search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alert"

    • ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது.
    • பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல.

    குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.


    பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

    சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

    சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

    கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.


    லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

    பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

    • எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
    • பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.

    அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு.
    • நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் தயார்.

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளது.

    நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் முகாமிட்டுள்ளனர்.

    நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

    • நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு நேரம் என்பது மிகவும் அவசியம்.
    • நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

    இன்று நாம் வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், சாப்பிட கூட நேரமில்லை.

    அந்த அளவுக்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால், அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ளக் கிடைத்ததைச் சாப்பிடுகிறோம். ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறோம். அந்தவகையில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, இரவு 9 மணி முதல் 12 மணி வரை சாப்பிடுவார்கள். ஏன் இன்னும் சிலரோ 12 மணிக்கு பிறகு கூட சாப்பிடுவார்கள். சிலர் அதிகாலை 3, 4 மணிக்கெல்லாம் சாப்பிடுவார்கள்.


    இப்படி சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு நேரம் என்பது மிகவும் அவசியம். அவற்றை ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது உறுதி. இரவில் தாமதமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


    நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். அதுபோல, இரவில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் இரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுமாம். இதன் காரணமாக மூளையில் உள்ள இரத்தக்குழாய் வெடித்து ரத்தம் வரக்கூடும் என பல ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக, இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம். இதுவும் பக்கவாதத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது.
    • பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வந்ததை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது. மேலும் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களையும் அங்கே வைத்து அவர் வசித்து வந்துள்ளார்.

    மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுதொடர்பாக ஆய்வு செய்த போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் 1 வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக அவர் கூறி உள்ளார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் அதிகாரிகள் சென்னை வந்தனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட்டு இருக்கும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் விவாதித்தனர். அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைத்து கருத்து கேட்டனர்.

    இந்த ஆய்வு கூட்டத்தின் போது தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டில் முந்தைய தேர்தல்களில் இலவசப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்கள் குறித்தும் பேசினார்.

    இந்த தடவை தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டாலோ அல்லது பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலோ அந்த பகுதிக்குரிய தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    பணப்பட்டுவாடா செய்யப்படுவது வீடியோ ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகுதியை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    நடவடிக்கைகளில் இருந்து தப்ப வேண்டுமானால் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடுத்து நிறுத்துங்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டார். பணப்பட்டு வாடாவை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படைகளை திறமையுடன் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    ஏதாவது தேர்தல் அதிகாரி மீதோ, போலீஸ் அதிகாரி மீதோ திருப்தி ஏற்படாவிட்டால் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ராஜீவ் குமார் எச்சரித்தார். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் இலவசப் பொருட்கள் வினியோகம் மற்றும் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என்பது குறித்து தமிழக போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது காலை 10 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இராமநாதபுரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
    • கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.

    சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

    • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

    வால்பாறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

    இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

    வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×