என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
    • பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.

    ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.

    இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.

    இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.

    எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.   

    • சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
    • ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். 

    இறந்த செல்களை நீக்கும்...

    தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

    முகப்பரு

    தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். 

    எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது

    தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.

    வெயில் பாதிப்பு

    சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது. 


    தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்

    சருமத்தை ஆற்றும்

    சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.

    வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி

    சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது. 

    விளைவுகள்

    தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

    • செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
    • பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.

    நிறைய உணவுகள் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இப்படி சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பால், பால் சார்ந்த உணவு, கிழங்கு வகைகள் என எத்தனையோ வகை உணவுகள், பிரிவுகள் உள்ளன.

    நிறைந்த சத்து, புரதம் போன்றவை சாப்பிட்ட பிறகு வயிற்றினை நிறைவாக வைக்கின்றது.

    *வைட்டமின்கள், தாது உப்புகள் வழங்குகின்றன.

    * செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.

    * ஆப்பிளின் சத்தினை எல்ேலாரும் அறிவர்.

    * அவகோடா என்பது இன்று மிக பிரபலம் அடைந்து வரும் பழம்.

    * பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.

    * ஆரஞ்சு 'சி' சத்துக்கு பெயர் எடுத்தது.

    * ஸ்ட்ராபெர்ரிஸ் வைட்டமின் 'டி' சத்து நிறைந்து, கலோரி சத்து குறைந்தது.

    * முட்டை-புரதம் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.

    * கொட்டை-விதை பிரிவுகள்

    * பாதாம்-வைட்டமின் ஈ சத்து நிறைந்தது.

    * சியா விதை அடர்சத்து கொண்டது. மங்கனீசு, மக்னீசியம், கால்சியம் சத்துக் கொண்டது.

    * தேங்காய்-கற்பக விருட்சம் தான்

     

    * வால்நட், பிரசிங் கொட்டை

    * குடை மிளகாய்-வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.

    *புரகோலி-நார்சத்தும் வைட்டமின் 'சி' சத்தும் கொண்டது.

    * காரட்டை தினமும் கழுவி தோல் சீவி சாப்பிடலாமே.

    * வெள்ளரி-புத்துணர்ச்சி தரும்.

    * பூண்டு-ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்தது

    * வெங்காயம், தக்காளி காய்கறி வகைகள்

    * கடல் உணவுகள். * முழுதானியம்-அரிசி, தினை, ஓட்ஸ். *பருப்பு வகைகள், பீன்ஸ், வேர்கடலை. * பால், பால் சார்ந்த உணவுகள்

    * ஆலிவ் எண்ணை, தேங் காய் எண்ணை, சர்க்கரை நோயை கடுப்படுத்த உதவும்.

    இந்த அறிகுறிகள் இதனாலும் இருக்கலாம். இதனால் மட்டும் என்று கூறப்படவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்திற்காகவே இது எழுதப்படுகின்றது.

    * காலில் தசை பிடிப்பு போல் ஏற்படுகின்றதா? மக்னீசியம் குறைவாக இருக்கலாம்.

    * மூச்சு வாங்குகின்றதா? நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குகின்றதா? ரத்த சோகை -இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம்.

    * கைகள் சில்லென இருக்கின்றதா? பி12, இரும்பு சத்து குறைபாடும் இத்தகு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    * ஈறுகளில் ரத்த கசிவு என்பது அநேகமாக வைட்டமின் 'டி' சத்து குறைபாடு என்பதனை அநேகர் அறிவர்.

    * கண் பார்வை இரவில் குறைவது போல் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைட்டமின் 'ஏ' சத்து குறைபாடும் இருக்கலாம்.

    * பாதங்கள் மரப்பது போல் இருந்தால் வைட்டமின் 'பி', 'பி6' குறைபாடும் காரணமாக இருக்கலாம். நகங்களில் புள்ளிகள் இருந்தால் 'சிங்க்' சத்து தேவைப்படலாம்.

    கமலி ஸ்ரீபால்


     

    * வாயின் இரு ஓரத்திலும் வெடிப்புகள் இருந்தால் வைட்டமின் 'பி2' சத்து தேவைப் படுகின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.

    * நாக்கு எரிகின்ற மாதிரி இருக்கின்றதா? வைட்டமின் 'பி' குறைபாடு இருக்கலாம்.

    *வாயில் துர்நாற்றம்-பல், ஈறு பிரச்சினையோடு உணவுப் பாதையில் பிரச்சினையும் இருக்கலாம்.

    * சர்க்கரை உணவு மீது அதிக ஈடுபாடு என்பதற்கு மக்னீசியம் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    வாசனை தெரியவில்லை என்றால் மற்ற காரணங்களோடு சிங்க் குறைபாடும் இருக்கலாம்.

