என் மலர்
நீங்கள் தேடியது "Kerala High Court"
- சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
- முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை மற்றும் எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. எரிமேலியில் விற்பனை செய்யப்படும் ரசாயன குங்குமம் குறித்து சில கருத்துக்களை வக்கீல் ஒருவர் ஐகோர்ட்டில் முன் வைத்தார்.
எரிமேலியில் பேட்டை துள்ளலில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடலில் பல வண்ண குங்குமபொடிகளை பூசிக் கொள்வார்கள். முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரசாயன குங்குமம் சந்தைகளில் முன்னணியில் உள்ளது.
அந்த குங்குமத்தையே பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்பு அவர்கள் ஷாம்பு மற்றும் சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தி ஆற்றில் குளிக்கிறார்கள். ஷாம்பு மற்றும் சோப்பு இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் கண்ட இடத்தில் வீசப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து சபரிமலை-எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு-சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை விற்பனை செய்யதடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தேவசம்போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யவும் ஐகோர்ட் ஆணையிட்டது. இந்த விஷயத்தில் எரிமேலி பஞ்சாயத்து மற்றும் செங்கனூர் நகராட்சி ஆகியவை சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 12-ந்தேதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும், அப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
- ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் இருவர் கைது.
- லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் நள்ளிரவு நேரத்தில் பாரில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். அப்போது நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், தங்களிடம் தகராறு செய்த எதிர் தரப்பை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவரை தங்களது காரில் கடத்தி தாக்கியதாக தெரிகிறது.
பின்பு அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐ.டி. ஊழியர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தன்னை காரில் கடத்தி தாக்கியபோது லட்சுமிமேனன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருந்ததாக அலியார் ஷா சலீம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைதொடர்ந்து, ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகிய 2 பேரை எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஐ.டி.ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்டபோது நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடத்தல் சம்பவம் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகை லட்சுமி மேனனை எர்ணாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, ஐ.டி.ஊழியரை தாக்கிய புகாரில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து கோரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பெண் அரசியல்வாதிக்கு நற்பெயரை கெடுக்கும் வகையில் வீடியோ பதிவு.
- கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள் என கண்டிப்பு.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் டி.பி. நந்தகுமார். இவர் அவருடைய யூடியூப் சேனலில், தன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவதிமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக, பிரபல பெண் அரசியல்வாதி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பத்திரிகையாளர் நந்தகுமார் முன்ஜாமின் கேட்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக் குவந்தது.
அப்போது நீதிபதிகள் "உங்களுடைய யூடியூப் வீடியோக்களை வைத்து மக்களை குற்றவாளிகளாக்க விரும்புகிறீர்காள?. தண்டனை அல்லது விடுதலை யூடியூப் வீடியோ அடிப்பயைில் நிகழ்வதில்லை. நீதிமன்றம் அதைச் செய்கிறது. யூடியூப்பில் நல்ல விசயங்களை சொல்லுங்க. இந்த குற்றத்தை ஏன் ஆன்லைனில் போடுகிறீர்கள்?. கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள்" என நீதிபதிகள் தெரிவித்துனர்.
அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது
- 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்த 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா' படம் சென்சார் வாரியம் மூலம் பிரச்சனையை சந்தித்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது என சென்சார் வாரியம் கூறியது.
மேலும் படத்தில் 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இதன் விசாரணையில், சென்சார் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தங்கள் வாதங்களை முன்வைத்தார். படத்தின் தலைப்பை கதாநாயகியின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் 'வி. ஜானகி vs. கேரளா மாநிலம்' அல்லது 'ஜானகி வி. vs. கேரளா மாநிலம்' என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் கதாநாயகியின் பெயரை மியூட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எதிர்காலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
வாரியத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய இடைவேளைக்கு பிறகு ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், பரிந்துரைத்தபடி படத்தின் தலைப்பை மாற்றுவதற்கும், வசனங்களை மாற்றுவதற்கும் தனது தரப்பு சம்மதிப்பதாக தெரிவித்தார்.
அதே நேரம் படத்தில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுகளுக்கு பதிலாக 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கள் மேற்கொள்ள இரு தரப்புக்கும் இடையில் முடிவு எட்டப்பட்டது.
- திருமணமான பெண், பொய் வாக்குறுதி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு ஆண் மீது புகார்.
- ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமண வாக்குறுதி அடிப்படையில் பாலியல் உறவுக்கு பிறகு திருமணமான பெண் புகார்: கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு/ Married woman cannot claim she was coerced into sex on false promise of marriage Kerala High Court
திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணம் செய்த பெண் ஆண் ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்பபை வழங்கியுளளது.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், 2.5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிறகு தனது போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக, ஆண் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் அடிப்படையில் போலீசார் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது போலீசார் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் அவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும்.
வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீதிமன்றம் இந்த நேரத்தில் அந்த உறவு சம்மதத்துடன் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது கடினம் என்பது கவனிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கிடையேயான பாலியல் உடலுறவு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியுடன் நடந்ததாகக் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நபருக்கு ஜாமின் வழங்கியது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- ஹேமா கமிட்டி அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன.
- வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் வழக்குகள் கைவிடப்பட்டதாக அறிவிப்பு.
ஹேமா கமிட்டி கேரள அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை, மலையாள திரையுலகை அதிர்ச்சியில் உலுக்கியது. சினிமா நடிகைகள், சினிமா துறைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அறிக்கை அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் முன்வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக்கு குழு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் கைவிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
- இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
- பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர்.
மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.
பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.
அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 30-வது நாளில் இறந்து கிடந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாதது. அது அந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விசாரணை பொருத்தமானதல்ல என்ற பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.
'கோவிட்' காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
- வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூரிடம் கேரள பார் கவுன்சிலும் விளக்கம் கேட்டது.
திருவனந்தபுரம்:
கேரள ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகியாக இருப்பவர் ஷைபி ஜோஸ் கிடங்கூர்.
இவர், கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள் சிலர் அளித்த புகார் மனுவை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கேரள ஐகோர்ட்டு பதிவாளர், போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினார்.
கேரள ஐகோர்ட்டு பதிவாளர் அளித்த கடிதத்தை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூரிடம் கேரள பார் கவுன்சிலும் விளக்கம் கேட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் கவுன்சிலின் கண்காணிப்பு பிரிவு அறிக்கை அளித்துள்ளது.
- கேரளாவை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
- இந்த சம்பவம் அரசு மற்றும் போலீசின் அமைப்பு ரீதியான தோல்வி என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கடந்த 9-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமனை ஊழியர்களை தக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த டாக்டர் வந்தனா தாஸ் உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அரசையும், காவல்துறையையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை, அதில் இருந்து முற்றிலுமாக தவறிவிட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், போலீசாரிடம் துப்பாக்கி இல்லையா? மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் முதன்மை கடமையல்லவா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கேரள டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மருத்துவமனை தாக்குதல் சம்பவம் சுமார் 4 நிமிடங்களுக்குள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நிலைமை இவ்வாறு இருந்தால் குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த சம்பவம் அரசு மற்றும் போலீசின் அமைப்பு ரீதியான தோல்வி என கருத்து தெரிவித்தனர்.
- சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும்.
- மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
திருவனந்தபுரம்:
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன்.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வேறு சிலரும் இதேபோல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர்.
அதை ஏற்க மறுத்த கோர்ட்டுகள் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சபரிமலை கோவிலுக்கு சென்ற நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர்.
- திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






