என் மலர்
நீங்கள் தேடியது "அழகு குறிப்புகள்"
- வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
- பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம்.
இரத்த அழுத்த மேலாண்மை
பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.
செரிமானம்
ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்
பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.
பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
மூளை ஆரோக்கியம்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
- யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.
"அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு 10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும்.
ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?

குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்
உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள்.
- பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
- சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.
கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?
குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?
தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?

திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி
இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள்.
- குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
- எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.
"தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.
அதிகப்படியான பசி
நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது.
பருக்கள், தோல் பிரச்சனைகள்
தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.
எடை மாற்றம்
குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.

பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது
அரிப்பு
என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.
சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு
புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.
- பாதாமை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து எடுத்துக்கொள்வது இன்னும் ஆரோக்கியமானது.
- ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.
உணவை தாண்டி உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் பாதாம். பலரும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியாமலேயே சாப்பிடுவர். ஆனால் இது உடலுக்கு பயக்கும் சில நன்மைகளை நாம் அறிந்தால் கண்டிப்பாக தினசரி உணவின் ஒரு பகுதியாகவே மாற்றிவிடுவோம். அப்படி என்ன நன்மைகளை கொண்டுள்ளது பாதாம், பார்ப்போம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
பாதாமில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்கிறது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது. பாதாமில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊட்டச்சத்துகள்
பாதாம் பருப்பு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களாகும். நிறைவுறா கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பை (low-density lipoprotein) குறைக்க உதவும். மெக்னீசியம் பாதாமில் அதிக அளவில் காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
பாதாம் பருப்பு குடல் பாக்டீரியாக்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட அதிக ப்யூட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. ப்யூட்ரேட் என்பது குடல் நுண்ணுயிரிகளால், செரிக்க முடியாத உணவு நார்ச்சத்தை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். பாதாம் மற்றும் பாதாம் தோல் ஆகியவை ப்ரீபயாடிக்குகளாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளர உதவுகின்றன. குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை அதிக ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன. ப்யூட்ரேட் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. சில வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம்
இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
பாதாம் பருப்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பு உட்பட உடல் உறுப்புகளில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை ஆதரிக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு உள்ளவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
எடைக்குறைப்பு
எடைக் குறைக்க விரும்புவர்கள் பாதாமை எடுத்துக்கொள்ளலாம். பாதாம் பசியை அடக்க உதவுகிறது. பாதாம் பருப்பு உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பு சுற்றளவு மற்றும் வயிற்றுப் பகுதி கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
மாதாவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது, பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
- தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.
காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.
வார்த்தை
நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
நேரம்
பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள்.
தொடுதல்
தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது.

எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்
துணைக்கு சேவை
சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.
பரிசு
உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.
இவை மட்டும்தான் காதல்மொழியா?
இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள்.
- குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும்.
- குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள நாளாகும்.
புதிதாக பெற்றோரான சிலருக்கு ஆரம்பத்தில் குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள சிறிது நாட்கள் எடுக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தை எதற்காக அழுகிறது என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் ஆரம்பத்தில் குழந்தைகளை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும். உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதையும், அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்கள்
- பசி
- காற்று புகுதல்
- அசௌகரியம்
- சோர்வு
- கோலிக் (குழந்தைகள் பொதுவாக ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக அழுவது - உடல்நல பாதிப்புகளை குறிக்காது)
- உடல்நிலை சரியில்லாமல் இருப்பது
மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எவ்வாறு அறிவது?
- தொடர்ந்து அழுவது (அழும் விதம் வழக்கத்தை விட வித்தியாசமாகவும், அதிக சத்தமாகவும் இருக்கலாம்)
- சிணுங்கும் சத்தங்களை எழுப்புதல்
- அதிக சத்தமாக அலறல்
- புரண்டு புரண்டு படுத்தல்
- கை, கால்களை பிடுங்குவது, உடலை வேகமாக நீட்டுவது
- எப்போதும் எரிச்சலாக இருத்தல் ( முகத்தில் வெளிகாட்டுவார்கள்)
- சாப்பிடாமல் இருப்பது
- இரவில் தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்தை விட அதிகமாக தூங்குவது.
