என் மலர்
நீங்கள் தேடியது "anupama parameswaran"
- கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது
- படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது
ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது.
இந்நிலையில் மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் மழைநேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
- இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
- இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- இப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டது.
- லாக்டவுன் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கனா கலைந்துமே போனதே பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில், 'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.
- சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து என்னைப் பற்றியும், என் குடும்பத்தினரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றியும் மிகவும் தவறான தகவல்களை பரப்பி, அதில் என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை டேக் செய்வதும் எனக்குத் தெரிய வந்தது.
அந்தப் பதிவுகளில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபோன்று ஆன்லைனில் என்னை டார்கெட் செய்வதை பார்ப்பது மிகவும் வருத்தமாக இருந்தது.
மேலும் இதுகுறித்து விசாரிக்கையில், அந்த நபர், என்னைப் பற்றி தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் பல போலி கணக்குகளை உருவாக்கியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அறிந்ததும், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். அவர்களின் உதவியுடன், இந்த செயல்களுக்கு பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் இந்த செயலின் பின்னல் உள்ளார் என்பது எனக்கு தெரிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இளம் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவளுடைய அடையாளத்தை வெளியிட நான் விரும்பவில்லை.
இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் பிறரை துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ அல்லது வெறுப்பைப் பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.
ஆன்லைனில் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச்செல்கிறது. இது தொடர்பாக நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார். சைபர் தொல்லை என்பது தண்டனைக்குரிய குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.
- கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அற்புதமாக திரையில் தந்துள்ளார் மாரி செல்வராஜ்.
- சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாக தொடர வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தை பாராட்டி பாஜக முன்னாள் மணிலா தலைவர் அண்ணலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகன் திரு. துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு. பசுபதி அவர்கள், திரு. லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் என அறிவிப்பு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'பைசன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் நன்றி தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
இதனிடையே, 'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'பைசன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்' -சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பைசன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- பைசன் படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அண்மையில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கபடி வீரர் மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் மனத்தி கணேசன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் சார் (சந்தனராஜ்) அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன்" என்று தெரிவித்தார்.
- ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
- குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும் என்று அப்பா பசுபதி மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் அக்கா ரெஜிசா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் பெரிய கபடி வீரனாக ஆக வேண்டும் என்று துருவ் விக்ரம் ஆசைப்பட்டு வருகிறார்.
அதே ஊரில் வசிக்கும் அமீரும், லால்-லும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இந்த சண்டை துருவ் விக்ரம் கபடி விளையாட்டிற்கு முட்டுக் கட்டியாக இருக்கிறது.
இறுதியில் தடைகளை கடந்து துருவ் விக்ரம் கபடி விளையாட்டில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துருவ் விக்ரம், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். விளையாட்டு வீரருக்கான உடல் அமைப்பு, உடல் மொழி என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாதிக்க முடியாத ஏக்கம், காதல், என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விடாமல் காதலிப்பது, காதலுக்காக வீட்டை எதிர்த்து சண்டை போடுவது என கவனிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் பசுபதியின் நடிப்பு. மகனை நினைத்து வருந்துவது, அடிவாங்குவது, என கிடைக்கும் இடங்களில் எல்லாம் அசத்தி இருக்கிறார். பாசமான அக்காவாக மனதில் பதிந்து இருக்கிறார் ரெஜிசா விஜயன்.
ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன், எப்படி வாழ்க்கையில் முன்னேறி வருகிறான் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒரு பிளாஷ்பேக் சொல்லும் போது அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் வருவதை தவிர்த்து இருக்கிறார். வழக்கமாக அவருக்கே உரிய குறிப்பிட்ட சமூகத்தை பற்றியே படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் நீளமும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவீனமாக அமைத்து இருக்கிறது.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
- பைசன் பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
- பைசன் படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தின் திரைக்கதை புனைவு என்றும் உண்மை சம்பவம் இல்லை என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பைசன் (காளமாடன்) இத்திரைப்படம் எனது பால்யகால நாயகன் "மணத்தி" P.கணேசன் அவர்களின் வாழ்வையும் உழைப்பையும் கபடியையும் அவர் அடைந்த பெரு வெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இத்திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு முழு புனைவு திரைக்கதையே ஆகும். ஆகவே இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் என இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர யாரையும் எந்த நிகழ்வுகளையும் உண்மையாக காட்டப்படவேயில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
பைசன் (காளமாடன்) என்பவன் நிச்சயம் ஒருவன் அல்ல, தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்க துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன்தான் என் காளமாடன்" என்று தெரிவித்துள்ளார்.






