என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் விற்பனையை தொடங்கிய டெஸ்லா: முதல் காரை பெற்ற மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்
    X

    இந்தியாவில் விற்பனையை தொடங்கிய டெஸ்லா: முதல் காரை பெற்ற மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்

    • டெஸ்லா நிறுவனம் மும்​பை​யில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்​தது.
    • மகா​ராஷ்டிர முதல் மந்திரி தேவேந்​திர பட்​னா​விஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்​தார்.

    மும்பை:

    உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.

    மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா ஷோ ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது.

    மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளதால், டெஸ்லா நிறுவனம் தனது முதல் கிளையை அமைக்க மும்பையை தேர்வு செய்தளது.

    மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகள் ஆகும்.

    இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் உள்ள ஷோரூமில் கார் விற்பனையை இன்று தொடங்கிய டெஸ்லா நிறுவனம், முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கியது. முதல் கார் விற்பனையை மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×