search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dubai"

    • பீர் முகம்மது ஆதம் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
    • இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம்.

    துபாய்:

    துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல் வாரந்தோறும் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41). இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி மற்றும் 4 வயது மகள் நெல்லையில் வசித்து வருகின்றனர். துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக நானும் என்னுடைய இந்திய, பாகிஸ்தானிய நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிர்ஷ்ட லாட்டரியில் பங்கு பெறுவோம்.

    இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம். முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "துபாய் 24H பந்தயத்தில் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து GT4 பிரிவில் "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" விருதை வென்ற திரு. அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!"

    "பெரிய உறுதியுடன் சவால்களை சமாளித்து உலக அரங்கில் பாரத கொடியை உயரப் பறக்கவிட்டது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்! ஜெய்ஹிந்த்," என குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரைத் துறையை சேர்ந்தவர்கள் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "24H துபாய் 2025 இல் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

    "இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித் குமார் ரேசிங் அணிக்கு நன்றி கூறுகிறேன்."

    "நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்ப்பதில் அஜித் சார் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • துபாய் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது.
    • கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து அஜித் விலகினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.



    கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
    • பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.

    இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.

    வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

    இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார். 

    • மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
    • திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன்.

    80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

     

     சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார். மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறையில் இருந்து 2012 இல் வெளியே வந்த விக்கி கோஸ்வாமியின் 2016 இல் மீண்டும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் சிக்கி கைதானார். இதில் மம்தாவுக்கும் பங்கு உள்ளதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் பிரபல பிரபல நடிகையாக திகழ்ந்த மம்தாவின் குல்கர்னி உடனான உறவு அதிக பரபரப்பாக இந்தி பத்திரிகைகளால் கவர் செய்யப்பட்டது.

     

     

    இந்நிலையில் 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். கையோடு தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் மம்தா குல்கர்னி மும்பையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

    "நான் விக்கியை திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் கணவர் அல்ல. நான் இன்னும் தனியாக இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    விக்கிக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது, ஆனால் நான் அதை முறித்துக்கொண்டேன். விக்கியை அந்த சமயத்தில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன். அவரை பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை விட்டுவிட்டேன்.

     

    2012ல் சிறையில் இருந்து விக்கி வெளியே வந்தார். 2016ல் அவரை சந்தித்தேன். ஆனால் அதன் பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது என் கடந்த காலம். நான் அவரை விட்டுவிட்டேன் என்று மம்தா குல்கர்னி அந்த பேட்டியில் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரிலையன்ஸ் அணி விரும்பினால், இது அவர்களுக்கான சிறந்த டொமைனாக இருக்கும் என நினைக்கிறோம்.
    • எங்களை தொடர்பு கொண்டோ, எங்களை வற்றுபுறுத்தியோ நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை.

    ஜியோவும் ஹாட்ஸ்டாரும் ஒன்றாக இணைந்து செயல்பட இருக்கும் நிலையில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) டொமைன் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியிடம் (சகோதரன் மற்றும் சகோதரி) வசம் இருப்பது தெரியவந்தது.

    இது மிகப்பெரிய பேசும்பொருளாக மாறியது. இந்த நிலையில் இந்த சிறுவர்களுக்கு, டொமைனை எங்களுக்கு தாருங்கள் என பலர் இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனால் மெயில் அனுப்பியவர்கள் உண்மையாக தங்களிடம் அணுகுகிறார்களா? என்பதை பரிசோதிக்க நினைத்தனர்.

    இதனால் தங்களுக்கு வந்த இ-மெயில்களை ஆராய்ந்தனர். இது தொடர்பாக அந்த சிறுவர்கள் கூறியதாவது:-

    சிலர் அனுப்பியது போலி எனத் தெரியவந்தது. சிலர் சீரியஸாக வாங்க விருப்பம் தெரிவித்திருந்தனர். சில அதிக அளவில் பணம் தருவதாக தெரிவித்தனர். ஆனால், இந்த அறிவார்ந்த ஆஃபர்கள் வந்த போதிலும், நாங்கள் டொமைனை ஒருபோதும் விற்பனை செய்ய விரும்பவில்லை. டொமைன் விற்பனைக்கு அல்ல என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம்.

