என் மலர்
நீங்கள் தேடியது "காய்கறிகள்"
- செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
- பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.
நிறைய உணவுகள் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இப்படி சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பால், பால் சார்ந்த உணவு, கிழங்கு வகைகள் என எத்தனையோ வகை உணவுகள், பிரிவுகள் உள்ளன.
நிறைந்த சத்து, புரதம் போன்றவை சாப்பிட்ட பிறகு வயிற்றினை நிறைவாக வைக்கின்றது.
*வைட்டமின்கள், தாது உப்புகள் வழங்குகின்றன.
* செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
* ஆப்பிளின் சத்தினை எல்ேலாரும் அறிவர்.
* அவகோடா என்பது இன்று மிக பிரபலம் அடைந்து வரும் பழம்.
* பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.
* ஆரஞ்சு 'சி' சத்துக்கு பெயர் எடுத்தது.
* ஸ்ட்ராபெர்ரிஸ் வைட்டமின் 'டி' சத்து நிறைந்து, கலோரி சத்து குறைந்தது.
* முட்டை-புரதம் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.
* கொட்டை-விதை பிரிவுகள்
* பாதாம்-வைட்டமின் ஈ சத்து நிறைந்தது.
* சியா விதை அடர்சத்து கொண்டது. மங்கனீசு, மக்னீசியம், கால்சியம் சத்துக் கொண்டது.
* தேங்காய்-கற்பக விருட்சம் தான்

* வால்நட், பிரசிங் கொட்டை
* குடை மிளகாய்-வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.
*புரகோலி-நார்சத்தும் வைட்டமின் 'சி' சத்தும் கொண்டது.
* காரட்டை தினமும் கழுவி தோல் சீவி சாப்பிடலாமே.
* வெள்ளரி-புத்துணர்ச்சி தரும்.
* பூண்டு-ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்தது
* வெங்காயம், தக்காளி காய்கறி வகைகள்
* கடல் உணவுகள். * முழுதானியம்-அரிசி, தினை, ஓட்ஸ். *பருப்பு வகைகள், பீன்ஸ், வேர்கடலை. * பால், பால் சார்ந்த உணவுகள்
* ஆலிவ் எண்ணை, தேங் காய் எண்ணை, சர்க்கரை நோயை கடுப்படுத்த உதவும்.
இந்த அறிகுறிகள் இதனாலும் இருக்கலாம். இதனால் மட்டும் என்று கூறப்படவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்திற்காகவே இது எழுதப்படுகின்றது.
* காலில் தசை பிடிப்பு போல் ஏற்படுகின்றதா? மக்னீசியம் குறைவாக இருக்கலாம்.
* மூச்சு வாங்குகின்றதா? நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குகின்றதா? ரத்த சோகை -இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம்.
* கைகள் சில்லென இருக்கின்றதா? பி12, இரும்பு சத்து குறைபாடும் இத்தகு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.
* ஈறுகளில் ரத்த கசிவு என்பது அநேகமாக வைட்டமின் 'டி' சத்து குறைபாடு என்பதனை அநேகர் அறிவர்.
* கண் பார்வை இரவில் குறைவது போல் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைட்டமின் 'ஏ' சத்து குறைபாடும் இருக்கலாம்.
* பாதங்கள் மரப்பது போல் இருந்தால் வைட்டமின் 'பி', 'பி6' குறைபாடும் காரணமாக இருக்கலாம். நகங்களில் புள்ளிகள் இருந்தால் 'சிங்க்' சத்து தேவைப்படலாம்.

கமலி ஸ்ரீபால்
* வாயின் இரு ஓரத்திலும் வெடிப்புகள் இருந்தால் வைட்டமின் 'பி2' சத்து தேவைப் படுகின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.
* நாக்கு எரிகின்ற மாதிரி இருக்கின்றதா? வைட்டமின் 'பி' குறைபாடு இருக்கலாம்.
*வாயில் துர்நாற்றம்-பல், ஈறு பிரச்சினையோடு உணவுப் பாதையில் பிரச்சினையும் இருக்கலாம்.
* சர்க்கரை உணவு மீது அதிக ஈடுபாடு என்பதற்கு மக்னீசியம் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வாசனை தெரியவில்லை என்றால் மற்ற காரணங்களோடு சிங்க் குறைபாடும் இருக்கலாம்.
* காலில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக பரிசோதனை அவசியம்.
* காதில் ஓங்காரம் போல் ஒலி இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.
* தலைசுற்றல் இருந்தாலும் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளவும். குறைந்த ரத்த அழுத்தம் கூட இருக்கலாம்.
புரதச்சத்து
புரதச் சத்து குறைபாடு என்பது அதிகமாக காணப்படும் ஒன்றாகத் தான் உள்ளது.
* வீக்கம், கொழுப்பு கல்லீரல், தசை வலுவின்மை, முடி, நகம், சரும குறைபாடு, எலும்பு ஆரோக்கியமின்மை, குறைவான வளர்ச்சியின்மை போன்றவை புரதச் சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் சில முக்கியமானவை ஆகும். ஒரு கிலோ எடைக்கு 8 கிராம் புரதம் என ஒரு சாதாரண மனிதனுக்கு அளவீடாக கணக்கிடப்–படுகின்றது. ஒருவர் 60 கிலோ எடை இருக்கின்றார் என்றால் அவருக்கு 58.60 கிராம் புரதம்நாள் ஒன்றுக்கு தேவை என கணக்கிடப்படுகிறது.
புரதச்சத்து குறைபாடு உடையவர்கள்
* புரத உணவு, சர்க்கரை உணவு இவற்றில் அதிக விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்.
