என் மலர்
நீங்கள் தேடியது "டெஸ்லா"
- உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்.
- பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கை நிறைவேறினால், உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளவனர்.
இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார்
- பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
- பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.
இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
- மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார்.
மும்பை:
உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா ஷோ ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளதால், டெஸ்லா நிறுவனம் தனது முதல் கிளையை அமைக்க மும்பையை தேர்வு செய்தளது.
மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகள் ஆகும்.
இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் உள்ள ஷோரூமில் கார் விற்பனையை இன்று தொடங்கிய டெஸ்லா நிறுவனம், முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கியது. முதல் கார் விற்பனையை மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.
- டெஸ்லா இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையை தொடங்கியது.
- 2025-ல் 2500 கார்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா "Model Y" காரை அறிமுகம் செய்தது. இதற்கான புக்கிங் அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார். ஆனால், சுமார் 600 கார்கள் மட்டுமே இதுவரை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டெஸ்லா காரின் விலை 69.75 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் புக்கிங் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு 2500 கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வரி விதிப்பால் 2025-ன் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியர் மின்சார கார்களின் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. உலகளவில் 51 ஆயிரம் டாலர் முதல் 79 ஆயிரம் டாலர் வரையிலான கார்கள் வெறும் 2800 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
- புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் முற்றிலும் புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மின்சார SUVயின் உயர் செயல்திறன் மாடலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ஜூனிபர் அப்டேட் என்றும் அழைக்கப்படும் புதிய வேரியண்ட், இப்போது டெஸ்லாவின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்ட்களின் மேல் அமர்ந்திருக்கிறது.
ஸ்டான்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது, "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபரால் ஆன பின்புற ஸ்பாய்லர், பிரத்யேகமாக 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பைப் பெறுகிறது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட காற்றியக்கவியல் அதன் செயல்திறன் சார்ந்த நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.

உள்ளே, கார்பன் ஃபைபர் அசென்ட்கள், அல்ட்ரா HD தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 16-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டிங், கூலிங் வசதியுடன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் முன்புற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது சுமார் 460bhp பவர் மற்றும் 751Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது SUV மணிக்கு 0–100 கிலோமீட்டர்கள் வேகத்தை மூன்று வினாடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் அதன் பிரிவில் வேகமான மாடல்களில் ஒன்றாகும்.
- டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற மாடலை விற்பனை செய்கிறது.
- 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி உள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமைத் திறக்க உள்ளது.
இந்த புதிய ஷோரூம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியின் ஏரோசிட்டியில் உள்ள விலையுயர்ந்த வேர்ல்ட்மார்க் 3 வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.
தற்போது, டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது.இதன் ஷோரூம் விலை ரூ. 59.89 லட்சத்தில் தொடங்குகிறது.
இந்த கார் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய 60 kWh பேட்டரி மற்றும் 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
- ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
- மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.
இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.
இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.
இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.
இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.
- சார்ஜ் போடும் நேரத்தில் உணவருந்தும் வசதி.
- உலகம் முழுவதும் விரிவுப்படுத்த எலான் மஸ்க் திட்டம்.
மின்சார கார் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே சார்ஜ் போடுவதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை, வாகன ஓட்டி மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருக்க வேண்டி நிலை ஏற்படும். இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவதற்காக பயன்படுத்தினால், பயணம் நேரம் மிச்சமாகும்.
இதை கருத்தில் கொண்டு TESLA DINER-ஐ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா நிறுவனம தொடங்கியுள்ளது. சார்ஜ் நிலையத்தில் வாகனத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முன்னதாகவே அந்த நிலையத்திற்கு வருவது தொடர்பாகவும், உணவு தேவை என்றால் அது தொடர்பாகவும் ஆர்டர் செய்தால், சார்ஜ் போடும் நேரத்தில் வாகனத்திற்கு உணவு வந்து சேரும். இல்லையென்றால் உணவகத்தில் சென்று சாப்பிடும் வகையில் ஏற்பாமு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் TESLA DINER தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் உலகளவில் விரிவுப்படுத்த மஸ்க் முடிவு செய்துள்ளார்.
- புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும்.
- நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது.
டெஸ்லா மாடல் Y இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீண்ட வீல்பேஸ் மற்றும் ஆறு இருக்கைகள் கொண்ட டெஸ்லா மாடல் Y காரின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ காண உலகம் தயாராகி வருகிறது. புதிய மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வரவில்லை என்றாலும், காரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய மாடலின் விவரங்கள் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (MIIT) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. புதிய நீண்ட வீல்பேஸ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன் மாடல் YL என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வரிசை இருக்கைகள் உள்ளன. அதிக இடம் மற்றும் கூடுதல் இருக்கைகளுடன், இந்த மாடல் அதிக சக்தியையும் தரும்.
இந்த புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும். கேப்டன் இருக்கைகள் இடம் பெற்றிருக்கலாம். இதற்கு ஏற்றவாறு, கார் இப்போது 4,976 மிமீ நீளத்தைக் கொண்டுள்ளது. இது நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது. அதனுடன், உயரமும் 44 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது.

இது நீண்ட வீல்பேஸ் மாடல் என்பதால், டெஸ்லா வீல்பேஸை 3,040 மில்லிமீட்டர் அல்லது தற்போதைய ஐந்து இருக்கைகள் கொண்ட மாடல் Y-ஐ விட 150 மில்லிமீட்டர் நீளமாக நீட்டித்துள்ளது. கூடுதல் நீளத்துடன், புதிய YL சக்கரங்களுக்கான புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் புதிய இருக்கைகளுடன் அழகியலில் சில மாற்றங்களைப் பெறுகிறது.
தற்போது வெளியான தகவல்களின் படி, டெஸ்லா மாடல் YL ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலை விட அதிக சக்தியுடன் வரும். இது 455 hp பவர் வெளியீட்டைக் கொண்டிருக்கும், இது ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலில் 443 hp-ஐ விட அதிகமாகும். அதனுடன், சந்தையில் காரின் மற்றொரு ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இரண்டு மாடல்களின் வெளியீட்டு தேதி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
- டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை முதலமைச்சர் பட்னாவிஸ் திறந்து வைத்தார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், டெஸ்லா ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எலான் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், எலான் மஸ்க்கையும் அவரது டெஸ்லா நிறுவனத்தையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன வாய்ப்புகளில் ஒன்று இப்போது மிகவும் உற்சாகமாகிவிட்டது. போட்டி புதுமைகளை உருவாக்குகிறது. மேலும் நாம் நிறைய தூரம் போகவேண்டியுள்ளது. சார்ஜிங் நிலையத்தில் உங்கள் கார்களை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
- இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.






