search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள்"

    • 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் அதிகம் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியமாக பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    அவர்களுக்கு வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 தவணைகளாகவும், தலா ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் ரூ.3 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதவிர விவாசயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 15 தவணைகளில் 2.8 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு வழங்கியுள்ளது.

    இந்த சூழலில் நிதியுதவியை உயர்த்துவதோடு அதனை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
    • மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர்.

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால்வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.

    விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாலியமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    சாலியமங்களம் பகுதியில் 2500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லைஅரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகின்றனர்.

    அதனால விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொ டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாமிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புடன், மாற்றுத் திறனாளிகளுக்கான  கடன் மற்றும் குறைந்த வட்டியில் உதவிக் கடன். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன்கார்டு நதல், நிலவுடமை தொடர்பான   கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பான அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ  ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்து, உரிய ஆவணங்களுடன், மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் ஏதேனும் விபரங்கள் தேவைப்படுவோர் துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலரை 94899 27003, பொது மேலாளரை 94899 27001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருவாரூர் மாவட்டத்தில் கொத்தங்குடி, பேரளம் கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருவாரூர்:

    டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள்மற்றும் வடிகால்களைதூர்வாரு வதற்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 916 எந்திரங்களை கொண்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளைதற்போது பணிபுரியும் செயற்பொ றியா ளர்களோடுகூடுத லாக பிறவட்டம் மற்றும்கோ ட்டங்க ளிலிருந்து பொறியா ளர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தூர்வாரும் பணிகள் நடைபெற்ற பாசன பகுதிகளில் தினந்தோறும் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு பணிக்கும் விவசாய பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர், உதவி மேலாண்மை அலுவலர், பஞ்சாயத்து செயலர் மற்றும் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அடங்கிய உழவர் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. தூர்வாரும் பணிகள் சீரிய முறையில் நடைபெற தமிழ்நாடு அரசின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டு 100 சதவீத பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மேட்டூரிலிருந்து திறக்க ப்பட்ட தண்ணீர் விரைவில் கடைமடை வரை பாசனத்திற்கு சென்றடைய உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக மே 24-ல் குறுவை பாசனத்திற்காக முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் தமிழ்நாடு அரசின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிக ரிக்கும் என எதிர்பா ர்க்கப்படுகிறது.

    சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் கோடை பயிர் வகைகள், அதிக அளவில் சாகுபடி செய்ய இயலும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கொத்தங்குடி கிராமம், கொத்தங்குடி வாய்க்காலில் ரூ.9.95 லட்சம்மதிப்பீட்டில் 5 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இதனால் சுமார் 232 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் கொத்தங்குடி, கடுவங்குடி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் கிராமம், பேரளம் வாய்க்காலில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 4.00 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதனால் சுமார் 177 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் பேரளம் மற்றும் வீராநத்தம் கிராமங்கள் பயன்பெறுகின்றன.

    இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, சிவ.வீ. மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-
    டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து, வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழக முதல்வர் முன்கூட்டியே தண்ணீர் திறந்துள்ளார். விவசாயிகள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 

    கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் போது, 50 சதவீதம் உரங்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர், அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. விவசாயிகள் விரும்பியபடி உரங்கள் வழங்குவதுடன், மீதம் உள்ள தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கினால், உற்பத்தி செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைள நீர்வளத்துறை, வருவாய்த்துறை மூலம் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து, தூர் வாரவேண்டும்.

    தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 150 மட்டுமே வழங்கி, டன் ஒன்றுக்கு ரூ. 2,900 மட்டுமே விலையாக வழங்கப்படுகிறது. 

    தற்போது, உற்பத்தி செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வெட்டுக்கூலியும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, 2022–23ம் அரவை பருவத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டர் ரூ. 60 வீதம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம் பகுதி ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வாய்மேடு, மருதூர்,  ஆயக்காரன்புலம், பன்னாள், கருப்பம்புலம், கோவில்தாவு வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை இப்பகுதியில் மிகப்பெரிய பாசன மற்றும் வடிகால் ஆறாக உள்ளது.

    இதில் தாணிக்கோட்டகத்தில் இருந்து வாய்மேடு வரை முள்ளியாற்று பாசனமாகவும் , தகட்டூரி–லிருந்து  ஆதனூர் வரை மிகப் பெரிய ஆறாக மானங்கொண்டானாறு ஓடுகிறது. இந்த ஆறுகளில் வாய்மேடு, மருதூர்,
    ஆயக்காரன்புலம் நீங்க பெற்றவர்களில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஆகாய தாமரை மண்டிக்கிடக்கிறது. 

    மருதூர் கடைத்தெருவில் இருந்து  தகட்டூர் ஆதியங்காடு  வரை உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில்  ஆகாயத்தாமரை மிகுந்து காணப்படுகிறது .ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் மிகநெருக்கமாக மண்டிக்கிடப்பதால் ஆடு மாடுகள் கூட இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இந்த ஆகாயத்–தாமரையால் தண்ணீர் வற்றிய தோடு துர்நாற்றமும் வீசுகிறது.  எனவே ஆறுகளில் மண்டிக்கிடக்கும் இந்த ஆகாய தாமரை–களை அகற்ற வேண்டும்.

    மேலும் மேட்டூரில் தண்ணீர் திறந்த நிலையில் கடைமடை பகுதியான வேதாரண்யம் பகுதிக்கு தண்ணீர் வர குறைந்த–பட்சம் 10 நாட்கள் ஆகும் அதற்குள் இந்த ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளைஅகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் நலத்திட்ட வழங்கும் விழாவில் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
    பரமத்திவேலூர்: 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் இருக்கூர், பிலிக்கல்பாளையம் மற்றும் அ.குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்கள். 

    அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், கைத்தெளிப்பான், பாசிப்பயறு விதைப்பைகள், காய்கறி விதைகள், மண்புழு உரம், நெகிழி கூடை, பிளாஸ்டிக் டிரம் வேளாண்மை விளைபொருள் கொள்கலன்கள், நெகிழி காய்கறி பெட்டிகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது.

    மடத்துக்குளம்:

    காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.

    உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குடிமங்கலம் வட்டாரம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. கேரள மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில்லாத விலை நிலவுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. விதைப்பு செய்த 50 வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம்.

    தினமும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் வரை சந்தை நிலவரம் இருந்தது. தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா மாநில வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், நிலையில்லாத விலை கிடைக்கிறது.

    விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே, கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்லும் நிலையில் வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×