search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silk"

    • கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
    • கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

    கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.

    • வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
    • பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

    காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

    தரமான அசல் பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.

    மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன. இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமம் ஏற்படுகிறது என்றும் பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனைக் கடைகளில் ஒரிஜினல் போன்று வடிவமைப்பைக் காட்டி தரத்தைக் குறைத்து பட்டுகள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    மேலும் காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகன பதிவு எண்ணை குறி வைத்து இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களில் பின் தொடர்ந்து டிரைவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடைகளுக்கு திசை திருப்பி விடுகின்றனர்.

    அங்கும் அசல் காஞ்சிபுரம் சேலைகள் விற்கப்படுவதில்லை என்பதால் போலியான பட்டுகளை வாங்கி பொதுமக்கள் ஏமாந்து செல்லும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் அதிரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நம்பி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை காணப்படுகிறது.

    இடைத்தரகர்களால் காஞ்சிபுரம் பட்டின் தரமும் மதிப்பும் சிதைத்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அண்ணா, முருகன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச் சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொடுக்கிறோம்.

    மேலும் தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இடைத்தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டு சேலை வாங்க வரும் மக்கள் அசல் காஞ்சிபட்டு என நம்பி போலி பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டு சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதேபோல் இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள். சில சமயங்களில் தாக்குகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது.
    • பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    திருப்பூர் :

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். தரமான பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது. சுமாரான தரம் உள்ள கூடு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது வரை விலை குறையவில்லை.மார்க்கெட்டில் பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனால் பட்டு நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சூலூர்,சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பலர் பட்டுக்கூடு உற்பத்தியை துவக்கியுள்ளனர் என்றனர்.

    • அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.
    • சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் உள்ள காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்திற்கு 58.22 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.

    மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.

    இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் . கதர் பருத்திக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். இதேப்போல் பட்டு 30 சதவீதம், பாலியஸ்டர் 30 சதவீதம், உல்லன் 20 சதவீதத்தில் கிடைக்கும்.

    பொதுமக்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆதவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    முன்னதாக மகாத்மா காந்தி படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபா லகிருஷ்ணன், உதவி இயக்குநர்சாவித்திரி, கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தெரசா மேரி, மேலாளர்சாவித்திரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு கார் டிரைவர் வலை விரித்துள்ளதால் உஷாராக இருக்க போலீஸ் உயர் அதிகாரி அறிவுறுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையோரமாக செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு சுரேஷ் வலை விரித்துள்ளான் சிக்கிய பெண்கள் பற்றிய தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளன.

    காரில் ஆள் இல்லாத நேரத்தில் காரை ஓரமாக அவர்கள் அருகில் நிறுத்தும் சுரேஷ் எங்கம்மா செல்கிறீர்கள் என்றே முதலில் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் எனது முதலாளி சுமங்கலி பூஜை நடத்துகிறார். அதற்காக பெண்களுக்கு பட்டுப் புடவையும் ரூ.10 ஆயிரம் பணமும் தருகிறார். அருகில் தான் அவரது வீடு உள்ளது என்று கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி காரில் ஏறும் பெண்களைத் தான் தனது காம இச்சைக்கு பலி கொடுத்துள்ளார். 

    நகையை மட்டும் பறிகொடுத் திருந்தால் உடனே பெண்கள் புகார் அளித்திருப்பார்கள் என்றும், கற்பையும் சேர்த்து பறி கொடுத்ததால் யாரும் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிகிறது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்று சுரேசிடம் ஏமாறியது பொன்று வேறு யாரிடமும் பெண்கள் ஏமாற வேண்டாம். இலவசமாக எதையாவது வாங்கி தருகிறேன் என்று யாராவது கூறினால் உஷாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். #tamilnews
    ×