search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anupama"

    • அனுராக் பதக் எழுதிய புத்தகத்தின் திரை வடிவம்தான், 12th ஃபெயில்
    • பத்திரிகை துறையை அனுபமா அவமானப்படுத்தி விட்டார் என்றார் கங்கனா

    கடந்த 2023 அக்டோபர் மாதம் வெளியான இந்தி திரைப்படம், "12th ஃபெயில்" (12th Fail).

    2019ல் அனுராக் பதக் என்பவர், மனோஜ் குமார் ஷர்மா எனும் இந்திய காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தின் திரை வடிவம்தான் 12th ஃபெயில்.

    இத்திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கியிருந்தார்.

    விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா ஒரு முன்னணி திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனிமல், சலார், டங்கி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்ட 12th ஃபெயில் திரைப்படம், ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

    இந்த வெற்றி குறித்து விது வினோத் சோப்ரா தெரிவித்ததாவது:

    இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயன்ற போது, ஓடிடி-யில் (OTT) மட்டுமே வெளியிடுமாறு அனைவரும் என்னை எச்சரித்தனர்.

    என் மனைவி என்னை அச்சுறுத்தினார். இப்படத்தை யார் பார்ப்பார்கள் என என் மனைவியே கூறினார்.

    ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் எங்கள் சொந்த பணத்திலேயே விளம்பரங்கள் செய்தேன். தொடக்கத்தில் இப்படத்திற்கு சிறிய வரவேற்புதான் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் பாருங்கள்.

    இவ்வாறு இயக்குனர் கூறினார்.

    அனுபமா குறித்து சோப்ரா வெளியிட்ட கருத்திற்கு பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    நடிகை கங்கனா கூறியிருப்பதாவது:

    திரைப்பட பத்திரிக்கையாளர் துறையையே அனுபமா அவமானப்படுத்துபவராக உள்ளார்.

    புத்திசாலியான பெண்கள் மற்றும் இளவயது பெண்களை கண்டால் பொறாமைப்படுபவராகவும் உள்ளார்.

    தனது கணவரை கண்டே அவர் பொறாமைப்படுகிறார். கணவரின் வளமையையும் புகழையும் கொண்டுதான் அனுபமா தற்போது அனுபவிக்கும் அனைத்தையும் அடைந்துள்ளார்.

    பாலிவுட் இயக்குனரின் மனைவி எனும் அடையாளத்தை திரைப்பட துறையில் பிரபலமானவர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயன்படுத்துகிறார்.

    உண்மையான திறமைசாலிகளையும், சிறந்த திரைப்படங்களையும் வெறுத்து ஒதுக்கும் வதந்தி கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #Anupama
    மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோர் அறிமுகமானார்கள். மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர்.

    இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்ததுபோல் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா. அந்த படம் பெரிதாக போகவில்லை.



    இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியாக இருக்கிறார். தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அவரை இன்னும் சோகமாக்கி உள்ளது.

    அனுபமாவிடம் ரசிகர்கள், ‘உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபமா சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், ஒரு சில ரசிகர்கள் நடிகை குண்டா இருப்பதால்தான் அழகாக இருக்கிறார். உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்க மாட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    பிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமா, தற்போது புதிய கெட்டப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Anupama #AnupamaParameshwaran
    பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுபமாவுக்கு அழகே அவரது நீளமான சுருள் சுருளான கூந்தல் தான். அனுபமா தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். அனுபமா பரமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.



    இந்நிலையில் அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைமுடியை நறுக்குவதற்கு முன்பாக அனுபமா அதை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார். உங்களுக்கு சுருட்டை முடி தான் அழகு என்று ரசிகர்கள் கூறிய நிலையில் இப்படி செய்துவிட்டார். சில ரசிகர்கள் இந்த தோற்றமும் அழகாக இருப்பதாக கூறி அனுபமாவை உற்சாகப்படுத்தி உள்ளனர்.
    தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது அன்பு தொல்லையில் இருந்து விடுபட்டுள்ளார். #Anupama
    தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மறுப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன.

