என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா ஐகோர்ட்டு"

    • இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
    • பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர்.

    மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.

    பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.

    அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 30-வது நாளில் இறந்து கிடந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாதது. அது அந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விசாரணை பொருத்தமானதல்ல என்ற பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    'கோவிட்' காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது.
    • பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 13 வயது சிறுமியை அவரது மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். அவரது வயிற்றில் உருவான 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி, சிறுமியின் பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியது. மேலும் கருகலைப்பு அரசு மருத்துவமனையில் நடைபெற வேண்டும். இதில் குழந்தை உயிருடன் இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குழந்தையை பெற்று கொள்ள சிறுமியின் பெற்றோர் மறுத்தால், அந்த குழந்தையை வளர்க்க அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய கோர்ட்டு, அரசுக்கும் சில பரிந்துரைகளை தெரிவித்தது. தற்போது கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது. இதுபோன்ற சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.

    தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்கள் மூலமாக தவறான கருத்துக்களை பார்க்கும் நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதன்படி பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று கோர்ட்டு கருதுகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    ×