* பசி இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
* உடல் தசைகள் வலுவிழந்து இருக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* காயங்கள் ஆறுவதில் கால தாமதம் ஆகும்.
* கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருந்தால் எப்பொழுதும் சோர்வாகவும், பலமின்றியும் இருப்பர்.
* எலும்பு முறிவு எளிதில் ஏற்படும்.
* வீக்கம் இருக்கும்.
* சருமம், தலைமுடி, நகங்களில் பாதிப்பு இருக்கும்.
அன்றாட உணவில் முட்டை, பருப்பு, பன்னீர், சோயா, கொட்டை வகைகள், பால், தயிர் என புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.
- முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
- இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.
- வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ் உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது.
- உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர்.
காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 பேட் ஆசிட்என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது.
உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும். சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நல்லது.
வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ் உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன் உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது.
எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3பேட் ஆசிட் உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தேய்த்து இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தேய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது.
இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 பேட் ஆசிட் உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது.
- 1500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
- தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும்.
6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
இதற்காக பக்தர்கள் இன்று காலையிலிருந்து அரிசி, காய்கறிகளை தானமாக செய்து வருகின்றனர்.
சுமார் 1500 கிலோ அரிசி, சுமார் 1000 கிலோ முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அரிசியை சாதமாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
மேலும் காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு
இன்று மாலை 4.30 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது.
காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.
இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.
அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.
இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
- இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதி களவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள், பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள
11 உழவர் சந்தைகளிலும் இன்று
984 விவசாயிகள், பல்வேறு 651 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 245.805 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 54,393 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும்.
தஞ்சாவூர்:
வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் மாட்டுப்பொங்கல் , காணும் பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பொங்கல் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
பொங்கலன்று பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு சமைப்பது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும்.
இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். தஞ்சையில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உச்சத்தை தொட்டு வருகிறது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்படும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக புதுமணத் தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம்.
இதில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் அடங்கும்.
இதனால் தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பனி காரணமாக காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.
கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதே போல் கத்தரிக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.80, மாங்காய் ரூ.120, அவரை ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.50, மொச்சை ரூ.100, கருணைக்கிழங்கு ரூ.90, சவ்சவ் ரூ.25, கோவைக்காய் ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
விளைச்சல் குறைவாக இருந்ததாலும் வரத்தை குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது.
- கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரத்து குறைவால் ரூ.120 வரை விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து உள்ளது.
கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ,15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை சற்று மந்தமாகவே நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ.9, நாசிக் வெங்காயம்-ரூ.14, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.17, உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.30, அவரைக்காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.20, ஊட்டி கேரட்-ரூ.30, பீன்ஸ்-ரூ.50, பீட்ரூட்-ரூ.20, முட்டைகோஸ்-ரூ.6, சவ்சவ்-ரூ.20, நூக்கல்-ரூ.20, முள்ளங்கி-ரூ.17, காலி பிளவர் ஒன்று-ரூ.25, முருங்கைக் காய்-ரூ.15, பீர்க்கங் காய்-ரூ.30,கோவக்காய்-ரூ.6, பன்னீர் பாகற்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.20.
- வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றலாம்.
- பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை யில் நடைபெற்றது.
இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக லைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசுகையில்:-
தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதனால் வீட்டின் மேல்பகு தியை குளிரவைக்க பல்வேற வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் அமைப்பது சிறந்தது. வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.
இதனால் மன அமைதி, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.
இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு ஆகியவை இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், காய்கறி, விதைகள் வழங்கப்படும். ஓராண்டு க்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.
- சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
- இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சிவா தியேட்டர் கார்னர் பகுதிகளில், சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.
ஸ்பீக்கர் அதிக சத்தத்துடன் ஒலிப்பதால் அப்பகுதி மக்களும், சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வகையில் சாலையிலேயே காலை முதல் மாலை வரை வண்டிகளை நிறுத்தி வைப்பதால் விபத்தும் ஏற்படுகின்றது.
எனவே மினி ஆட்டோவில் உள்ள அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஸ்பீக்கரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆட்டோ வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட குரலை திரும்பத் திரும்ப ஒலிப்பதால் இதை கேட்கும் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு சத்தத்துடன் ஸ்பீக்கரில் ஒளிபரப்புகின்றனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கோடை வெயிலால் காய்கறி களின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
- ஒரு பெட்டி தக்காளி ரூ.650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயிலால் காய்கறி களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 60ரூபாய், தக்காளி 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 650 ரூபாய், முள்ளங்கி 25 ரூபாய், பாவக்காய் ஒரு கிலோ 60 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய், புட்டுஅவரை ஒரு கிலோ 60 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 30 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய், தலணிகாய் 40 ரூபாய், புடலை 40 ரூபாய் என கடத்தூர் பகுதியில் காய்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைந்த நிலையில் விலை ஏற்ற த்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விலை ஏறும் என வியாபாரிகள் தெரிவிக்கி ன்றனர்.
- தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக அதன் விலை கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது.
பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல் பச்சை மிளகாய், இஞ்சி விலையும் எகிறி உள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.100-க்கும், இஞ்சி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளை குறைத்து இல்லத்தரசிகள் வாங்குகிறார்கள். காய்கறி விலை அதிகரிப்பால் குடும்ப தலைவிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக விலை குறைந்து இருந்த தக்காளியின் விலையும் உயரத்தொடங்கி உள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று வியாபாரிகள் கூறினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் காய்கறி விலை (கிலோவில்) வருமாறு:-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.25, பன்னீர் பாகற்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.80, பட்டை கொத்த வரங்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.60, முட்டை கோஸ்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.17.






