search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manufacturing"

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • உற்பத்தி செலவு அதிகமாவதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
    • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு, குரவப்பு லம், தாணிக்கோட்டகம், செம்போடை, பிராந்தி யங்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்படும்.

    அவ்வாறு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தற்போது வாட்டர் கலர்கள் கொண்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாகதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கும், 10 அடி சிலை ரூ. 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

    இதுகுறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில்:-

    இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதால் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.

    • கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.

    திருப்பூர்:

    கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.

    இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது.
    • கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது. எவ்வளவு தான் நெருக்கடி எழுந்தாலும் விடாமுயற்சியில் இறங்கும் தொழில்துறையினர் சவால்களை முறியடித்து வெற்றி மகுடம் சூட்டிக்கொள்கின்றனர். 'சி-பாரம்' பிரச்சினையில் துவங்கி, கடந்த ஆண்டு தொழிலை புரட்டிப்போட்ட நூல் விலை உயர்வு வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், பின்னலாடை உற்பத்தியாளர்களும் தீர்வு கண்டுவிடுகின்றனர்.

    கொரோனாவுக்கு பின் வளர்ச்சிப்பாதையில் வேகமாக பயணித்த பனியன் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது நூல் விலை உயர்வு மட்டுமல்ல, ரஷ்யா - உக்ரைன் போர் சூழலும்தான். அப்படியிருந்தும் கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது :- இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பி வருவதால் சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.விரைவில் நிலை மாறும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் முழு அளவில் தயாராகிவருகிறது. முதல்கட்டமாக செயற்கை நூலிழை துணி உற்பத்தி மற்றும் சாயமிடுவதில் சோதனை முறை வெற்றியடைந்துள்ளது.

    இந்தாண்டில் மட்டும் 100 நிட்டிங் எந்திரங்கள், பாலியஸ்டர் பின்னலாடை துணி உற்பத்தியை துவக்கியுள்ளன. சாய ஆலைகளும் பாலியஸ்டர் துணிக்கு சாயமிட்டு வெற்றி கண்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் இத்தகைய புதிய முயற்சி துவங்கியுள்ளது.ஆடை உற்பத்தியில் பெரிய மாற்றம் தேவையில்லை. வழக்கமாக பயன்படுத்தும் தையல் மெஷின்களில், ஊசிகளை மட்டும் சரிசெய்தால் பாலியஸ்டர் பின்னலாடைகளை உற்பத்தி செய்யலாம். நிட்டிங் , டையிங் பிரிவில் வெற்றிகரமாக பாலியஸ்டர் துணியை தயார் செய்து வருகிறோம். திருப்பூரை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி பாதையில் நகர துவங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. தற்போதைய மந்தநிலையும் சில மாதங்களில் மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
    • சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.

    தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.

    • ரயான் நூல், துணி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
    • இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரயான் துணிகள் உற்பத்தியும், அதை மதிப்பு கூட்டிய துணிகளாக மாற்றி விற்பனை செய்வதும் அதிகம்.

    அடுத்தபடியாக காட்டன் பாலீஸ்டர் துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.சமீப காலமாக இத்துணி களை டையிங், பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் செய்து முழுமையான ஆடையாக மாற்ற தேவையான அளவு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி இப்பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் செலவு அதிகரிப்பதுடன் ரயான் நூல், துணி விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:

    ஈரோடு, நாமக்கல் மாவட்ட பார்டர் பகுதியில் முழு அளவில் ரயான் துணிகள் உற்பத்தி ஆகி வந்தது. அவற்றை மதிப்பு கூட்ட செய்யும் சாய, சலவை, பிரிண்டிங், கேலண்டரிங் உள்ளிட்ட பணிகளுக்கான வசதி இங்கு குறைவு.

    வெளிமாநி லங்களுக்கு அனுப்பி திரும்ப பெற செலவு அதிகமாகிறது.எனவே கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்றனர்.

    குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், ஆவத்திபாளையம் தார்காடு, வெளியரசம் பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்ற–னர்.

    ரயான்நூல், உற்பத்தி கூலி, ரயான் துணிகளை மதிப்பு கூட்டிய பொருளாக்க ஆகும் செலவை விட கேரளா சேலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ரூபாய்க்கு மேல் குறைவு.

    5 அல்லது 5.5 மீட்டர் கேரளா சேலைக்கு ஜருகை பார்டர் துணி 10 ரூபாய்க்குள் வாங்கலாம்.

    ஒரு மீட்டர் உற்பத்திக்கு 40 ரூபாய் என 5 மீட்டருக்கு 200 ரூபாய்க்குள் அடக்க–லாம். 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 முதல் 100 ரூபாய் லாபம் நிற்கும். இதை மொத்தமாக செய்யும் போது வியாபாரிகளுக்கு சற்று குறைந்த விலையில் வழங்கலாம்.

