search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polyester"

    • தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது.
    • உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

    திருப்பூர்:

    பாலியஸ்டர் நூல் வகைகளின் மீதான தரக்கட்டுப்பாட்டு உத்தரவை காலநீட்டிப்பு செய்ததற்கு சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்) நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து சைமா தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் பல வகையான பாலியஸ்டர் நுாலை இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டில் விற்பனை செய்யவும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது.

    தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அவகாசத்தை நீட்டித்ததற்கு மத்திய அரசுக்கும் ரசாயனம் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு.
    • பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருவதுடன், தற்போது குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாலிெயஸ்டர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் முன்வைத்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை சார்பில் வால்ரஸ் நிறுவனத்தலைவர் ஜிபிஎஸ். டேவிட் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது தி.மு.க.பகுதி செயலாளர்கள் போலார் சம்பத்குமார், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயத்த ஆடை தொழிலுக்கு தமிழகத்தில் செயற்கை இழை துணி வகை (பாலிெயஸ்டர் பேப்ரிக்) முன்னேற்றத்திற்கு தனி வாரியம் என்று இதுவரை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் சார்பில் முன் வைக்கிறோம்.

    பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் பாலிெயஸ்டர் ஆடைகளின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. எனவேதான் தற்போது தொழில்துறையினரில் பெரும்பாலானோர் பாலிெயஸ்டரில் இறங்கி உள்ளனர். வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் நிறுவனம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், திருப்பூரை தமிழகத்தின் முதன்மை நகரமாக மாற்றவும் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடமும் மனு கொடுக்க இருப்பதாக வால்ரஸ் டேவிட் தெரிவித்தார்.

    • அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.
    • சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் உள்ள காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்திற்கு 58.22 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.

    மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.

    இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் . கதர் பருத்திக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். இதேப்போல் பட்டு 30 சதவீதம், பாலியஸ்டர் 30 சதவீதம், உல்லன் 20 சதவீதத்தில் கிடைக்கும்.

    பொதுமக்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆதவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    முன்னதாக மகாத்மா காந்தி படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபா லகிருஷ்ணன், உதவி இயக்குநர்சாவித்திரி, கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தெரசா மேரி, மேலாளர்சாவித்திரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.
    • தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து திருப்பூர் பகுதியில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.உள்ளாடை ரகங்களில் இணைப்பதற்கான அனைத்துவகை எலாஸ்டிக் ரகங்களையும் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.கேரளாவில் இருந்து ரப்பர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் உள்ளிட்ட பிரதான மூலப்பொருட்களை எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பெறுகின்றன.வழக்கமாக ரப்பர் விலை திடீரென உயர்ந்து எலாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும். தற்போதுரப்பர் விலை சீராக உள்ளது.

    அதேநேரம் பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான இரு மாதங்களில் கிலோவுக்கு 20 ரூபாய் பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:-

    பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இதன் எதிரொலியாக 40 சதவீத அளவிலேயே எலாஸ்டிக் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கினாலும் போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்பதில்லை.அதனால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மூலப்பொருள் கொள்முதலுக்கான நிதி தேவை அதிகரித்துள்ளது.எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

    தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களோ, எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்தடிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்கிறது. முன் பணம் செலுத்தினால் மட்டுமே பாலியஸ்டர் நூல் கிடைக்கிறது.நிலுவை தொகை வசூலாவதில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை வழங்கினாலே போதும். எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நிதி நெருக்கடி பிரச்சினைகள் ஓரளவு தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×