என் மலர்

    நீங்கள் தேடியது "mobile app"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
    • அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் தற்போது ரேபிடோ பைக் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

    இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

    சமீபத்தில் ரேபிடோ வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியது. பெண் பயணிகளை மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இவர்கள் அழைத்து செல்கின்றனர். ரேபிடோ பைக் வசதி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மொபைல் செயலிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் இணைக்கப்பட்டு சவாரி ஏற்றப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது.

    பயணிகளுக்கு பாதுகாப்பற்றது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொண்டு பெண்களை பயன்படுத்தி வருவது தவறான முன் உதாரணமாகும். ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

    இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் நாளை தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில் 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த செயலி மூலம் 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது.
    • தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருக்க தேவையில்லாத நிலையுடன், அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.

    இந்த செயலி மூலம் பயணிகள், புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது. அது தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, புறநகர்ப் பகுதிகளில் இந்த தூரம் 2 கி.மீ. தூரத்தில் இருந்து 5 கி.மீ.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தினசரி பாசஞ்சர் ரெயில்களிலும், நீண்டதூர ரெயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

    இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 கி.மீ. தூர கட்டுப்பாட்டை 10 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரெயில்வே நிர்வாகங்கள், அதுகுறித்து ரெயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. #ElectionCommission #CVIGIL #MobileApp
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்திஸ்கர், ஆகிய இடங்களில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    கூகுள் பிளே ஸ்டோர் அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    வேட்பாளர்களோ, அரசியல் வாதிகளோ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதை வாக்காளர்கள் கண்டறிந்தால் புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து அந்த செயலியின் வழியாக தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கலாம்.

    கோப்புப்படம்

    தகவல் கொடுப்பவர் தனது பெயர் விபரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்க விரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

    புகாரின் உண்மைத் தன்மையை பொறுத்து 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அந்த செயலி வழியாகவே தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #CVIGIL #MobileApp
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா மொபைல் செயலியை, 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். #PassportSeva #MEA #SushmaSwaraj
    புதுடெல்லி:

    புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன பாஸ்போர்டுக்கு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘பாஸ்போர்ட் சேவா’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக தேதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

    இந்நிலையில், 2 நாட்களில் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் கம்மெண்ட் செய்திருந்தாலும், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×