    இவற்றுக்கு சாய பிரிண்டிங் பணிகள் குறைவு. கிரே துணியாக ஒட்டி டை பயன்படுத்தாமல் தேவையான நிற ஜருகை பார்டரை இணைத்து விற்கலாம்.

    தவிர பிற துணிகளை விட கேரளா சேலைகளுக்கு தற்போது ஆர்டர் அதிகம் வருவதால் அதனை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்கள் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.

    அன்னதானப்பட்டி:

    சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. 

    மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.

    ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

    இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.  

    வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு.
    • பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருவதுடன், தற்போது குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாலிெயஸ்டர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் முன்வைத்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை சார்பில் வால்ரஸ் நிறுவனத்தலைவர் ஜிபிஎஸ். டேவிட் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது தி.மு.க.பகுதி செயலாளர்கள் போலார் சம்பத்குமார், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயத்த ஆடை தொழிலுக்கு தமிழகத்தில் செயற்கை இழை துணி வகை (பாலிெயஸ்டர் பேப்ரிக்) முன்னேற்றத்திற்கு தனி வாரியம் என்று இதுவரை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் சார்பில் முன் வைக்கிறோம்.

    பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் பாலிெயஸ்டர் ஆடைகளின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. எனவேதான் தற்போது தொழில்துறையினரில் பெரும்பாலானோர் பாலிெயஸ்டரில் இறங்கி உள்ளனர். வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் நிறுவனம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், திருப்பூரை தமிழகத்தின் முதன்மை நகரமாக மாற்றவும் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடமும் மனு கொடுக்க இருப்பதாக வால்ரஸ் டேவிட் தெரிவித்தார்.

    • விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.
    • பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் தொடங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 10 ஏக்கர் மற்றும் மாப்பிள்ளை சம்பா 5 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டிணம் ஆகிய அரசு விதை பண்ணைகளில் தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.

    இதன் முதல் கட்டமாக 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்ப ட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக தூயமல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் எந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் துவங்கப்பட்டது.

    இப் பணியை மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொ) ரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாய் நாற்றங்காலில் பயன்படுத்த ப்படும் விதை நெல்லில் சூடோமோனஸ் மற்றும் உயிர் உரங்கள் கலந்து விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தினை பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி செய்து காட்டினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஏழுமலை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் கலந்து கொண்டனர்.

    • கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் வழக்கமாக 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி இன்று மதியம் நிலவரப்படி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    • 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.
    • பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    திருப்பூர் :

    ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனங்களின் எந்திர முதலீடுகளுக்கு மானியம் வழங்கும் புதிய உற்பத்தி சார் ஊக்க தொகை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. வரைவு நிலையில் உள்ள இந்த திட்டம் குறித்து வரும் 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.

    மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஏ-டப்' என்ற திருத்தி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு மாற்றாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கை, கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது.வரைவு அறிக்கை குறித்து அனைத்து ஜவுளித்துறையினரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஜவுளி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர் அரசப்பன் கூறியதாவது:- பி.எல்.ஐ., என்கிற புதிய திட்டத்தில் ஜவுளி உற்பத்தி எந்திரங்களின் முதலீடுகளுக்கு அதன்மூலம் அடையும் விற்பனை இலக்கு அடிப்படையில் மானியம் வழங்கப்படும். மானிய ஊக்கத்தொகை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். எந்திரம் கொள்முதல் செய்த முதல் ஆண்டில், எந்திரத்தின் முதலீட்டு மதிப்பில் இருமடங்கு வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.அடுத்தடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 சதவீதம் வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.வரைவு அறிக்கையின்படி கணக்கிட்டால் 5 ஆண்டுகளில், எந்திரத்திற்கான முதலீட்டில் நிறுவனங்கள் 60 சதவீத தொகையை மானியமாக பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 1 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான எந்திரம் முதலீடுகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.நூற்பாலை, நெசவு, பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிராசசிங் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் என அனைத்து துறையினரும் இந்த திட்டத்தில் எந்திர முதலீடுகளுக்கு ஊக்கத்தொகை பெறமுடியும்.

    ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான எந்திர முதலீடுகளுக்கும் புதிய திட்டத்தில் மானிய ஊக்கத்தொகை கிடைக்கும். ஜாப்ஒர்க் ரசீதுகள் விற்பனையாக எடுத்துக்கொள்ளப்படும்.தற்போதுவரை புதிய திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது. ஜவுளித்துறையினர் தங்கள் கருத்துகளை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் புதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும் கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 35 மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் கய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    அந்த அங்காடியினை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இன்று மதியம் திறந்து வைத்தார்.

    இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகன், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் கால் மிதியடி பொம்மை வகைகள் பைகள் மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்திகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குநர்லோகேஸ்வரி, செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்ட களப்பணியார்கள், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×