மேற்கூறிய காரணங்கள் உடல்நல பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!
குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?
- குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
- வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
- குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டுப்பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம். எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்
- பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
- மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
- பொம்மைகளை கொடுத்து பார்க்கலாம்
- சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
- குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசம்!
- வேலை தேடும், வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் தாய்மார்களுக்கான முன்னெடுப்பு.
குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பசியறிந்து குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். அவர்களை தூங்கவைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும். இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது. அதுவும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பது இன்னும் சிக்கல் வாய்ந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை உதவிக்கு வைத்துக்கொள்வர். இருப்பினும் நகரங்களில் வாழ்பவர்களால், கிராமத்தில் இருக்கும் தங்கள் அம்மாக்களை இங்குகொண்டுவந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வைப்பது என்பது பல நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது.
சில வீட்டில் அவர்களின் அம்மாக்களும் வேலைக்குப் போகும் சூழல் இருக்கும். அப்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? இந்த சூழலில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தை பராமரிப்பு மையங்கள். காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் மேலானவர்கள்தான். ஆனால் அவர்களை பராமரிக்கவும் பணம் என்பது அத்தியாசியமான ஒன்று. அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும். குழந்தை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வர். பணிமுடிந்து வந்து மீண்டும் அழைத்துச்செல்வர்.
அல்லது பலரும் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பாளரை நியமித்து குழந்தைகளை கவனிக்க சொல்வர். இதற்கு எப்படியும் மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்திற்குமேல் செலவு செய்வர். வீட்டில் பணியமர்த்தப்படும் பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.13 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்குவர். ஒருவேளை கூடுதல் வேலைகள், அதாவது வீட்டு வேலைகள் சிலவற்றையும் சேர்த்து பார்க்கச்சொன்னால் அதற்கேற்றவாறு கூடுதல் சம்பளம் கொடுப்பர். பராமரிப்பு மையங்களில் இந்த தொகை மாறுபடலாம். சில மையங்கள், குறிப்பாக பகல்நேர பராமரிப்பு மையங்கள், நாள் அல்லது வார அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. சில மையங்கள் மணிநேரத்தை கணக்கில்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவே எப்படியும் அவர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு போய்விடும்.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்குகிறது நியூ மெக்ஸிகோ
இலவச குழந்தை பராமரிப்பு...
இந்நிலையில் இந்த குழந்தை பராமரிப்புச் செலவை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது குழந்தை பராமரிப்பு இலவசம் என அறிவித்தது. அம்மாநில அரசு அறிவித்த அந்த திட்டமும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் மாநிலமாக நியூ மெக்ஸிகோ மாறியுள்ளது. இதனால் அம்மாநில மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் $12,000 மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக பத்து லட்சத்து அறுபது ஆயிரம். குடும்பத்தினர் தங்கள் வேலையை தொடரவும், கல்வியை தொடரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
"குடும்ப ஒற்றுமை, பணியாளர் பங்கேற்பு மற்றும் நியூ மெக்ஸிகோவின் எதிர்கால செழிப்புக்கு குழந்தை பராமரிப்பு அவசியம். உலகளாவிய குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குகிறோம். எங்களது பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வளரவும், செழிக்கவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறோம்" என நியூ மெக்ஸிகோ ஆளுநர் மிச்செல் லுஜன் கிரிஷாம் தெரிவித்துள்ளார்.
திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் அது வருமானத்தின் அடிப்படையில், அதாவது வறுமைக்கோட்டின் கீழ் என நாம் குறிப்பிடுவதுபோல வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அரசினுடைய மையங்களில் சேர்த்தாலும், தனியார் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்த்தாலும் அதற்கான பராமரிப்பு தொகையை அரசு வழங்கும். பராமரிப்பு தொகையை பெற்றோர்கள் கட்டிவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெறுவார்கள்.
- வீட்டிற்குச் செல்லும் வழியில் திடீரென பெய்யும் மழை ஒரு கவிதை போல இதமானது.
- சளி மற்றும் காய்ச்சலுக்கு நேரடியான காரணம் ரைனோவைரஸ் போன்ற நுண்ணுயிரிகளே தவிர, மழையோ அல்லது குளிர்ச்சியோ அல்ல.
