என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா உயர்நீதிமன்றம்"
- அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
- உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்தி வைக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் அடுத்த மாதம் 9, 11-ல் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதை ஒத்திவைக்க மட்டுமே கோருகிறோம் என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார்.
இதையடுத்து இந்த இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெண் அரசியல்வாதிக்கு நற்பெயரை கெடுக்கும் வகையில் வீடியோ பதிவு.
- கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள் என கண்டிப்பு.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் டி.பி. நந்தகுமார். இவர் அவருடைய யூடியூப் சேனலில், தன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவதிமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக, பிரபல பெண் அரசியல்வாதி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பத்திரிகையாளர் நந்தகுமார் முன்ஜாமின் கேட்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக் குவந்தது.
அப்போது நீதிபதிகள் "உங்களுடைய யூடியூப் வீடியோக்களை வைத்து மக்களை குற்றவாளிகளாக்க விரும்புகிறீர்காள?. தண்டனை அல்லது விடுதலை யூடியூப் வீடியோ அடிப்பயைில் நிகழ்வதில்லை. நீதிமன்றம் அதைச் செய்கிறது. யூடியூப்பில் நல்ல விசயங்களை சொல்லுங்க. இந்த குற்றத்தை ஏன் ஆன்லைனில் போடுகிறீர்கள்?. கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள்" என நீதிபதிகள் தெரிவித்துனர்.
அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- திருமணமான பெண், பொய் வாக்குறுதி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு ஆண் மீது புகார்.
- ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமண வாக்குறுதி அடிப்படையில் பாலியல் உறவுக்கு பிறகு திருமணமான பெண் புகார்: கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு/ Married woman cannot claim she was coerced into sex on false promise of marriage Kerala High Court
திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணம் செய்த பெண் ஆண் ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்பபை வழங்கியுளளது.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், 2.5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிறகு தனது போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக, ஆண் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் அடிப்படையில் போலீசார் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது போலீசார் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் அவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும்.
வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீதிமன்றம் இந்த நேரத்தில் அந்த உறவு சம்மதத்துடன் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது கடினம் என்பது கவனிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கிடையேயான பாலியல் உடலுறவு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியுடன் நடந்ததாகக் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நபருக்கு ஜாமின் வழங்கியது.
- ஹேமா கமிட்டி அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன.
- வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் வழக்குகள் கைவிடப்பட்டதாக அறிவிப்பு.
ஹேமா கமிட்டி கேரள அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை, மலையாள திரையுலகை அதிர்ச்சியில் உலுக்கியது. சினிமா நடிகைகள், சினிமா துறைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அறிக்கை அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் முன்வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக்கு குழு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் கைவிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
- குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
- ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லை.
தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.






