என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பு
- ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றி உள்ளார்.
கொரோனா காலங்க ளில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதே போல் கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மன உளைச்சலை போக்கினார்.
தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அனைவரும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத்திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம் பிக்கை உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்