    அனுபமா இணைய தளத்திலும் கவர்ச்சியான படங்களை வெளியிடுவதில்லை. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் திரையுலகினரை குறிப்பாக இயக்குனர்கள் கவனத்தை ஈர்ப்பதுபோல் அமையவில்லை.

    அனுபமா நடித்துள்ள படங்களில் சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார். அவரது செல்போன் நம்பர் பலருக்கு தெரியும். இந்நிலையில் அனுபமா செல்போனுக்கு தினமும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் செய்தி அனுப்புவதுடன் அவரை செல்போனில் அழைத்து பேசிக் கொண்டே இருப்பார்களாம். இதில் கோபமான அனுபமா என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்.



    திடீரென்று தனது செல்போன் நம்பரை புதிதாக மாற்றியிருக்கிறார். அவரது செல்போன் நம்பர் மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தபோதும் அனுபமா அன்புதொல்லையிலிருந்து மீண்ட நிம்மதியில் இருக்கிறாராம்.
    மலையாளத்தில் பிரேமம் மற்றும் தமிழில் கொடி படம் மூலம் மிகவும் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் பேராசையுடன் இருக்கிறார். #AnupamaParameswaran
    ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர்.

    இவருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் படப்பிடிப்பில் பிரச்சினை என்று செய்தி பரவியது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிரகாஷ் ராஜுடன் 6 மாதம் படப்பிடிப்பு நடந்தது. பிரகாஷ்ராஜ் எனக்கு ஒரு சின்ன அறிவுரை கூற அதை பெரிதாக்கிவிட்டார்கள்.

    எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது என்பது போன்று பேசிவிட்டார்கள். அந்த சம்பவம் நடந்த பிறகு கூட நாங்கள் 25 நாட்கள் படப்பிடிப்பில் சேர்ந்து கலந்து கொண்டோம். படத்தில் எத்தனை ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது இல்லை. என் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களை கைப்பற்ற பேராசையுடன் உள்ளேன்.



    படங்கள் தோல்வி அடைவது அனைவருக்கும் நடப்பது தான். அனைத்து படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்க முடியாது. தோல்வி அடைந்த படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதன் பிறகு கதையை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் தற்போது பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
    கேரளாவில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஒரு புகைப்படத்தை பார்த்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழுதிருக்கிறார். #Anupama
    கன மழை மற்றும் வெள்ளம் கேரளாவை புரட்டிப்போட்டு உள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பம்பை ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மக்களின் மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்து இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவத்தினரும் படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகிறார்கள். 

    வெள்ள சேதத்துக்கு உதவ தமிழ் நடிகர்களும் மலையாள நடிகர்களும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். கேரள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதுபோன்ற ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்படி வந்த ஒரு புகைப்படம் தன்னை அழவைத்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார். 

    அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்தில் ஒரு சிறுமி கழுத்தளவு வெள்ளத்தில் நடந்து செல்கிறார். அவரது தலையில் உள்ள பாத்திரத்தில் ஒரு நாய்க்குட்டி இருக்கிறது. 



    அனுபமா வெளியிட்ட இந்த படத்தை ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நாய்குட்டியை காப்பாற்றும் உணர்வு கொண்ட சிறுமியை பாராட்டி வருகிறார்கள். அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக, கொடி படத்தில் நடித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்தும் வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது நடித்து வரும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்திருக்கிறார். #Anupama
    பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை அனுபமா திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    பிரகாஷுராஜுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது, வசனத்தை முழுமையாக முடியாமல் அனுபமா திணறி இருக்கிறார். அனுபமாவிற்கு ஏற்கனவே குளிர் காய்ச்சல் இருந்ததாகவும், ரத்த அழுத்தம் குறைவானதாலும் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் குணம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ×