search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.425 கோடியை இழந்த பொது மக்கள்
    X

    தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.425 கோடியை இழந்த பொது மக்கள்

    • 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள்.
    • 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

    திருடுபோன ரூ.338 கோடியை தமிழக சைபர் கிரைபர் போலீசார் வங்கி மூலமாக முடக்கி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

    மேலும், 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 29,530 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×