என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Flying car"
- சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் துபாயில் தனது முதல் பறக்கும் கார் சோதனையை நடத்தியது.
- முதற்கட்ட சோதனையில் பறக்கும் கார் ஆளில்லாமல் 90 நிமிடங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பெங் இன்க் (Xpeng Inc) ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது முதல் பறக்கும் காரை வெளியிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் பறக்கும் காரை வெளியிட பெங் இன்க் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பெங் இன்க் உருவாக்கிய X2 பறக்கும் கார் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள எட்டு ப்ரோபெல்லர்கள் வாகனத்தின் மூலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை முயற்சியாக துபாயில் இந்த பறக்கும் கார் 90 நிமிடங்கள் ஆளின்றி இயக்கப்பட்டது. அடுத்த தலைமுறை பறக்கும் கார்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடல் இது என பெங் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
"சர்வதேச சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். உலகில் புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முன்னோடியாக துபாய் விளங்குகிறது. இதன் காரணமாகவே பறக்கும் கார் சோதனையை இங்கு மேற்கொள்ள முடிவு செய்தோம்," என பெங் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மிங்குவான் கியூ தெரிவித்துள்ளார்.
வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்