    ஜியோ- ஹாட்ஸ்டார் இணைப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டது. நாங்கள் அனைத்து குழப்பத்திற்கும் பதில் அளிக்க விரும்புகிறோம். இந்த கவனத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை மற்றும் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

    நாங்கள் டெவலப்பருக்கு சப்போர்ட் செய்து, எங்களுடைய சேவை பயணத்தை பகிர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கம்.

    அனைத்து ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அணி விரும்பினால், இது அவர்களுக்கான சிறந்த டொமைனாக இருக்கும் என நினைக்கிறோம். jiohotstar.com டொமைனை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை முறையான ஒப்பந்தங்களில் அடிப்படையில் (proper paperwork) கொடுக்க விரும்புகிறோம்.

    இது ஒட்டுமொத்தமாக எங்களுடைய தேர்வு. ரிலையன்ஸ் நிறுவத்தில் இருந்தோ, எந்தவொரு சட்டம் தொடர்பான குரூப் எங்களை தொடர்பு கொண்டோ, எங்களை வற்றுபுறுத்தியோ நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. நண்பர்கள், குடும்பம் அல்லது மற்ற யாரிடம் இருந்தோ எந்தவித அழுத்தம் இல்லாமல் எங்களுடைய சொந்த முடிவு.

    இவ்வாறு அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக,

    அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.

    இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    • ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்

    அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.

    இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

     

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

    • ஊபரில் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த பயணி.
    • சில நிமிடங்களில் ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார்.

    போக்குவரத்து சேவைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு முன்பதிவு செய்து பயன்படுத்தும் போக்கு நகர பகுதிகளில் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் துபாயில் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணை காட்டுகிறது.

    அதில், அந்த பெண் வாகனம் பழுதடைந்த பிறகு வறண்ட பாலாவன பகுதியின் நடுவில் சிக்கி தவிக்கிறார். அப்போது தனது செல்போனில் உள்ள ஊபர் செயலியில் முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறார்.


    அந்த செயலியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே ஒட்டக சவாரிக்கும் ஆர்டர் செய்யும் வசதி இருப்பதை பார்த்து வியக்கிறார். பின்னர் அவர் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த நிலையில் சில நிமிடங்களில் ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார்.

    இந்த வீடியோ துபாய்-கட்டா சாலையில் உள்ள அல்-படேயர் பகுயில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு பயனர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். 

    • தனியுரிமை காரணங்களுக்காக தீவின் சரியான இடத்தை பகிரவில்லை.
    • சமூகவலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

    துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.


    மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார்.

    இந்நிலையில் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.

    இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார். ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து சவுதிஅல்நடக் கூறுகையில், எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.

    ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதிஅல்நடக்கின் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக சவுதிஅல்நடக் வீடியோ வெளியிட்டிருந்தார்.


    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதில் சவுதி அல்நடக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.

    மேலும் ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் அங்கே ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

    இதைத்தவிர அழகு சிகிச்சைகளுக்காக செலவழித்த பணம் உள்பட ஒரே நாளில் தனக்காக ரூ.60 லட்சம் வரை செலவழித்ததாக சவுதி அல்நடக் வீடியோவில் கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, சவுதி அல்நடக் கூறுகையில், எனது வாழ்க்கை முறையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வருகிறது என்று எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
    • மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.

    துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.

    இன்ஸ்டா பதிவில் விவாகரத்து அறிவித்த ஷைக்கா உலகளவில் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில், தற்போது "டைவர்ஸ்" என்ற பெயரில் வாசனை திரவிய நிறுவனத்தை ஷைக்கா துவங்கியுள்ளார். இந்நிறுவனம் மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.

    புது வகை வாசனை திரவியம் அவரது விவகாரத்தை ஒட்டி நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவகாரத்தை போன்றே புதிய வாசனை திரவிய விளம்பரத்தையும் ஷைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 



    ×