வீட்டிற்குச் செல்லும் வழியில் திடீரென பெய்யும் மழை ஒரு கவிதை போல இதமானது. ஆனால், கையில் குடை இல்லாத போது, இந்த அழகு அச்சமாக மாறுகிறது. "மழையில் நனைந்தால் சளி பிடித்துவிடுமே" என்ற பயம்தான் இதற்குக் காரணம். இருப்பினும், சளி பிடிப்பதற்கும், மழையில் நனைவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அறிவியல் கூறினாலும், மழையின் குளிர்ச்சியால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே காய்ச்சல் மற்றும் சளி வர முக்கியக் காரணம் என்பதால், இந்தத் தொகுப்பில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில், குடையின்றி மழையில் பயணிப்பவர்கள் சளி பிடிக்காமல் பத்திரமாக வீட்டை அடைவதற்கு பின்பற்ற வேண்டிய எளிய, ஆனால் பயனுள்ள சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
சளி, காய்ச்சல், குளிர்ச்சி: முக்கோணத் தொடர்பு!
சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு நேரடியான காரணம் ரைனோவைரஸ் போன்ற நுண்ணுயிரிகளே தவிர, மழையோ அல்லது குளிர்ச்சியோ அல்ல. இருப்பினும், நாம் மழையில் நீண்ட நேரம் நனையவோ அல்லது அதிக குளிர்ச்சியான சூழலில் இருக்கவோ நேரும்போது, அது நம் உடலுக்குள் ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, ஈரமான ஆடை காரணமாக உடல் வெப்ப இழப்பு ஏற்பட்டு, உடல் வெப்பநிலை குறைகிறது. பல ஆராய்ச்சிகளின் படி, உடலின் வெப்பநிலை குறையும் போது, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் தற்காலிகமாகப் பலவீனமடைகிறது. இந்தக் காலக்கட்டத்தில், நம்மைச் சுற்றியுள்ள அல்லது ஏற்கெனவே உடலில் செயலற்ற நிலையில் இருக்கும் சளி வைரஸ்கள் சுலபமாகத் தாக்கிப் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதேபோல், குளிர்ந்த காற்று மற்றும் வெப்பநிலை மாற்றம் நம்முடைய சுவாசப்பாதையையும் பாதிக்கிறது. இது சுவாசப்பாதையைச் சுருக்கி, நம் தொண்டையை வறண்டு போகச் செய்கிறது. இதனால், வைரஸ்களை வடிகட்டி வெளியேற்றும் நம் உடலின் இயல்பான பாதுகாப்பு செயல்முறை தடைபடுகிறது. எனவே, மழையில் நனைவது நேரடியாக உங்களை நோய்வாய்ப்படுத்தாது; மாறாக, இது உடல் குளிர்ச்சியடைந்து, நோயெதிர்ப்புச் சக்தி குறைய ஒரு வாய்ப்பை உருவாக்கி, வைரஸ்களின் தாக்குதலைச் சுலபமாக்குகிறது. இந்த காரணிகளை கட்டுப்படுத்தி, உடல் குளிர்ச்சியடையாமல் பார்த்துக்கொண்டால், மழையில் நனைவது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
குடையை மிஸ் பண்ணிட்டீங்களா?
குடை இல்லாமல் மழையில் சிக்கிக்கொண்டால், சளியை தவிர்க்க உடல் வெப்பநிலையை பேணுவது மிக அவசியம். இதற்கு, முதலில் இந்த மழைக்காலத்தில் ஜீன்ஸ் அல்லது பருத்தி போன்ற ஈரத்தை உறிஞ்சும் ஆடைகளைத் தவிர்த்து, விரைவாகக் காயக்கூடிய செயற்கை இழைகள் கொண்ட உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆடைகள் குறைந்த அளவு தண்ணீரையே உறிஞ்சும் என்பதால், உடல் சூடு மிக வேகமாக குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. கூடுதலாக, ஒரு நீர்ப்புகா அல்லது நீர் விலக்கும் மேல் அடுக்கை கோட் வடிவில் நிரந்தரமாக மேலே அணிவது, மழை நீரைத் தடுத்து, வெப்ப இழப்பை கட்டுப்படுத்தும். மேலும், நமது உடலில் அதிக வெப்பம் வெளியேறும் பகுதியான தலைக்கு ஒரு தொப்பி அணிவதன் மூலமும், உடல் குளிர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் கால்கள் நனையாமல் காப்பதன் மூலமும் மைய வெப்பநிலையைப் பாதுகாக்கலாம்.

