search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postponed"

    • பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.

    முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
    • சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
    • மக்கள் கருத்துகேட்பு கூட் நாள் 18.5.2023ந் தேதி நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடாங்கி பாளையம் கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம் நிறுவனம் 35.78.28 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள்அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 20.4.2023 அன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உத்தே சிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு இருந்தது.மேற்குறிப்பிட்ட நாளில் தமிழக தலைமை செயலாளரால் சென்னையில் ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்ட நாள் 18.5.2023ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. #JactoGeo #Protest #Postponed
    மதுரை:

    ஜாக்டோ-ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருந்தோம். ஆனால் ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் போராட்டத்தை ஒத்திவைத்தோம்.

    இதற்கிடையில் எங்கள் வழக்கு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு நீதிபதிகள், அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதிக்குள் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். எனவே எங்களது போராட்டத்தை அடுத்த மாதம் 7-ந் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

    புதிய பென்சன் திட்டம் குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை தாக்கல் செய்தும், அரசு இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் 21 மாத நிலுவை தொகை வழங்க அரசு தயாராக உள்ளதாக தெரிகிறது. எங்களை பொறுத்தவரை அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். ஐகோர்ட்டு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே, ஜாக்டோ- ஜியோ தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நேற்று நடந்தது.

    விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத நிலுவை தொகையை அளிப்பது பற்றி, அரசு ஊழியர் சங்கம் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரித்து சித்திக் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீதர் கமிட்டி, சித்திக் கமிட்டி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, அந்த கமிட்டியே ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Sophia #Tamilisai
    மதுரை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாணவி சோபியா திடீர் கோஷமிட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் சோபியாவுக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இந்தநிலையில் தன் மீது தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி சோபியா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், “விமானத்தில் கோஷமிட்டது தொடர்பாக போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாகும். எனவே தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடி கோர்ட்டில் மனுதாரர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Sophia #Tamilisai
    வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike
    மதுரை:

    மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமதுயூனிஸ் ராஜா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நோயாளிகளுக்கு ஆபரேசன் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.



    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமி‌ஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    கஜா புயல் நிவாரண பணிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் டாக்டர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றித்தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நீதிபதிகள் கடந்த 15 நாட்களாக கஜா புயல் நிவாரண பணிகள் நடக்கிறது. அதற்கு முன்பே ஏன் டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

    அரசு டாக்டர்கள் சங்க வக்கீல் வாதாடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையும், பதவி உயர்வை மட்டுமே செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர் வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike


    டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதி 13ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #dspvishnupriyasuicidecase

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு பிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் வழக்கை கைவிடுவதாக கூறி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் தொடர்பான ஆதாரம் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றார். விஷ்ணு பிரியா தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் அருண்மொழி வாதாடும் போது, சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது போல் தான் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதில் உயர் அதிகாரி உள்பட 7 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தன்மை தெரியும் என்றார். 7 பேரையும் அழைத்து விசாரணை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக வருகிற 13-ந் தேதி முடிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி நாகராஜ் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். #dspvishnupriyasuicidecase 

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கை 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #AIADMK #SC
    புதுடெல்லி:

    தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்குகளின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி வருகிற 27-ந் தேதி இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். #AIADMK #SC

    சென்னை தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege
    சென்னை:

    கஜா புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



    ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைத்தனர். #MiddayMealWorkers
    சென்னை:

    காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு, பணிக்கொடை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கடந்த 29-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அவர்களுடன் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் சத்துணவு பணி பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, போராட்டம் நடத்திய சங்க நிர்வாகிகளுடன் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்தது. பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து சத்துணவு ஊழியர்களுடன் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

    சத்துணவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. #MiddayMealWorkers
    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஷப், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



    இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், இவ்வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க கேரளா ஐகோர்ட்டில் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை அனுமதித்த நீதிபதி விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். #JalandharBishop #FrancoMulakkal
    ×