search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police instruction"

    கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு கார் டிரைவர் வலை விரித்துள்ளதால் உஷாராக இருக்க போலீஸ் உயர் அதிகாரி அறிவுறுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையோரமாக செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு சுரேஷ் வலை விரித்துள்ளான் சிக்கிய பெண்கள் பற்றிய தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளன.

    காரில் ஆள் இல்லாத நேரத்தில் காரை ஓரமாக அவர்கள் அருகில் நிறுத்தும் சுரேஷ் எங்கம்மா செல்கிறீர்கள் என்றே முதலில் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் எனது முதலாளி சுமங்கலி பூஜை நடத்துகிறார். அதற்காக பெண்களுக்கு பட்டுப் புடவையும் ரூ.10 ஆயிரம் பணமும் தருகிறார். அருகில் தான் அவரது வீடு உள்ளது என்று கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி காரில் ஏறும் பெண்களைத் தான் தனது காம இச்சைக்கு பலி கொடுத்துள்ளார். 

    நகையை மட்டும் பறிகொடுத் திருந்தால் உடனே பெண்கள் புகார் அளித்திருப்பார்கள் என்றும், கற்பையும் சேர்த்து பறி கொடுத்ததால் யாரும் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிகிறது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்று சுரேசிடம் ஏமாறியது பொன்று வேறு யாரிடமும் பெண்கள் ஏமாற வேண்டாம். இலவசமாக எதையாவது வாங்கி தருகிறேன் என்று யாராவது கூறினால் உஷாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். #tamilnews
    ×