    * காலில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக பரிசோதனை அவசியம்.

    * காதில் ஓங்காரம் போல் ஒலி இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.

    * தலைசுற்றல் இருந்தாலும் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளவும். குறைந்த ரத்த அழுத்தம் கூட இருக்கலாம்.

    புரதச்சத்து

    புரதச் சத்து குறைபாடு என்பது அதிகமாக காணப்படும் ஒன்றாகத் தான் உள்ளது.

    * வீக்கம், கொழுப்பு கல்லீரல், தசை வலுவின்மை, முடி, நகம், சரும குறைபாடு, எலும்பு ஆரோக்கியமின்மை, குறைவான வளர்ச்சியின்மை போன்றவை புரதச் சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் சில முக்கியமானவை ஆகும். ஒரு கிலோ எடைக்கு 8 கிராம் புரதம் என ஒரு சாதாரண மனிதனுக்கு அளவீடாக கணக்கிடப்–படுகின்றது. ஒருவர் 60 கிலோ எடை இருக்கின்றார் என்றால் அவருக்கு 58.60 கிராம் புரதம்நாள் ஒன்றுக்கு தேவை என கணக்கிடப்படுகிறது.

    புரதச்சத்து குறைபாடு உடையவர்கள்

    * புரத உணவு, சர்க்கரை உணவு இவற்றில் அதிக விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்.

    * பசி இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

    * உடல் தசைகள் வலுவிழந்து இருக்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    * காயங்கள் ஆறுவதில் கால தாமதம் ஆகும்.

    * கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருந்தால் எப்பொழுதும் சோர்வாகவும், பலமின்றியும் இருப்பர்.

    * எலும்பு முறிவு எளிதில் ஏற்படும்.

    * வீக்கம் இருக்கும்.

    * சருமம், தலைமுடி, நகங்களில் பாதிப்பு இருக்கும்.

    அன்றாட உணவில் முட்டை, பருப்பு, பன்னீர், சோயா, கொட்டை வகைகள், பால், தயிர் என புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.

    • மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
    • தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டை நாடான மெக்சிகோ மீதும் வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    இந்த நிலையில் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.

    மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளைபொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
    • ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.

    மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

    இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

    தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். 

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அப்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு 4 கிலோ தக்காளி அழுகி விடுவதால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றனர்.

    • கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
    • மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ19-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் பெருமளவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர். இதன் காரணமாக தட்டுபாடு ஏற்பட்டு தக்காளி விலை திடீரென அதிகரித்தது.

    கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ19-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.17-க்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக இனிவரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று ரகத்தை பொறுத்து ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.100 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்து உள்ள போதிலும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • இனி வரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் பெருமளவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர். இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை திடீரென அதிகரித்தது.

    கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.19-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.17-க்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக இனி வரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று ரகத்தை பொறுத்து ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.100 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்து உள்ள போதிலும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த மார்க்கெட்டுக்கு தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

    இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிய தொடங்கியது.

    இதனிடையே இன்று காலை பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு விற்பனையானது.

    சில்லறை விற்பனை மற்றும் தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • தக்காளி நடவு செய்த 60வது நாள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும்.
    • தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 200 முதல் ரூ.250 வரை விலை போகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கிணறு, போர்வெல் நீர் உள்ள நிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை முடிந்து சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாகி உள்ளது. இந்தநிலையில் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தக்காளி நடவு செய்த 60வது நாள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும். தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 200 முதல் ரூ.250 வரை விலை போகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு என குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.

    வரத்து அதிகமாக இருப்பதாலும் மழையால் தக்காளி அழுகி குறைந்த அளவே கிடைப்பதாலும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சாலையில் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தக்காளி விலை ஒரே சீராக இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளியிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஒரே சமயத்தில் தக்காளிகள் விற்பனைக்காக குவிந்துள்ளதால் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
    • தக்காளி பழங்களை பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது.

    இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதேசமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    ஒரே சமயத்தில் தக்காளிகள் விற்பனைக்காக குவிந்துள்ளதால் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாட்டுத்தக்காளி கிலோ ரூ.30-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.40-க்கும் விற்பனை ஆனது.

    ஆனால் இன்று காலை நேர்மாறாக நாட்டுத்தக்காளியும், ஆப்பிள் தக்காளியும் ஒரே மாதிரியாக கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் சிறிய நாட்டுத்தக்காளி கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.

    தக்காளி பழங்களை பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி பயிரிட்ட பல விவசாயிகள் பழங்களை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுள்ளனர். செடியில் தக்காளிகள் அழுகி காய்ந்து கிடப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்.

    ×