மழையில் நனைந்தால் தேநீர் அல்லது சுக்கு காபி போன்ற சூடான பானம் அருந்துவது வெப்பநிலையை விரைவாகச் சீராக்க உதவும்
அடுத்து, மழையில் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக, உடனே விரைந்து செல்வது சிறந்த உத்தியாகும். வேகமாக நடக்கும் போது அல்லது லேசாக ஓடும்போது, நமது தசைகள் அதிக உள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வெப்பம், மழையின் குளிர்ச்சிக்கு எதிராகப் போராடி, உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது. வீட்டிற்கு வந்தவுடன், ஈரமான சாக்ஸ் மற்றும் காலணிகளை நீக்கிவிட்டு, தலை மற்றும் கால்களை நன்றாக துடைக்க வேண்டும். அத்துடன், உடனடியாகச் சூடான பானம் (தேநீர் அல்லது சுக்கு காபி) அருந்துவது அல்லது மிளகு ரசம் போன்ற சூடான உணவை உட்கொள்வது உடலின் உள் வெப்பநிலையை விரைவாகச் சீராக்க உதவும்.
இவ்வாறு மழையை வெறும் பயத்தோடு அணுகாமல், விழிப்புணர்வோடு அணுகுவதன் மூலம், குடை இல்லாவிட்டாலும் கூட, ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள முடியும். சளி பிடிப்பதற்கு முக்கியக் காரணம் வைரஸ் என்பதால், மழையில் பயணிக்கும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்காமல் பாதுகாப்பதே மிக முக்கியமான விதி. வீட்டுக்கு திரும்பியதும், உடனடியாக ஈர உடைகளை மாற்றி, வெந்நீரில் குளித்து, ஒரு சூடான தேநீரை பருகுவதன் மூலம் உடலின் உள் வெப்பநிலையை சீராக்கினால், சளி பிடிப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் குறையும். எனவே, குடை என்பது ஒரு சாதனம் மட்டுமே; விழிப்புணர்வே உண்மையான பாதுகாப்பு கவசம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படலாம். இனி மழையையும் பயமின்றி ரசிக்கலாம்
- சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம்.
- சமையலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வெங்காயத்தை வெட்டி வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் நிலவுவதால், நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தைக் கையாள்வதில் கூடுதல் கவனமும், சுகாதாரமும் கட்டாயம் தேவை. வெங்காயம் சுவைக்காக மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த சீதோஷ்ண நிலையில், வெங்காயத்தின் பாதுகாப்புக் குறித்து நாம் அறியாத சில முக்கியமான அபாயங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரமான சூழலில், வெங்காயத்தின் மேல் தோலின் அடியிலோ அல்லது உள் அடுக்கிலோ கருமையான புள்ளிகளோ அல்லது கோடுகளோ தென்படுவதுண்டு. இது அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சியை குறிக்கிறது. இந்தப் பூஞ்சையானது, குறிப்பிட்ட நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பூஞ்சை படிந்த வெங்காயத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போதும், அதன் வித்துக்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பூஞ்சை வித்துக்கள் நுரையீரலை பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியலாம். மேலும், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான உடல்நலப் பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம். எனவே, சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பூஞ்சையை நீக்க கல்லுப்பு
வெங்காயத்தின் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், அதன் நன்மைகளை முழுமையாகப் பாதுகாப்பாக அனுபவிக்கவும், நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள சுகாதார முறை உள்ளது. வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் முதலில் அதன் மேலிருக்கும் காய்ந்த தோலை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் சிறிது கல்லுப்பை எடுத்து, அந்த வெங்காயத்தின் மீது தூவி, உங்கள் கைகளால் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கல்லுப்பு தனது சொரசொரப்பான தன்மை காரணமாக, வெங்காயத்தில் இருக்கும் நுண்ணிய கிருமிகளையும், மேலடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சை வித்துக்களையும் நீக்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு கல்லுப்பு கொண்டு நன்கு தேய்த்தப் பிறகு, குறைந்தது இரண்டு முறை நல்ல தண்ணீரில் அலசிய பின்னரே வெங்காயத்தைச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய வழிமுறை, உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், கடுமையான தொற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கவும் பேருதவியாக அமையும். இந்த சுகாதார நடவடிக்கையைப் பின்பற்றுவது, ஆரோக்கியமான சமையல் முறைக்கு மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசியப் படியாகும்.

