search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "curd"

    • இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
    • குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

    * உடலை பலப்படுத்த விரும்புவோர் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

    * உறை ஊற்றிய பின் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது. இந்த தயிர் வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியை குறைக்கும்.

    * நன்கு புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

    * இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, ரத்தக் கொதிப்பு, காமாலை, தோல் நோய் ஏற்படும்.

    * மண்சட்டியில் உள்ள தயிர் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. புதிதாக வாங்கிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பிறகே தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.

    * தயிரை உப்பு மிளகிட்டு சாப்பிடலாம். சர்க்கரை, தேன், எசன்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றை கலந்தும் சாப்பிடலாம்.

    * தயிரை உபயோகித்து தலை முடியை சீர்செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

    * கடலைமாவுடன் தயிரை குழைத்து பூசிவர பருக்கள் மறையும். முகம் பொலிவடையும்.

    • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

    மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    நல்லெண்ணை:-

    இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

    மஞ்சள் தூள்:-

    மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

    அரிசி மாவு:-

    நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

    பஞ்சாமிர்தம்:-

    இது உடல் நலம் தருகிறது.

    தயிர்:-

    மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

    பழ வகைகள்

    முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

    இளநீர்:-

    மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    விபூதியும் சந்தனமும்:-

    மக்களுக்கு அருள் தருகிறது.

    கலசாபிஷேகம்:-

    அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

    மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    திருவிழாக்கள்

    மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

    தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    • வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
    • பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி என்பதால், குடும்பத்துக்கு தேவையான அளவு மோர், தயிரை மக்கள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரம் மோர் ஒரு லிட்டர் ரூ.30-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் விற்பனை செய்தனர். இந்த நிலையில் தற்போது மோர் ஒரு லிட்டர் ரூ.40-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.90-க்கும் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    இது பற்றி கடை உரிமையாளர்கள் கூறும்போது, கோடை காலம் என்பதால் மோர், தயிர் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் போக்குவரத்து செலவு, கடை வாடகை, வேலையாட்களின் சம்பளம் ஆகியவையும் உயர்ந்து உள்ளதால், மோர், தயிர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

    • தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
    • உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.

    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தயிர் தினமும் புழக்கத்தில் இருக்கிறது. தயிர் சாதமாக மட்டுமின்றி இனிப்பு லஸ்ஸி, குளிர்ச்சியான சாஸ், ரைத்தா, தாகி வடை என பல வகைகளில் ருசிக்கப்படுகிறது. லக்டோபேசிலஸ் டெல்புருக்லி எனப்படும் பாக்டீரியாக்களால் பால் நொதிக்கப்பட்டு தயிர் தயாராகிறது. இந்த பாக்டீரியா நொதித்தல் செயல்முறையின்போது லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இது தயிர் அடர்த்தியாக இருப்பதற்கு காரணமாகிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக தயிர் கருதப்படுகிறது. தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    பற்கள் - எலும்புகளை வலிமையாக்கும்

    தயிரில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும். கீல்வாதத்தை தடுக்கும். எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினசரி உணவில் ஒருமுறையேனும் தயிர் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

    தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு நன்மை பயக்கும் நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. புரோபயாடிக்குகள் பல நோய்த்தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியவை. சந்தையில் கிடைக்கும் அனைத்து தயிர்களும் புரோபயாடிக் தன்மை கொண்டவை அல்ல. அதன் லேபிளில் 'லைவ் ஆக்டிவ் கல்சர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். யோனிக்கு நலம் சேர்க்கும்

    தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா, யோனியின் ஆரோக்கியம் காக்கக்கூடியது. பி.எச். சம நிலையை சீராக பராமரித்து யோனியின் நலனை மேம்படுத்தும். அதனால் பெண்கள் எந்த வகையான தயிரையும் உட்கொள்ளலாம்.

    இதயத்திற்கு நல்லது

    தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கும்.

    ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 'கிரீக் யோகர்ட்' எனப்படும் தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிப்பு கலந்த தயிர் மற்றும் பழங்கள், பிற உணவு பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் தயிர் வகைகளை தவிர்ப்பது நல்லது.

    பளபளப்பான சருமம்- கூந்தலை பெற உதவும்

    தயிர் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தயிர், எலுமிச்சை சாறு, கடலை மாவு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம். தயிர் சிறந்த பிளீச்சிங்காக செயல்பட்டு சரும அழகை மெருகேற்றும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலை பெறவும் தயிரை உபயோகப்படுத்தலாம்.

    உடல் எடையை குறைக்கும்

    கார்டிசோல் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு சேரும். தயிரில் கால்சியம் நிறைந்துள்ளது. இது கார்டிசோலின் உற்பத்தியை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்கவும் துணை புரியும். தயிர் சாப்பிட்டால் நீண்ட நேரம் குடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் தொப்பையை கட்டுப்படுத்தவும் உதவும்.

    பொடுகை நீக்கும்

    பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக தயிர் அமைந் திருக்கிறது. தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை நீக்க சிறந்த தீர்வாக அமைகிறது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வரலாம். இது பொடுகைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும்.

    செரிமானத்திற்கு துணைபுரியும்

    தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக ஜீரணமாகக்கூடியது. மேலும் நொதித்தல் செயல்பாட்டின் போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

    ஆற்றல் அளிக்கும்

    உடலுக்கு போதுமான அளவு ஆற்றலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தயிரை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தயிர் உடலுக்கு ஊக்க சக்தியை அதிகரிக்கும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.

    தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.
    கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருசில உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்.

    மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் நல்ல பாக்டீரியாக்களும் வளமையாக நிறைந்துள்ளது. எனவே தயிரை சாப்பிடுவதால், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

    ஆனால் அத்தகைய தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற மிகவும் பிரபலமான விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.

    சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. அது என்னவெனில், தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம்.



    தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.

    உங்களுக்கு தயிர் மிகவும் பிடிக்குமானால், அதனை பயமின்றி எந்நேரமும் சாப்பிட ஒருசில டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தயிரின் சுவையை ரசியுங்கள்

    தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.

    மோர் போன்று செய்து குடிக்கலாம்.

    இரவிலும் தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்

    வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம்.

    தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம்.
    ×