search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்துறை"

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் நலத்திட்ட வழங்கும் விழாவில் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
    பரமத்திவேலூர்: 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் இருக்கூர், பிலிக்கல்பாளையம் மற்றும் அ.குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்கள். 

    அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், கைத்தெளிப்பான், பாசிப்பயறு விதைப்பைகள், காய்கறி விதைகள், மண்புழு உரம், நெகிழி கூடை, பிளாஸ்டிக் டிரம் வேளாண்மை விளைபொருள் கொள்கலன்கள், நெகிழி காய்கறி பெட்டிகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
    ×