search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம்"

    • விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும்.

    குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:-

    இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை.

    அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

    10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி எல்.ஐ.சி. முகவரிடம் 1 லட்சம் மோசடி செய்த கும்பலை பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    பரமக்குடி அருகே  உள்ள என்.வள்ளியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கரிசாமி (வயது 34). இவர் 10ம் வகுப்பு படித்துவிட்டு பரமக்குடியில்எ ல். ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். 

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி.வி.யில் வந்த ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தினை பார்த்த கரிசாமி அதில் காலணி மற்றும் வாட்ச் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். 

    இந்த நிலையில் கடந்த  16-ந்தேதி பிரபல நிறுவனத்தின் பேரில் கரிசாமிக்கு ஒரு தபால் வந்தது. அதில் இருந்த பரிசு கூப்பனை பிரித்து பார்த்தபோது, அதில் 9 லட்சத்து 50 ஆயிரம் பரிசு விழுந்திருப்பதாகவும்,  அந்த பரிசு தொகையை பெற   விபரங்களை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  அதன்படி அவர் தனத வங்கி எண் விவரங்களை குறிப்பிட்ட செல்வேபோன் எண்ணுக்கு அனுப்பினார்.

    கடந்த 19-ந் தேதி கரிசாமியி டம் பேசிய மர்ம நபர் பரிசுத்தொகையை பெற குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென கூறியிருந்தார். இதனை நம்பி ரூ. 97 ஆயிரத்து 700 யை மோசடி கும்பல் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் தொடர்பை துண்டித்துக் கொண்டது. தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிசாமி இது குறித்து  ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×