வெங்காயத்தின் மீதுள்ள கருப்பு கோடுகள், ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சி!
மூடி வைப்பதே பாதுகாப்பு!
வெங்காயத்தின் இயல்பு என்னவென்றால், அது வெட்டப்பட்டவுடன் காற்றிலுள்ள கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் மிக வேகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. வெங்காயம் வெட்டப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதன் மேற்பரப்பில் அதிகப்படியான கிருமிகள் குவியும் அபாயம் உள்ளது. இந்த சுகாதார அபாயத்தைக் கருத்தில் கொண்டு, சமையல் தேவைகளுக்காக ஒரு முறை வெங்காயத்தை வெட்டிய பிறகு, எந்தக் காரணம் கொண்டும் அதைத் திறந்தவெளியில் வைக்கக் கூடாது. உடனடியாக, மூடி உள்ள ஒரு காற்றுப் புகாத பாத்திரத்திலோ அல்லது ஒரு தட்டைக் கொண்டோ உறுதியாக மூடி வைக்க வேண்டும். வெட்டிய வெங்காயம் எந்த வகையிலும் வெளியிலுள்ள கிருமிகளை ஈர்க்காதபடி உறுதி செய்வது அவசியம். மேலும், சமையலுக்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு முன்னதாகவே வெங்காயத்தை வெட்டித் தயார் செய்து வைக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. சமைக்கத் தேவைப்படும் போது மட்டுமே வெங்காயத்தை வெட்டி உடனடியாகப் பயன்படுத்துவதே சிறந்த பழக்கமாகும். இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெங்காயம் தரும் ஆரோக்கிய நன்மைகளைப் பாதுகாப்பாகப் பெற முடியும்.
- போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது.
- ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றும் ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள்.
எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடுபவர்கள்தான் மனித இனம். உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் உள்ளிட்ட நல்ல வாழ்க்கை முறைக்காகத்தான் அனைவரும் கடினமாக உழைப்போம். ஆனால் அந்த உழைப்பால் உணவு, உறக்கத்தையே மறந்துவிடுகிறோம். வேலை, குழந்தை, குடும்பம் என எது வேண்டுமானாலும் தூக்கத்திற்கும், உணவிற்கும் தடையாக இருக்கலாம். ஆனால் போதுமான தூக்கம் என்பது எடை, உணர்ச்சி, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன மற்றும் உடல் செயல்திறன் மற்றும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தூக்கம் ஒன்று கெடும்போது இது அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பது மிகமுக்கியான ஒன்று. இந்த தூக்கம் கெட்டால் என்ன ஆகும்? பார்க்கலாம்.
தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
- வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
- இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
- எடை மேலாண்மையை ஆதரிக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
- கவனத்தின் அளவை அதிகரிக்கிறது
- நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கிறது
பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது. எந்த இடையூறுகளும் இன்றி நாம் எவ்வாறு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதை பொறுத்தது.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?
குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அவர்கள் தூக்கம் இருக்கவேண்டும்.
- பிறந்த குழந்தைகள் : 14-17 மணிநேரம்
- 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் : 12-16 மணிநேரம்
- 1 முதல் 3 வயதுவரை உள்ள குழந்தைகள் : 11-14 மணிநேரம்
- 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் : 10-13 மணிநேரம்
- பள்ளி செல்பவர்கள் : 9-12 மணிநேரம்
- பதின்பருவத்தினர் : 8-10 மணிநேரம்

இருண்ட அறையில் தூங்குவது அவசியம்
போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்
- இதய நோய்
- புற்றுநோய் கட்டிகள்
- பக்கவாதம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள்
- கவனக்குறைவால் விபத்துக்கு வழிவகுக்கும்
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
இரவில் சிறந்த தூக்கத்தை பெற என்ன செய்யலாம்?
