search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anupama Parameswaran"

    • கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்
    • அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

    2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.

    கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.

    படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்கனுரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    அனுபமா அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் இன்று படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.
    • கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.

    கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கவுள்ளார். இதற்கு முன் சினிமா பண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்ற தகவலை லைகா நிறுவனம் அவர்களின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இப்படத்திற்கான் ஃபர்ஸ்ட் லுக்கை மே 6 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். சமீபத்தில் லைகா நிறுவனம் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினர் அதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த குறும்படத்தின் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தனர். அதில் ஒருவர் தான் ஏ.ஆர் ஜீவா.

    இப்படம் பெண்களை மையப்படுத்தும் கதைக்களத்தோடு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
    • அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு சித்து ஜொனலகட்டா நடிப்பில் அறிமுக இயக்குனரான விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு.

    நேஹா ஷெட்டி, பிரின்ஸ் செசில் , பிரம்மாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.

    அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி  கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

    படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன்.
    • இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

     

    சைரன்

    சைரன்


    இந்நிலையில் 'சைரன்' படத்தில் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி ஜெயிலர் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுபமா.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் ’18 பேஜஸ்’ திரைப்படம் வெளியானது.

    2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


    அனுபமா பரமேஸ்வரன்

    சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான '18 பேஜஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அனுபமா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


    அனுபமா பரமேஸ்வரன்

    அதாவது, ரூ.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா படங்களின் தொடர் வெற்றியால் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்பதாகவும் இந்த தொகையை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.
    • இவர் தற்போது நடித்து வரும் படம் சைரன்.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார்.


    ஜெயம் ரவி

    இதையடுத்து இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்‌ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.


    அனுபமா பரமேஸ்வரன்

    இந்நிலையில் 'சைரன்' படத்தில் இணைந்திருக்கும் மற்றொரு பிரபலத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் பிரபலமாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #Anupama
    மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோர் அறிமுகமானார்கள். மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர்.

    இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்ததுபோல் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா. அந்த படம் பெரிதாக போகவில்லை.



    இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியாக இருக்கிறார். தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அவரை இன்னும் சோகமாக்கி உள்ளது.

    அனுபமாவிடம் ரசிகர்கள், ‘உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபமா சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், ஒரு சில ரசிகர்கள் நடிகை குண்டா இருப்பதால்தான் அழகாக இருக்கிறார். உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்க மாட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது அன்பு தொல்லையில் இருந்து விடுபட்டுள்ளார். #Anupama
    தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மறுப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன.

    அனுபமா இணைய தளத்திலும் கவர்ச்சியான படங்களை வெளியிடுவதில்லை. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் திரையுலகினரை குறிப்பாக இயக்குனர்கள் கவனத்தை ஈர்ப்பதுபோல் அமையவில்லை.

    அனுபமா நடித்துள்ள படங்களில் சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார். அவரது செல்போன் நம்பர் பலருக்கு தெரியும். இந்நிலையில் அனுபமா செல்போனுக்கு தினமும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் செய்தி அனுப்புவதுடன் அவரை செல்போனில் அழைத்து பேசிக் கொண்டே இருப்பார்களாம். இதில் கோபமான அனுபமா என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்.



    திடீரென்று தனது செல்போன் நம்பரை புதிதாக மாற்றியிருக்கிறார். அவரது செல்போன் நம்பர் மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தபோதும் அனுபமா அன்புதொல்லையிலிருந்து மீண்ட நிம்மதியில் இருக்கிறாராம்.
    மலையாளத்தில் பிரேமம் மற்றும் தமிழில் கொடி படம் மூலம் மிகவும் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் பேராசையுடன் இருக்கிறார். #AnupamaParameswaran
    ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர்.

    இவருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் படப்பிடிப்பில் பிரச்சினை என்று செய்தி பரவியது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிரகாஷ் ராஜுடன் 6 மாதம் படப்பிடிப்பு நடந்தது. பிரகாஷ்ராஜ் எனக்கு ஒரு சின்ன அறிவுரை கூற அதை பெரிதாக்கிவிட்டார்கள்.

    எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது என்பது போன்று பேசிவிட்டார்கள். அந்த சம்பவம் நடந்த பிறகு கூட நாங்கள் 25 நாட்கள் படப்பிடிப்பில் சேர்ந்து கலந்து கொண்டோம். படத்தில் எத்தனை ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது இல்லை. என் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களை கைப்பற்ற பேராசையுடன் உள்ளேன்.



    படங்கள் தோல்வி அடைவது அனைவருக்கும் நடப்பது தான். அனைத்து படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்க முடியாது. தோல்வி அடைந்த படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதன் பிறகு கதையை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் தற்போது பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்தும் வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது நடித்து வரும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்திருக்கிறார். #Anupama
    பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை அனுபமா திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    பிரகாஷுராஜுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது, வசனத்தை முழுமையாக முடியாமல் அனுபமா திணறி இருக்கிறார். அனுபமாவிற்கு ஏற்கனவே குளிர் காய்ச்சல் இருந்ததாகவும், ரத்த அழுத்தம் குறைவானதாலும் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் குணம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ×