என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகசியம்"

    • உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
    • நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது.

    உள்ளங்கையின் தன்மைகளை வைத்துக் கூட ஒருவரின் இயல்பு மற்றும் அவரின் தன்மையை நாம் அறிந்து கொள்ள இயலும். இதை பற்றித் தான் இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக, உள்ளங்கையைத் தொட்டுப் பார்த்து, அதன் கடினத்தன்மை, மென்மைத்தன்மையை வைத்து, சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    இதன்படி உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். மென்மைக்கும், கடினத்துக்கும் இடைப்பட்டது: இப்படியான உள்ளங்கை அமைப்பு பலருக்கு இருக்கும். இவர்கள் புத்தி, பலம் இரண்டையும் கொண்டு பிழைப்பவர்கள். கட்டுப்பாடு மிகுந்தவர்கள். எடுத்த காரியத்தை தாமாகவே முடிப்பார்கள். எனினும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

    கடினமான உள்ளங்கை : உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிற்றின்பத்தில் நாட்டம் இருக்கும். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.

    மென்மையான உள்ளங்கை: உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இது போல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.

    மிக பலவீனமான அல்லது மிகக் கடினமான உள்ளங்கை: மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் சமூகத்திற்கு லாயக்கு இல்லாதவர்கள். கோழைகள், கொடியவர்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கு இத்தகைய உள்ளங்கை அமைப்பு இருக்கும்.

    குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.

    மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.

    இராமராஜன்

     

    அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

    உங்கள் உள்ளங்கையின் வண்ணங்களும், உங்கள் இயல்புகளும்: உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது.

    இதனைக் கொண்டு ஒருவர்களின் குண நலன்கள் வருமாறு:-

    மஞ்சள் நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.

    ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.

    சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.

    இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.

    உள்ளங்கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பது மிகவும் மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது, ஸ்வஸ்திக், குறிப்பாக உள்ளங்கையில் காணப்படும் போது, நல்வாழ்வு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் புனித சின்னமாகக் கருதப்படுகிறது.

    குரு அல்லது புதன் மேடுபோன்ற சில மேடுகளில் ஸ்வஸ்திக் குறி தோன்றினால், அது ஒருவரின் சொந்த முயற்சியால் பெறப்பட்ட செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கும். ஆன்மீக நாட்டம்:

    வியாழன் மேடுகளில் ஸ்வஸ்திக் இருப்பது ஆன்மீகத்தின் மீதான நாட்டத்தையோ அல்லது ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீகத் தலைவருடனான தொடர்பையோ குறிக்கலாம்.

    செல்பேசி 9965799409

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார்.
    • தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி சோதனைகளால் தமிழகத்தில் பல பிரபலங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியில் தொடங்கி இப்போது அமைச்சர் எ.வ.வேலு வரை தொடரும் சோதனைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் மத்திய அரசு நம்மை வேவு பார்க்கிறது. வேட்டையாட துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவில் நாளை ரெய்டு வரும். நாளை மறுநாள் வரும்... என்று தனக்கு தகவல்கள் வருவதாகவும் தெரிவித்து இருந்தார். நிஜத்திலும் விசாரணை அமைப்புகளின் ரகசிய திட்டங்கள் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கசிந்து இருப்பதை இப்போது உறுதி செய்துள்ளார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த பணம், ஆவணங்கள் சில இடங்களில் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் வரும் தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்ப டுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்
    • ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும் அதை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்றும் என்று சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

     

    எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

    தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட புளூம்பெர்கின் அறிக்கைக்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

     

    அதாவது தனக்கு 12 வது குழந்தை பிறந்தது உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அதை ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு சொல்வில்லையே தவிர இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

     

    எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×