search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying car"

    • சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் துபாயில் தனது முதல் பறக்கும் கார் சோதனையை நடத்தியது.
    • முதற்கட்ட சோதனையில் பறக்கும் கார் ஆளில்லாமல் 90 நிமிடங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பெங் இன்க் (Xpeng Inc) ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது முதல் பறக்கும் காரை வெளியிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் பறக்கும் காரை வெளியிட பெங் இன்க் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பெங் இன்க் உருவாக்கிய X2 பறக்கும் கார் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள எட்டு ப்ரோபெல்லர்கள் வாகனத்தின் மூலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை முயற்சியாக துபாயில் இந்த பறக்கும் கார் 90 நிமிடங்கள் ஆளின்றி இயக்கப்பட்டது. அடுத்த தலைமுறை பறக்கும் கார்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடல் இது என பெங் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    "சர்வதேச சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். உலகில் புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முன்னோடியாக துபாய் விளங்குகிறது. இதன் காரணமாகவே பறக்கும் கார் சோதனையை இங்கு மேற்கொள்ள முடிவு செய்தோம்," என பெங் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மிங்குவான் கியூ தெரிவித்துள்ளார்.

    பறக்கும் கார் மாடல்களுக்கான பிரத்யேக விமான நிலையம் உலகில் முதல் முறையாக திறக்கப்பட்டு இருக்கிறது.

    பறக்கும் கார் மாடல்கள் இன்றும் சுவாரஸ்ய கனவாகவே இருந்து வருகிறது. விரைவில் பறக்கும் கார்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பறக்கும் கார் மற்றும் டிரோன்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் ஆக உலகின் முதல் விமான நிலையம் லண்டனில் திறக்கப்பட்டு உள்ளது. 

     விமான நிலையம்

    லண்டனை சேர்ந்த அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இந்த விமான நிலையத்தை பறக்கும் திறந்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஒன் என அழைக்கப்படுகிறது. விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பணிகள் அடுத்த 15 மாதங்களில் முழுமையாக நிறைவு பெற்று விடும். இந்த விமான நிலையம், லண்டனில் இருந்து 155 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது.  

    ஏர் ஒன் விமான நிலையத்தில் இருந்து காற்று மாசு ஏற்படுத்தாத பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏர் டாக்சிக்கள் மற்றும் டிரோன்கள் டேக் ஆஃப் செய்து, தரையிறங்க முடியும். பறக்கும் கார் மற்றும் டிரோன்களுக்கான விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
    பெர்லின்:

    வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.



    அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ‘ரிமோர்ட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×