என் மலர்
நீங்கள் தேடியது "anupama parameswaran"
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது
- 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்த 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா' படம் சென்சார் வாரியம் மூலம் பிரச்சனையை சந்தித்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது என சென்சார் வாரியம் கூறியது.
மேலும் படத்தில் 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இதன் விசாரணையில், சென்சார் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தங்கள் வாதங்களை முன்வைத்தார். படத்தின் தலைப்பை கதாநாயகியின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் 'வி. ஜானகி vs. கேரளா மாநிலம்' அல்லது 'ஜானகி வி. vs. கேரளா மாநிலம்' என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் கதாநாயகியின் பெயரை மியூட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எதிர்காலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
வாரியத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய இடைவேளைக்கு பிறகு ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், பரிந்துரைத்தபடி படத்தின் தலைப்பை மாற்றுவதற்கும், வசனங்களை மாற்றுவதற்கும் தனது தரப்பு சம்மதிப்பதாக தெரிவித்தார்.
அதே நேரம் படத்தில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுகளுக்கு பதிலாக 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கள் மேற்கொள்ள இரு தரப்புக்கும் இடையில் முடிவு எட்டப்பட்டது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் தலைப்புடன், அனுபமா நடித்த முக்கிய கதாபாத்திரமான 'ஜானகி' என்ற பெயருக்கும் சென்சார் வாரியம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குனர் பிரவீன் நாராயணும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் திரையிடலுக்கு சென்சார் வாரியம் அனுமதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFCA) பொதுச் செயலாளரும் பிரபல இயக்குநருமான உன்னி கிருஷ்ணன், படத்தில் 'ஜானகி' என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று தணிக்கை வாரியம் படத் தயாரிப்பாளர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளதாக கூறினார். படத்தின் தலைப்போடு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையும் மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்ததாக உன்னி கிருஷ்ணன் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார். கடந்த காலத்தில் மற்றொரு மலையாளப் படத்திலும் இதேபோன்ற பிரச்சினை எழுந்ததை அவர் நினைவு கூர்ந்தார், அப்போது 'ஜானகி' என்ற பெயர் 'ஜெயந்தி' என்று மாற்றப்பட்டு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் கிடைக்காததை தொடர்ந்து படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு குறித்து படக்குழு என்ன முடிவு எடுக்கும், சென்சார் வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி கதாபாத்திரத்தின் பெயர் மாறுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன்.
- இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுபமா.
- இவர் நடிப்பில் சமீபத்தில் ’18 பேஜஸ்’ திரைப்படம் வெளியானது.
2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன்
சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான '18 பேஜஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அனுபமா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அனுபமா பரமேஸ்வரன்
அதாவது, ரூ.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா படங்களின் தொடர் வெற்றியால் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்பதாகவும் இந்த தொகையை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன்.
- இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

சைரன்
இந்நிலையில் 'சைரன்' படத்தில் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி ஜெயிலர் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
- அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சித்து ஜொனலகட்டா நடிப்பில் அறிமுக இயக்குனரான விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு.
நேஹா ஷெட்டி, பிரின்ஸ் செசில் , பிரம்மாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கவுள்ளார். இதற்கு முன் சினிமா பண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்ற தகவலை லைகா நிறுவனம் அவர்களின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இப்படத்திற்கான் ஃபர்ஸ்ட் லுக்கை மே 6 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். சமீபத்தில் லைகா நிறுவனம் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினர் அதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த குறும்படத்தின் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தனர். அதில் ஒருவர் தான் ஏ.ஆர் ஜீவா.
இப்படம் பெண்களை மையப்படுத்தும் கதைக்களத்தோடு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்
- அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.
படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்கனுரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
அனுபமா அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் இன்று படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.
- தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.
படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் நாளை 11 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் இம்மாதம் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் லாக்டவுன் காலகட்டத்தில் நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மிகவும் பரப்பரபாக இருக்கும் காட்சிகள் அமைந்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஷ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடக்ககூடிய கதையாக அமைந்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.