்டில் சங்கர் மஞ்சுளா அவரது குழந்தைகள் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்த சங்கர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சங்கர் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு தப்பி சென்றார்.
காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஞ்சுளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- விஜயாவின் கணவருடன் வேலை பார்த்து வந்த மோகன் கடைசியாக விஜயா வீட்டுக்கு சென்றதும் பின்னர் அவசரமாக வெளியேறியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா (38). வீட்டிலேயே துணி தைத்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வெல்டிங் தொழிலாளியான நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரில் உள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதே பட்டறையில் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் விஜயா வீட்டில் தனியாக இருந்தார். மதியம் அவரது கணவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பட்டறைக்கு சென்று விட்டார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் தனது துணியை தைக்க கொடுப்பதற்காக விஜயா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் விஜயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகில் கிரைண்டர் குழவி மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள நகை பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் இந்த கொலை பணம் நகைக்காக நடைபெறவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். மோப்பநாய் காவிரி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை.
பவானி டி.எஸ்.பி ரத்தின குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விஜயா வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் விஜயாவின் கணவருடன் பட்டறையில் வேலை பார்த்து வந்த மோகன் (50) கடைசியாக விஜயா வீட்டுக்கு மாலை 3 மணிக்கு சென்றதும் பின்னர் 3.30 மணிக்கு அவர் அவசரமாக வெளியேறியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து போலீசார் உஷார் ஆகி பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன் விஜயாவை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறும் போது,
மோகன் விஜயாவின் கணவர் நாகராஜ் வேலை பார்க்கும் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். விஜயா வீட்டில் துணிகளை தைத்து வந்துள்ளார். அப்போது மோகன் தனது மனைவியின் துணிகளை தைப்பதற்காக விஜயா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதைப்போல் நேற்று மதியமும் சாப்பிட்டு வருவதாக நாகராஜிடம் கூறி விட்டு விஜயா வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜயா ஆத்திரத்தில் மோகன் மீது மிளகாய் பொடியை வீசு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் விஜயாவை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அருவாள்மனையால் அவரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்ய போது மோகன் சட்டையில் இரத்த கறை படிந்தது. பின்னர் மோகன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கால்வாயில் சென்று சட்டையை அலசி விட்டு பின்னர் மீண்டும் பட்டறைக்கு வந்து ஒன்றும் தெரியாது போல் வேலை பார்த்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் என்ன காரணத்துக்காக மோகன் விஜயாவை கொலை செய்தார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் முழுவிவரம் தெரிய வரும் என்றனர்.
- பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் வற்புறுத்தினார்.
- வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
திருப்பதி:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜில் பிகர் அலி (வயது 43). இவர் தெலுங்கானா மாநிலம், சந்திராயங் குட்டாவில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் கட்டிட தொழிலாளியான கேதாவாத் புஜ்ஜி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜில் பிகர் அலியிடம் வற்புறுத்தினார்.
ஜில் பிகர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜில்பிகர் அலி கள்ள உறவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அவரது உடலை படுக்கையில் போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார். வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கேதாவாத் புஜ்ஜி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜில் பிகர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.
நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர்.
- பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர்.
அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால் முகவரிக்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சம்பவத்தன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிய போது, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர். பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பெண்ணுடன் தங்கி இருந்தவர் தலைமறைவாகி உள்ளார். எனவே அவர் தான் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.
எனவே தலைமறைவானவர் சிக்கினால் தான் உண்மையான முகவரி தெரிய வரும். அவர் எங்கு சென்றார்? கொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி தானா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன் விரோதத்தால் ஆத்திரம்
- தந்தை-மகன் கோர்ட்டில் சரண்
வாணியம்பாடி:
ஆலங்காயம் அடுத்த குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் சண்முகம் உறவினர்கள். இவர்கள் 2 பேருக்கும் நில சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சங்கர் மற்றும் சண்முகம் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2 குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன்களான ஜெயமோகன் (39), ரஞ்சித் குமார் ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சங்கர் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் சங்கரின் மனைவி ஜெயந்தி தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்காயம் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சண்முகம் மற்றும் ஜெயமோகனை தேடி வந்தனர். ஜெயந்தி உயிரிழந்ததால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சண்முகம் அவரது மகன் ஜெயமோகன் ஆகியோர் திருப்பத்தூர் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.
- சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.
- காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா (57). இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என 2 மகன்களும், மீனா, வனிதா என 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜா கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார்.
இதையடுத்து சாந்தா தனது 2-வது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். பின்னர் கார்த்திக் பெருந்துறையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
சாந்தாவுக்கும், அவரது மகன் கார்த்திக்குக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சாந்தாவும், கார்த்திக்கும் இரவில் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதிகளில் தங்குவது வழக்கம். இரவில் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள். சாந்தா அவ்வப்போது கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள இளைய மகள் வனிதா வீட்டிற்கு சென்று வருவார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சாந்தா குடிபோதையில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் இரவு 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு வனிதா அவரது கணவர் வேலன் ஆகியோர் கதவை திறந்து வெளியே வந்து கார்த்திக்கிடம் எதற்காக பதட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கார்த்திக் இரவு 10.30 மணி அளவில் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு அம்மா படுத்து தூங்கும் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பார்த்தபோது அம்மாவை காணவில்லை என்றும் சந்தையின் மேற்புறம் பகுதியில் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறினார்.
இதனையடுத்து வனிதா தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காய்கறி சந்தை மேற்பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் சாந்தா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சாந்தா தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். குடிபோதை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார்.
- வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் அனந்தநம்பிக்குறிச்சி வடக்கூரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வள்ளியம்மாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை முடித்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார். இதைப் பார்த்த வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் கத்தியுடன் கூடிய துணிப்பை வைத்து தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றிய முறப்பநாடு போலீசார் கணேசனை கைது செய்தனர்.
- கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.
அப்போது இவருக்கும், அங்கு வேலை பார்த்த சிந்தாமணி கங்காநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






