கசிந்த ரகசியம்... விசாரணை அமைப்புகள் உஷார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார்.தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கசிந்த ரகசியம்... விசாரணை அமைப்புகள் உஷார்!
Published on

மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி சோதனைகளால் தமிழகத்தில் பல பிரபலங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியில் தொடங்கி இப்போது அமைச்சர் எ.வ.வேலு வரை தொடரும் சோதனைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் மத்திய அரசு நம்மை வேவு பார்க்கிறது. வேட்டையாட துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவில் நாளை ரெய்டு வரும். நாளை மறுநாள் வரும்... என்று தனக்கு தகவல்கள் வருவதாகவும் தெரிவித்து இருந்தார். நிஜத்திலும் விசாரணை அமைப்புகளின் ரகசிய திட்டங்கள் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கசிந்து இருப்பதை இப்போது உறுதி செய்துள்ளார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த பணம், ஆவணங்கள் சில இடங்களில் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் வரும் தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்ப டுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com