- இரவில் காபி, சர்க்கரை, மது எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
- தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்கள், ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- விளக்கை அணைத்துவிட்டு தூங்குங்கள். காரணம் ஒளி நம் மூளையைத் தூண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, எனவே இருண்ட அறையில் தூங்குவது அவசியம்.
- அலாரம் வைப்பதற்கு ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், கடிகாரத்தை பயன்படுத்துங்கள்.
தூக்கமின்மையின் பாதிப்புகள்
தூக்கமின்மை, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குடிபோதையில் இருப்பதற்கு சமம். போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறது. மேலும் தூக்கமின்மை மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற மிகவும் வலுவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.
- ஆலப்புழாவில் கிடைக்கும் மீன் உணவுகளின் சுவை, அங்கிருக்கும் இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது!
- புளிக்கு பதில் மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பு.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா அதாவது அலப்பி நகரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் எழில் கொஞ்சும் படகு வீடுகளும், கால்வாய்களும்தான். ஆனால், அங்கே கிடைக்கும் மீன் உணவுகளின் சுவையோ, அந்த இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது. குறிப்பாக, தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் ஆலப்புழா மீன் குழம்பு அதன் தனித்துவமான சுவைக்காகவே மிகவும் புகழ் பெற்றது. ஆப்பம், சாதம், இடியாப்பம் என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் தனித்துவமான ருசி கொண்ட இந்த குழம்பு ரெசிபியை செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த தொகுப்பில் 'ஆலப்புழா மீன் குழம்பு' ரெசிபியை எப்படி செய்வது என விரிவாக காணலாம்.

ஆலப்புழா மீன் குழம்பு செய்முறை
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.)
* பிறகு நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, சிறிது வதக்கிய பின், சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.(எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த மீன்).
* மீன் மற்றும் மாங்காயை வேகவைக்க தேவையான தண்ணீரை ஊற்றி, குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மீன் 10 நிமிடங்கள் வேகும்வரை மூடி வைக்கவும்.
* மீன் வெந்த பிறகு, அடுப்பை முற்றிலுமாக அணைத்துவிடமால் மிக மிகக் குறைந்த தீயில் வைத்து, திக்கான தேங்காய் பாலை சேர்க்கவும்.
* தேங்காய் பால் சேர்த்த பின் அதிகம் கொதிக்க விடக்கூடாது (அதிக நேரம் கொதித்தால் குழம்பு திரிந்து போக வாய்ப்புள்ளது). சுவையை சரி பார்த்து, உடனடியாக மூடி வைக்கவும்.
* இப்போது அட்டகாசமான ஆலப்புழா மீன் குழம்பு தயார்!

சுவையான, சத்து நிறைந்த ஆலப்புழா மீன்குழம்பு
ஆலப்புழாவின் உணவுச் சிறப்பு
* கேரளாவின் பல மீன் குழம்புகளில் கொடம் புளி எனப்படும் கருப்பு புளி பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆலப்புழா ஸ்டைலில், மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பாகும்.
* இந்த குழம்புக்கு வஞ்சரம் அல்லது வவ்வால் மீன் பயன்படுத்துவது வழக்கம். இந்த மீனின் உறுதியான சதை, குழம்பில் உடையாமல், குழம்பின் சுவையை உள்வாங்கி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
* இந்தக் குழம்பின் தனி சிறப்பே, தேங்காய் எண்ணெயின் நறுமணமும், தேங்காய் பாலின் தனித்துவமான சுவையும்தான். இது குழம்பிற்கு ஒரு அசல் கேரளச் சுவையை வழங்குகிறது.
உணவில் உள்ள நன்மைகள்
* மீன் ஒரு முழுமையான புரத மூலமாகும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அழற்சியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
* மஞ்சள் தூள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* தேங்காய் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்கவும், சில வைட்டமின்களை (A, D, E, K) உறிஞ்சவும் உதவுகிறது.
* இதில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உணவிற்கும் தனித்துவமான சுவையை கொடுக்கிறது.
இப்படி மீன், மாங்காய் மற்றும் தேங்காய் பாலின் ஆரோக்கியமான கலவையுடன் விரைவாகச் சமைக்கக்கூடிய இந்த அற்புதமான கேரள உணவை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்






