search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anticipatory bail"

    • சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அமராவதியில் உள்வட்ட சாலை சீரமைப்பு பணியில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது லோகேஷ் தனது தந்தையை ஜாமீனில் வெளியே எடுக்க டெல்லியில் தங்கி உள்ளார். அவர் டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் லோகேஷ் முன்ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பளித்தார். #RobertVadra #AnticipatoryBail
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.

    அந்த கெடு முடிந்ததால் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக எந்த முடிவையும் நீதிபதி அரவிந்த் குமார் நேற்று எடுக்கவில்லை.

    அதேசமயம் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ந் தேதி பிறப்பிப்பதாக கூறி அன்றைய தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். #RobertVadra #AnticipatoryBail 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் முகுல் ராய் முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில்  பங்கேற்றார்.

    சத்யஜித் பிஸ்வாஸ்

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய்  இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவின் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    குட்கா முறைகேடு வழக்கில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டரின் பெயர் இல்லாததால், அவருக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GutkhaCase #HighCourt
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் அதிகாரிகள் செந்தில்முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அதிகாரிகள் இருவரும் கடந்த 45 நாட்களாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ., சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில், அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்தார்.

    இதேபோல இந்த குட்கா வழக்கில் தூத்துக்குடி, சிப்காட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    தேவையில்லை

    இந்த மனுவும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘குட்கா வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத்தை குற்றவாளியாக சேர்க்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை மட்டுமே அவரிடம் நடத்தப்பட்டது’ என்றார்.ஃ

    அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் மீது வழக்கே இல்லாதபோது, முன்ஜாமீன் தேவையற்றது. அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #GutkhaCase #HighCourt
     
    பூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. #KarunasMLA
    மதுரை:

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்வதற்கு சமீபத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



    இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை கருணாசை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். #KarunasMLA
    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஷப், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



    இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், இவ்வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க கேரளா ஐகோர்ட்டில் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை அனுமதித்த நீதிபதி விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். #JalandharBishop #FrancoMulakkal
    ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த குற்றப்பத்திரிகை குறித்து வரும் 31-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஆய்வு செய்ய உள்ளார்.



    எனவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ. நிர்பந்தப்பட்டதாக சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

    இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram

    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. #ShashiTharoor #SunandaPushkarDeathCase
    புதுடெல்லி:

    மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீசார் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது.

    எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். அவரது மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.



    மேலும், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் சசி தரூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சசி தரூருக்கு முன்ஜாமீன் அளித்தால் அவர் நாட்டை விட்டு தப்பி செல்லக் கூடும் என்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கை கையாளும் சிறப்பு விசாரணை குழு கடும் எதிப்பு தெரிவித்தது. ஆனால், இந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.  #ShashiTharoor #SunandaPushkarDeathCase
    வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக கணக்கு சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் அளித்துள்ளது. #KarthiChidambaram #anticipatorybail #BlackMoneycase
    சென்னை:

    சட்டத்தை மீறிய வகையில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக கணக்குகளை சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்புப் பண தடுப்பு சடத்தின்கீழ் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த விவாகரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க நேற்று நள்ளிரவு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வீட்டுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்கள் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், சதிஷ் பராசரன் 
    மூலம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிந்து வருமான வரித்துறை வக்கீலும் அதிகாரிகளும் நள்ளிரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

    வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தனது மனைவி, குழந்தைகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்ல தயாராகும் நிலையில் தனக்கெதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பியதும், வரும் 28-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். 

    இதையே எழுத்துமூலமான வாக்குறுதியாக பதிவு செய்யுமாறு கூறிய நீதிபதி இந்திரா பானர்ஜி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்டை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறை வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். பிடி வாரண்ட் நிறுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார். #KarthiChidambaram #anticipatorybail  #BlackMoneycase
    டைரக்டர் கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
    மதுரை:

    சினிமா இயக்குனர் கவுதமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மே 19-ந் தேதி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக பந்தநல்லூர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கு தொடர்பாக பந்தநல்லூர் போலீசார் என்னை கைது செய்ய தேடி வருகின்றனர். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நான் உட்பட்டு நடந்து கொள்வேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு, நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
    ×