என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.425 கோடியை இழந்த பொது மக்கள்
Byமாலை மலர்17 Oct 2023 4:07 PM GMT
- 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள்.
- 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதில், தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதில், தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
திருடுபோன ரூ.338 கோடியை தமிழக சைபர் கிரைபர் போலீசார் வங்கி மூலமாக முடக்கி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 29,530 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X