என் மலர்
நீங்கள் தேடியது "அனுபமா பரமேஷ்வரன்"
- இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
- இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
- இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- இப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டது.
- லாக்டவுன் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கனா கலைந்துமே போனதே பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இன்று 6 மணிக்கு 'காளமாடன் கானம்' பாடல் வெளியாக உள்ளதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
அதன்படி, காளமாடன் கானம் பாடல் வெளியாகியுள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது
- 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்த 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா' படம் சென்சார் வாரியம் மூலம் பிரச்சனையை சந்தித்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது என சென்சார் வாரியம் கூறியது.
மேலும் படத்தில் 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இதன் விசாரணையில், சென்சார் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தங்கள் வாதங்களை முன்வைத்தார். படத்தின் தலைப்பை கதாநாயகியின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் 'வி. ஜானகி vs. கேரளா மாநிலம்' அல்லது 'ஜானகி வி. vs. கேரளா மாநிலம்' என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் கதாநாயகியின் பெயரை மியூட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எதிர்காலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
வாரியத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய இடைவேளைக்கு பிறகு ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், பரிந்துரைத்தபடி படத்தின் தலைப்பை மாற்றுவதற்கும், வசனங்களை மாற்றுவதற்கும் தனது தரப்பு சம்மதிப்பதாக தெரிவித்தார்.
அதே நேரம் படத்தில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுகளுக்கு பதிலாக 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கள் மேற்கொள்ள இரு தரப்புக்கும் இடையில் முடிவு எட்டப்பட்டது.
- நடிகை அனுபமா பரமேஷ்வரன் தமிழில் 'கொடி' படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார்.
- ஜெயம்ரவி நடித்திருக்கும் ’சைரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2015-ல் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஷ்வரன். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையொட்டி தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.தொடர்ந்து தமிழில் 'கொடி' படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் 'சைரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் பட வாய்ப்புக்காக படுக்கை அறையில் நடிக்க தயாராக இருப்பதாகவும், 'லிப் லாக்' காட்சிகளில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நடிகை அனுபமா பரமேஷ்வரன் படங்களின் தொடர் வெற்றியால் தன் சம்பளத்தை உயர்த்தியதாக செய்தி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.






