search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber Crime"

    தென்காசி மாவட்ட போலீசாருக்கு சைபர் கிரைம் புகார்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
    வீ. கே. புதூர்:

    தமிழக காவல் துறையில் புதிதாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக அந்தந்த தலைமையகத்தில் செயல்பட்டு வரும் சைபர் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கின்றனர்.

    பொது மக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தங்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில்  உடனுக்குடன் அளிக்கும்  வகையிலும், நீண்ட தூர பயணம் செய்து தலைமையகத்தில் புகார் அளிப்பதை   தவிர்க்கவும்,பொது மக்களுக்கு உதவியாக அனைத்து காவல் நிலையங்களிலும் புதிதாக சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    அதன்பேரிலும்,  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்  அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் உட்பட 3 சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி  தலைமையில், பொது மக்களிடம் சைபர் கிரைம் புகார்களை பெற்று உடனடியாக ஆன்லைனில் புகாரை அளி ப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    மேலும் சைபர் கிரைம் குற்ற ங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை யினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
    ×